9 பேரை எப்படி எல்லாம் போட்டுத் தள்ளினார் புட்டின் ?
30 Sep,2022
உக்கிரைன் நாட்டோடு போர் ஆரம்பித்து 6 மாதம் முடிந்துள்ள நிலையில். போர் தொடர்பாக எதிர் கருத்துகளை தெரிவித்த 8 பேர் இதுவரை தற்கொலை செய்துகொண்டுள்ளார்கள். இவர்கள் அனைவரும் ரஷ்ய அதிபர் புட்டினை குற்றம் சொன்ன நபர்கள். 6 மாதத்தில் எப்படி இந்த 8 பேரும் தற்கொலை செய்து இறந்தார்கள் ? இது இவ்வாறு இருக்க மேலும் 1 நபர் நேற்றைய தினம்(29) தற்கொலை செய்து கொண்டார் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. எப்படி 9 பேர் தற்கொலை செய்திருக்க முடியும் ? ஆனால் தற்கொலை செய்து கொண்டது போல , காட்டி இருக்கிறார்கள் என்பதே உண்மை.
2 பேர் தன்னை தானே சுட்டுக் கொண்டார்கள். மேலும் 2 பேர் தன்னை தானே கத்தியால் குத்தி இறந்து விட்டார்கள். அதிலும் 2 பேர் தூக்கிட்டு தற்கொலை என்கிறார்கள். ஒருவர் ஜன்னல் வழியாக குதித்து தற்கொலை என்கிறார்கள். ஒருவர் கப்பலில் இருந்து குதித்து தற்கொலை. மற்றும் ஒருவர் கேவலம் படியில் தவறி விழுந்து இறந்து விட்டார் என்கிறார்கள். இவை அனைத்தும் 6 மாதங்களில் எப்படி நடந்தது என்பது புட்டினுக்கு மட்டுமே வெளிச்சம். ஆனால் இத்தனை கொலைகளில் சிலவற்றை தற்கொலை என்றும், சிலது தற்செயலாக நடந்த உயிரிழப்பு போலவும் புட்டின் காட்டியுள்ளார். Source : MOSCOW MYSTERY Putin critic found dead after ‘suicide’ in ninth suspicious death among Russian execs linked to Ukraine war.