குழந்தையை விமான நிலையத்திலேயே ஏற முயன்றபெற்றோர்!
03 Feb,2023
இஸ்ரேலின் டெல் அவிவ் (Tel Aviv) விமான நிலையத்தில் தாயும் தந்தையும் தங்கள் குழந்தையை விட்டுச் சென்றுள்ளனர். அந்தத் தம்பதியின் விவரங்கள் வெளியிடப்படவில்லை.
கடந்த ஜனவரி 31ஆம் தேதி அவர்கள் குழந்தையுடன் பெல்ஜியத்தின் பிரசல்ஸ் (Brussels) நகருக்குப் பயணம் செய்வதற்காக Ben Gurion அனைத்துலக விமான நிலையம் சென்றனர்.
ஆயினும் குழந்தைக்கு விமானப் பயணச் சீட்டு இல்லாததால் அதை அங்கேயே விட்டுவிட்டு அவர்கள் விமானம் ஏற முயன்றனர்.
இந்தச் சம்பவத்தை விமான நிலைய அதிகாரிகள் விளக்கினர்.
"பெல்ஜியக் கடப்பிதழ் கொண்ட தம்பதி குழந்தையுடன் விமான நிலையத்திற்குத் தாமதமாக வந்தனர். அவர்கள் வந்தடைந்தபோது விமானம் ஏறுவதற்கான check-in முகப்பு மூடப்பட்டுவிட்டது. இதனால் அவர்கள் குழந்தையை அதன் இருக்கையில் விட்டுவிட்டு விமானம் ஏற முற்பட்டனர்" என்றனர் அதிகாரிகள்.
காவல்துறை வந்ததும் பிரச்சினை தீர்க்கப்பட்டுக் குழந்தை மீண்டும் தம்பதியிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேற்கொண்டு விசாரணை எதுவும் நடைபெறவில்லை என்று Ryanair விமான நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.
விமானப் பயணங்களுக்கு முன்பதிவு செய்யும்போது குழந்தைகளையும் உடன்சேர்க்கலாம்.
ஒருவழிப் பயணத்தின்போது பெரியவர்களின் மடியில் அமர்ந்து செல்ல குழந்தைகளுக்கு 27 டாலர் கட்டணம் விதிக்கப்படும். ஆனால் முழு இருக்கையும் வேண்டுமென்றால் அதற்கான கட்டணம் செலுத்தப்பட வேண்டும் என்கிறது Ryanair விமான நிறுவனம்.