உங்களுக்கு முகப்பரு தொல்லையா ஒரே நாளில் பலன்
25 Jan,2023
பொதுவாக ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி அனைவரது முகத்திலும் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் அடிக்கடி ஏற்படும்.
இது உடலின் குறிப்பிட்ட பகுதியில் மெலனின் சுரப்பியை அதிகரித்துவிடுவதனால் சருமத்தில் குறிப்பிட்ட பகுதியில் பருக்கள் அதிகம் தோன்றும்.
இதனால் பெரும்பாலானோர் மனஉளைச்சலுக்கு ஆளாகுகின்றனர். இந்த பிரச்சனைக்கு வீட்டில் இருக்கும் எளிய பொருட்கள் கொண்டு தீர்வு காணலாம். அதற்கு வெங்காயம் உதவுகின்றது.
இதனை ஒரு சில பொருட்களுடன் கலந்து போடுவது இன்னும் சிறப்பான பலன்களை தரும். அந்தவகையில் தற்போது இதனை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.
முதலாவது செய்முறை
ஒரு கப் அளவு வெங்காய தோலை எடுத்துக்கொண்டு பிளெண்டரில் அதை போட்டு நன்கு அரைத்து பவுடர் பதத்திற்கு வந்த பின்பு அதில், 1 தேக்கரண்டி தண்ணீர் அல்லது ரோஸ் வாட்டர் சேர்த்து, ஒரு தடிமனான பேஸ்ட் பதத்திற்கு நன்றாக கலக்குங்கள்.
பேஸ்ட் தயாரானதும், அதனை உங்கள் கண்களைத் தவிர்த்து முகத்தில் பிறபகுதிகளில் சமமாகப் தடவவும். சுமார் 5 முதல் 7 நிமிடங்கள் ஃபேஸ் பேக்கை உலர விட்டு பின்பு குளிர்ந்த நீரில் கழுவவும். இதனை வாரத்தில் ஒருமுறை செய்து வர முகப்பருக்கள் நீங்கும்.
இரண்டாவது செய்முறை
வெங்காய தோல்களை தண்ணீரில் 5 அல்லது 7 நிமிடங்கள் வேகவைக்கவும். இதற்கிடையில் ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் 1 முட்டையின் மஞ்சள் கருவை சேர்க்கவும்.
மேலும், 2 தேக்கரண்டி வெங்காயத் தோல் சாறு, மற்றும் 1 டேபிள்ஸ்பூன் வெள்ளரி சாறு சேர்க்கவும். அந்த கலவையை உங்கள் முகத்தில் தடவி 10 நிமிடங்கள் விடவும். அதை தண்ணீரில் கழுவவும். மிகவும் தெளிவான சருமத்தை நீங்கள் பெறலாம்.
மூன்றாவது செய்முறை
சிறிதளவு வெங்காய தோல்களை சூடான நீரில் வேகவைத்து பேரிக்காயை அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும். ஒரு நடுத்தர அளவிலான கிண்ணத்தை எடுத்து, அதில் பேரிக்காய் பேஸ்ட் சிறிதளவு சேர்க்கவும்.
அதனுடன் 3 தேக்கரண்டி பால், மற்றும் 3 தேக்கரண்டி வேகவைத்த வெங்காய தோல் தண்ணீரை சேர்த்துக்கொள்ளுங்கள். அனைத்தையும் ஒன்றாக கலந்து, உங்கள் முகத்தில் தடவவும்.
இதனை 5 நிமிடங்கள் உலர வைத்துவிட்டு பின்பு தண்ணீரில் முகத்தை கழுவுங்கள். உடனடி பலனை பெறலாம்