பிரான்ஸ் இரட்டைக் கொலை வழக்கில்! - இலங்கையர் கைது!
24 Jan,2023
தாயும் மகளும் படுகொலை செய்யப்பட்ட வழக்கு ஒன்றில் இலங்கையைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Saint-Ouen-l'Aumப்ne (Val-d'Oise) நகரில் வசித்த இரு பெண்கள் கடந்த 2021 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். 51 வயதுடைய தாயும், 21 வயதுடைய மகளும் கொலை செய்யப்பட்டிருந்தனர். வேலைக்குச் சென்றிருந்த கணவர் வீடு திரும்பியிருந்த போது வீட்டில் மனைவியும் மகளும் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து, காவல்துறையினரை அழைத்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த காவல்துறையினர் கொலை செய்யப்பட்டவர்களிடம் இருந்து சில மரபணு சான்றுகளை சேகரித்து, அதை அடிப்படையாக கொண்டு குற்றவாளியை தேடி வந்தனர்.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை Rennes (Ille-et-Vilaine) நகரில் வைத்து 27 வயதுடைய நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபருக்கும் காவல்துறையினர் வைத்துள்ள மரபணு சான்றுகளுக்கும் (DNA) தொடர்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள போதும், கைதான நபர் இதனை மறுத்துள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரும் இலங்கையைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது..