ஓட்ஸ் பொங்கல்
தேவையான பொருட்கள்:
ஓட்ஸ்- 1 கப்
பாசிப்பயறு- ண கப்
இஞ்சி- 1 சிறு துண்டு
பெருங்காயத்தூள்- ட டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
நெய் - 2 டீஸ்பூன்
மிளகு, சீரகம் தலா - ண டீஸ்பூன்
பச்சைமிளகாய் – 2
கறிவேப்பிலை சிறிது, முந்திரி பருப்பு - 6.
செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து ஓட்ஸ், பாசிப்பயறைத் தனித்தனியாக வறுக்கவும்.
இஞ்சி தோல் சீவி பொடியாக நறுக்கவும்.
பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். மிளகு, சீரகம் இரண்டையும் ஒன்றிரண்டாகப் பொடிக்கவும். அடுப்பில் குக்கரை வைத்து அதில் ஓட்ஸ், பாசிப்பருப்பு, இஞ்சி, பெருங்காயத்தூள், உப்பு, மற்றும் 3 கப் தண்ணீர் ஊற்றி மூடி 3(அ)4 விசில் வரும் வரை வேக வைத்து இறக்கவும்.
சற்று ஆறியவுடன் குக்கரைத் திறந்து மசித்து விடவும். அடுப்பில் வாணலியை வைத்து நெய் விட்டு சூடானவுடன் அதில் முந்திரி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் பொடித்த மிளகு, சீரகத்தைப் போட்டுத் தாளித்து அதை பொங்கல் மேல் ஊற்றி கிளறி விடவும்.
சுவையான ‘ஓட்ஸ் பொங்கல்’ தயார்.
சிவப்பு அரிசி வெண் பொங்கல்
தேவையானபொருள்கள் :
சிவப்பு அரிசி - ஒரு கப்
பாசிப்பயறு - கால் கப்
மிளகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1ஸ்பூன்
முந்திரி - சிறிதளவு
நறுக்கிய இஞ்சி - 1 ஸ்பூன்
ப.மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - 1 ஸ்பூன்
நெய் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
பாசிப்பருப்பை வெறும் கடாயில் வறுத்துக் கொள்ளவும்.
சிவப்பு அரிசியை 2 மணி நேரம் ஊறவிடவும்.
ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குக்கரில் ஊறவைத்த அரிசி, பாசிப்பயறு, 3 டம்ளர் தண்ணீர், உப்பு சேர்த்து 4 விசில் வைத்து வேக வைத்து இறக்கவும்.
கடாயில் எண்ணெய், நெய் விட்டு சூடானதும், மிளகு, சீரகம், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய இஞ்சி, ப.மிளகாய், முந்திரி சேர்த்து தாளித்த பின்னர் வேக வைத்த அரிசி - பருப்பு கலவையில் சேர்த்துக் கிளறி இறக்கி பரிமாறவும்.
சத்து நிறைந்த சிவப்பு அரிசி பொங்கல் தயார்.
மசாலா பொங்கல்
தேவையான பொருட்கள்:
அரிசி - 2 டம்ளர்
மைசூர் பருப்பு - ட டம்ளர்
பாசிப்பயறு - ட டம்ளர்
வெங்காயம் - 1(நறுக்கியது)
தக்காளி - 1(நறுக்கியது)
பச்சை மிளகாய் – 6
க.பட்டை, கிராம்பு – சிறிதளவு
புதினா, கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - 1 டீஸ்பூன்
நெய் - 2 தேக்கரண்டி
முந்திரி – 10
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து தக்காளி, வெங்காயத்தை லேசாக வதக்கி அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் சிறிது நெய் விட்டு அரிசி, பாசிப்பயறை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து சிறிது நெய் விட்டுக் காய்ந்ததும் க.பட்டை, கிராம்பு போட்டு வதக்கி, பிறகு அரைத்த தக்காளி, வெங்காய விழுது, இஞ்சி-பூண்டு விழுதுச் சேர்க்கவும்.
நன்றாக வதங்கிய பின் பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி சேர்த்து நன்றாக வதக்கவும்.
கொதிக்கும் தக்காளி, வெங்காயக் கலவையில் 1 டம்ளர் அரிசிக்கு 2 டம்ளர் தண்ணீர் என்ற கணக்கில் சேர்த்து அதில் வறுத்த அரிசி, பாசிபருப்பு, மைசூர் பருப்பைப் போட்டு தேவையான அளவு உப்பு, மஞ்சள் பொடிச் சேர்த்து வேக வைக்கவும்.
நன்றாக வெந்ததும் வாணலியில் நெய் விட்டு அடுப்பில் வைத்து காய்ந்ததும் கடுகு, சீரகம், முந்திரி தாளித்துப் பொங்கலில் கொட்டவும்.
சுவையான ‘மசாலா பொங்கல்’ தயார்.
காய்கறிப் பொங்கல்
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1 கப்
பாசிப்பயறு - ண கப்
பெரிய வெங்காயம் – 1
தக்காளி - 1
வேகவைத்த பச்சை பட்டாணி - 1 கப்
கெரட்- 1
இஞ்சி- 1 துண்டு
கறிவேப்பிலை – சிறிது
நெய் - 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - ண ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
தாளிக்க:
மிளகு, சீரகம் - தலா 1 டீஸ்பூன்
க,பட்டை - 2 துண்டு
கிராம்பு – 4
ஏலக்காய் – 3
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 1 ஸ்பூன்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் அரிசி, பருப்பை ஒன்றாக அலம்பி 6ண கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் சேர்த்து, அடுப்பில் சிறு தீயில் வேகவிடவும்.
பாதியளவு வெந்ததும் நெய், பெருங்காயம், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து வேகவிடுங்கள்.
அடுப்பில் வாணலியை வைத்து நெய், எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் க.பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகு, சீரகம் தாளித்து, பின் நறுக்கிய வெங்காயம், இஞ்சி சேர்த்து வதக்கி பின் நறுக்கிய காய்கறி கலவையை சேர்த்து தக்காளி, உப்புச் சேர்த்து சிறு தீயில் நன்கு வதக்கி, 5 நிமிடம் கழித்து காய்கள் நன்றாக வதங்கியதும் பொங்கலில் சேர்த்து நன்கு கிளறி பரிமாறவும்.
கம கம காய்கறிப் பொங்கல் தயார்.