17 வயது சிறுமியை விடிய விடிய.. லாரி ஓட்டுநர் செய்த கொடூரம்..
13 Jul,2022
சீர்காழி சட்டநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ஐயாபிள்ளையின் மகன் பாலா(வயது 41). இவர் லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.
வேளாங்கண்ணி :
பின்னர் அந்த சிறுமியை வேளாங்கண்ணிக்கு கூட்டி செல்வதாக கூறி, கூட்டி சென்றுள்ளார். அங்கு லாட்ஜில் அறை எடுத்து சிறுமியுடன் தங்கியுடன் தங்கியுள்ளார். அப்போது, சிறுமியிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி திருமணம் செய்து கொள்கிறேன் எனக்கூறி சிறுமியுடன் பாலா பலமுறை உடலுறவு கொண்டுள்ளார்.
கடைசி வரை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறி விடிய விடிய அந்த பெண்ணை தனது காம இச்சைக்கு பயன்படுத்தி இருக்கிறான். பின்னர் சிறுமியை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளான். அதன் பின்னர், மறுநாள் அந்த சிறுமி பாலாவிற்கு போன் செய்ததில் பாலா போன் எடுக்கவில்லை. மீண்டும் மீண்டும் முயற்சி செய்தும் எடுக்காததால், வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து சிறுமி குடித்துவிட்டதாக கூறப்படுகிறது.
அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அக்கம்பக்கத்தினர் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறுமியிடம் நன்னிலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரை பெற்றுக்கொண்டு பாலாவை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமி யாருடைய ஆதரவில் இருந்து வருகிறார்? அவருக்கும் லாட்டரி டிரைவருக்கும் எப்படி பழக்கம் ஏற்பட்டது என்பதை குறித்து தொடர்ந்து விசாரணையும் நடந்து வருகிறது.