அந்தப் பொண்ணை நாசம் பண்ணிட்டாங்க என மருத்துவமனை ஊழியர் பேசியதாக என நக்கீரன் வெளியிட்டுள்ள ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிகாலை 3 மணிக்கு ஸ்ரீமதி உடல் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது என்று அந்த ஆடியோவில் பேசுகின்ற பெண் கூறியுள்ளார்.
அந்தப் பொண்ணை நாசம் பண்ணிட்டாங்க என மருத்துவமனை ஊழியர் பேசியதாக என நக்கீரன் வெளியிட்டுள்ள ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிகாலை 3 மணிக்கு ஸ்ரீமதி உடல் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது என்று அந்த ஆடியோவில் பேசுகின்ற பெண் கூறியுள்ளார். இது மாணவியின் மரண விஷயத்தில் பல சந்தேக கேள்விகளை கிளப்பியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் படித்து வந்த கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். கடந்த 13ஆம் தேதி அம்மாணவி பள்ளிக்கூட மேம் தளத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்தது இதையடுத்து அவரது பெற்றோர்கள் கொடுத்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர், பின்னர் மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுந்த போராட்டத்தை அடுத்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. பின்னர் மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக பள்ளியில் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா உள்ளிட்ட 5 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், மாணவி தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும், அவரை அடித்து கொலை செய்துவிட்டு பள்ளி நிர்வாகம் உண்மையை மறைக்கிறது என்றும், மாணவியின் பெற்றோர்கள் தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர். பள்ளியை பூட்டி சீல் வைக்கும் வரை மாணவியின் உடலைப் பெற்றுக் கொள்ள மாட்டோம் என அவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர், இதற்கிடையில் ஆயிரக்கணக்கானோர் பள்ளியை முற்றுகையிட்டு பள்ளி மீது தாக்குதல் நடத்தியதுடன், வாகனங்கள் தீக்கிரையாயினர், இந்த கலவரத்தில் 50-க்கும் அதிகமான போலீசார் காயமடைந்துள்ளனர், இதில் 300க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவி உயிரிழந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மாணவி தற்கொலைதான் செய்து கொண்டார், காலையில் வாட்ச்மேன் பார்த்துச் சொன்ன பிறகுதான் தங்களுக்கு தெரியவந்தது, உடனே காவல்துறை, ஆம்புலன்ஸ் என எல்லோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், உடனே பெற்றோர்களுக்கும் தகவல் கூறியதாகவும், இதில் மறைக்க ஏதும் இல்லை என்றும், பள்ளி நிர்வாகத்தினர் கூறிவருகின்றனர்.ஆனால் மாணவி விழுந்த இடத்தில் எந்த ரத்தக் கரையும் இல்லை, எத்தனை மணிக்கு தற்கொலை செய்துகொண்டார் என்ற தகவல் இல்லை, எந்த இடத்தில் விழுந்தார் என்ற தகவலை கூட பள்ளிக்கூட நிர்வாகம் சரியாக சொல்ல மறுக்கிறது. மொத்தத்தில் இது கொலை தான் என அவரது பெற்றோர்கள் அடித்துக் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் மாணவியின் உடற்கூறு ஆய்வில் மாணவிக்கு சந்தேகத்துக்கிடமான சில காயங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இரண்டாவது உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டுள்ளது, அதற்கான முடிவுக்காக பெற்றோர்கள் காத்திருக்கின்றனர், இந்நிலையில் பிரபல புலனாய்வு பத்திரிகையான நக்கீரன் இரண்டு ஆடியோக்களை வெளியிட்டுள்ளது.
அந்த ஆடியோவில் இடம்பெற்றுள்ள தகவல் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. அதில் இரண்டாவதாக பேசும் ஆடியோ ஸ்ரீமதி பிணமாக கொண்டுவரும்போது பார்த்த மருத்துவமனையின் பெண் ஊழியரின் ஆடியோ, ஸ்ரீமதியின் உடலை நேரில் பார்த்த அந்த மருத்துவமனை ஊழியர் ஸ்ரீமதியின் உடல் எத்தனை மணிக்கு மருத்துமனைக்கு கொண்டு வரப்பட்டது, எப்படி கொண்டுவரப்பட்டது, வந்தபோது மாணவியின் உடல் எந்த நிலையில் இருந்தது என்பது குறித்து அதில் கூறியுள்ளார்.
அவர் பேசியுள்ளார் ஆடியோ விவரம் பின்வருமாறு:- அந்தப் பொண்ணு உடல் விடியற்காலை 3.30 மணிக்கெல்லாம் வந்துவிட்டது. ஆம்புலன்ஸ் எல்லாம் எதுவும் வரல, பள்ளிக்கூட காரில்தான் தூக்கிட்டு வந்து போட்டுட்டுப் போய்டாங்க, அதில் இரண்டு பசங்க இருந்தாங்க, ஹாஸ்பிடல்ல போட்டுட்டு அவங்க நிக்ககூட இல்ல வேகமா கிளம்பி போய்ட்டாங்க, அதுக்கு பிறகுதான் அவங்க அப்பா அம்மாவுக்கு தகவல் சொல்லி அவங்க காலில 6 மணிக்கு மேல வந்தாங்க, அங்கிருந்த டாக்டர் பார்த்துட்டு எல்லாம் முடிஞ்சு போச்சு 5 மணி நேரத்திற்கு முன்னாடியே முடிஞ்சு போச்சு சொன்னாரு எனக் கூறுகிறார்.
அந்த பெண்ணிடம் எதிர்முனையில் பேசும் நபர், போஸ்ட்மார்ட்டம் பண்ணும்போதே நேரில் பார்த்தீயாம்மா? உடலில் ஏதாவது தழும்பு காயம் இருந்ததா? நேரடியாக தான் பார்த்தேன்ணா, தழும்பு எல்லாம் இருந்தது...
எல்லாத்தையும் மூடி மறைத்து விட்டார்கள் இல்லம்மா... ஆமா அண்ணா..
நீ என்னம்ம நினைக்கிற? எல்லாரும் சொல்வது உண்மைதான் அண்ணா..
அந்த பொண்ணை நாசம் பண்ணிட்டானுங்க இல்லம்மா? எனக்கேட்க அந்த ஊழியர், ஆமா அண்ணா.. அந்த பெண்ணாக தற்கொலை செய்துகொள்ள கிடையாது, நம்ம பிள்ளைகளுக்கு நடந்தாலும் இதே கதிதான், இதெல்லாம் கவலைதான் இருக்கு, யாரையும் நம்பி இனிமே எங்கியும் அனுப்ப முடியாது. இவ்வாறு அந்த உரையாடல் இருக்கிறது.