இன்றைய காலத்தில் என்னதான் அறிவியல் வளர்ச்சி அதிகரித்து காணப்பட்டாலும், கூடவே மூட நம்பிக்கை சார்ந்த விஷயங்களும் வளர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இதனால், பலர் பூனையைக் கண்டால், சிறிது நேரம் நின்று, வேறு யாராவது அப்பாதையைக் கடந்து சென்றவுடன் தாங்கள் செல்கிறார்கள்.
அதேபோன்று, நாம் வெளியே கிளம்பும்போது பூனை குறுக்கே வந்து விட்டால் அதை அபசகுனம் என்று சொல்வார்கள். உடனடியாக மீண்டும் வீட்டிற்கு வந்து தண்ணீர் குடித்துவிட்டு, சிறிது நேரம் அமர்ந்து ஓய்வு எடுத்து விட்டு, அதன் பின்பு மீண்டும் நம் வேலையை தொடர்வோம்.
பூனை நமது இடபுற பாதையை மறைத்து, வடபக்கமாகப் போவதுதான் பொதுவாக அபசகுனமாகப் பார்க்கப்படுகின்றது. ஆனால் உண்மை என்னவென்றால், எந்த சூழ்நிலையிலும் பூனை நம் பாதையில் குறுக்கே வந்தால், அது எந்த தீங்கையும் விளைவிப்பதில்லை. மேலும் பூனையால் பல நல்ல பலன்களும் ஏற்படுகின்றன என்று கூறப்படுகிறது.
பூனை ஒரு வீட்டிற்குள் குட்டி போட்டால், அது நல்லது வீட்டில் செல்வம் பெருகும் என்று கூறப்படுகிறது.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒருவரது ஜாதகத்தில் ராகுவின் பார்வையும் நிலையும் நன்றாக இருக்கவில்லை என்றால், அவர் வீட்டில் பூனையை வளர்ப்பது நல்ல பரிகாரமாகக் கருதப்படுகின்றது.
அதேபோன்று, வீட்டில் பூனை முடியை சிவப்பு துணியில் கட்டி உடன் வைத்திருந்தால், காலசர்ப தோஷம் கண் திருஷ்டி, பில்லி சுனியம் நீங்கும் என்று கூறப்படுகிறது.
பூனைகள் வீட்டிற்குள் நுழைந்து பாலை குடிப்பது, உங்கள் பண வருவாய்க்கான அறிகுறியாகும்.
இதனால், வண்டியை ஓட்டி செல்பவர்களும் சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு, தண்ணீர் பருகிவிட்டு அதன் பின்பு தங்களுடைய பயணத்தை தொடர்வார்கள். இந்தப் பழக்கம் தான் காலப்போக்கில் மாறி மாறி பூனை குறுக்கே வந்தால் அபசகுனம். தண்ணீர் குடித்துவிட்டு, ஓய்வு எடுத்து விட்டு செல்ல வேண்டும் என்று இன்றுவரை நம்பப்படுகிறது.
பூனை சகுனத்தில் மறைந்திருக்கும் ரகசியம்:
நம்முடைய முன்னோர்களின் காலத்தில், இருட்டில் பயணம் செய்யும்போது எதிரே பூனை வந்தால், அவற்றின் கண்கள் மட்டும் வண்டியை ஓட்டி செல்பவர்களின் கண்களுக்கு தனியாக தெரியும். பூனையின் கண்களை பார்த்து வண்டியில் பூட்டி வைத்திருக்கும் மாடு அல்லது குதிரை பயந்து மிரண்டு விடுமாம்.