பக்கத்து வீட்டு பூ மரத்திற்கு தண்ணீர் விட்டார் என்று கறுப்பின பாதிரியை கைது செய்த அமெரிக்க பொலிஸார் !
25 Aug,2022
இலங்கையை கூட மன்னித்து விடலாம், ஆனால் அமெரிக்காவில் இன வெறி தலை விரித்து ஆடுகிறது என்று சொல்லும் அளவு கடந்த சில வருடங்களாக நிலமை உள்ளது. அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில், மைக்கல் ஜென்னிங்ஸ் என்ற ஆபிரிக்க பாதிரியார் வசித்து வந்தார். அவரது வீட்டுக்கு பக்கமாக உள்ள வீட்டில் வசித்து வந்த குடும்பம் விடுமுறைக்காக வேறு ஒரு நாட்டுக்குச் சென்றுவிட்டார்கள். அந்த வீட்டில் உள்ள பூக்கள் வாடிப் போய் விடும் என்று அவர், வீட்டுக்கு வெளியே நின்ற செடி கொடிகளுக்கு தண்ணீர் விட்டுள்ளார். ஆனால் அதனை ஒரு காரணமாக காட்டி, பொலிசார் அவரை கை விலங்கிட்டு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி உள்ளார்கள் என்றால் பாருங்களேன். தற்போது குறித்த ஆபிரிக்க பாதிரியார், பொலிசாருக்கு எதிராக மான நஷ்ட வழக்கை தொடர்ந்துள்ளார்.