வீட்டில் தனியாக இருக்கும் பெண்களே பெரும்பாலும் தவறான பாதைக்கு செல்வதாகவும், தனிமையில் உள்ள ஆண்களோ பெண்ளோ எளிதில் சபலத்திற்கு ஆளாவதாகவும் மனநல நிபுணர் டாக்டர் ஷாலினி
வீட்டில் தனியாக இருக்கும் பெண்களே பெரும்பாலும் தவறான பாதைக்கு செல்வதாகவும், தனிமையில் உள்ள ஆண்களோ பெண்ளோ எளிதில் சபலத்திற்கு ஆளாவதாகவும் மனநல நிபுணர் டாக்டர் ஷாலினி தெரிவித்துள்ளார்.
சமூகத்தில் கள்ளக்காதல் சம்பவங்கள் பரவலாக அதிகரித்து வருகிறது, அதிலும் பெரும்பாலான கொலை, தற்கொலைகள் கள்ளக் காதலை மையமாக வைத்தே அரங்கேறி வருவதை பார்க்க முடிகிறது. இந்த கள்ளக்காதல் விவகாரம் எதனால் எப்படி ஏற்படுகிறது? அதில் பெண்கள் எப்படி சிக்குகிறார்கள் என்பது குறித்து பல்வேறு கேள்விகள் இருந்து வருகிறது. இந்த விவகாரம் சமூக பிரச்சனை மட்டும் அல்ல மன நிலையைச் சார்ந்தது என்ற பார்வையும் உள்ளது. அந்த வகையில் மனநல மருத்துவர் டாக்டர் ஷாலினி குடும்பப் பெண்கள் தனிமையில் உள்ள பெண்களே பெரும்பாலும் திருமணத்தை மீறிய உறவுக்கு ஆட்படுவதாகவும், அதற்கான காரணத்தையும் விளக்கியுள்ளார்.
இதுதொடர்பாக யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியின் விபரம் பின்வருமாறு:- வேலைக்குச் செல்லும் பெண்களை காட்டிலும் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இது போன்ற உறவுகள் ஏற்படுகிறது, வீட்டில் இருக்கும் பெண்கள் அதிக அளவில் ஏன் இதுபோன்ற உறவுகளில் சிக்குகிறார்கள் என்றால், யாராவது ஒரு மிஸ்டுகால் கொடுத்தால் கூட அவர்கள் அதில் பல மணி நேரம் பேசுகிறார்கள் என்றால், யாராவது மிஸ்டு கால் கொடுத்தால், எனக்கு வேலை இருக்கிறது என கூறி விட்டு இரண்டொரு வார்த்தையில் போனை ஏன் வைப்பது இல்லை என்றால், அவர்கள் நான்கு சுவற்றுக்குள் முடங்கி கிடப்பதால்தான், அவர்கள் தனிமையில் இருப்பதால்தான் யாரிடமாவது பேச வேண்டும் என்ற எண்ணம் அவர்களை அறியாமலேயே அவர்களுக்குள் இருப்பது தான் அதற்கு காரணம்.
பெண்கள் எப்போதும் தனிமையில் தனிமையில் இருக்கக் கூடாது, எப்போதும் அவர்கள் தங்களை வேறு ஏதாவது வேலையில் ஈடுபடுத்திக்கொண்டேயிருக்க வேண்டும். ஏதாவது வேலைக்கு செல்லலாம், அல்லது வகுப்புகளுக்கு செல்லலாம், தங்களைத் தாங்களே மேம்படுத்திக்கொள்ள வேண்டிய செயல்களில் ஈடுபடலாம், பெண்கள் வேலை நிமித்தமாக பிஸியாக இருக்கும் போது அவர்களுக்கு பேசுவதற்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும், என் உடன் வேலை செய்பவர்களிடம் பேசுகிறேன், என்னுடைய அதிகாரியிடம் பேசுகிறேன், என உடன் பணியாற்றும் ஊழியரிடம் பேசுகிறேன் என அந்தப் பேச்சு அத்துடன் முடிந்துவிடும். வேலைக்குச் செல்கிற அல்லது படிக்கிற பெண்களுக்கு இதற்காக தனியாக ஒரு உறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் வருவதில்லை.
அவர்களுடன் பேசவேண்டும் இவர்களுடன் பேச வேண்டும் போன்ற பிரச்சனைகளே வருவது இல்லை, அதில் அவர்கள் சிக்குவது இல்லை, ஆனால் தனிமையில் உள்ள பெண்களுக்கு அப்படியல்ல, யாராவது தன்னிடம் பேசுவார்களா என எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு யாராவது ஒரு மிஸ்டுகால் கொடுத்தால் கூட அவர்களிடம் அவர்கள் பலமணிநேரம் பேசுகிறார்கள். அப்போதுதான் பிரச்சனை வருகிறது, பெண்கள் வேலைக்குப் போகும்போது அவர்களிடம் பேசுவதற்கு நிறைய பேர் இருப்பார்கள், எனவே வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அந்தத் தேவை அங்கேயே தீர்ந்துவிடுகிறது.
அவர்கள் வேலையை விட்டு வரும்போதே டயர்டாகி விடுகிறார்கள், வீட்டுக்கு வந்து தேவையானதை செய்து விட்டு உறங்கச் சென்று விடுவார்கள். ஆனால் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பிரச்சினை என்னவென்றால், அவர்கள் யாருடனும் பேசுவது இல்லை, அவர்கள் எப்போதும் டயார்டாவதே இல்லை, ஆனால் கணவர் வேலையில் இருந்து வந்தவுடன் டயர்டாக வருகிறார், எனவே இது போன்ற ஜோடிகள் மத்தியில் அதிருப்தி வர வாய்ப்புகள் அதிகம். காதல் என்பது இரண்டு புறமும் சமமாக இருந்தால் அது அபிவிருத்தி ஆகிக்கொண்டே இருக்கும், நான் மட்டும்தான் அன்பை முதலீடு செய்கிறேன், எதிரில் இருப்பவர் அதை முதலீடு செய்வதில்லை என்றால், அது ஒரு கட்டத்தில் முறிந்து விடும். பொதுவாக பெண்கள் அதிக அளவில் அன்பை காட்டுவார்கள். அதே போல ஆண்களும் ஆரம்பத்தில் அதிக அன்பு கொடுப்பார்கள். ஆனால் நாளடைவில் அந்த அன்பு குறைந்து விடும்.
ஆரம்பத்தில் அதிக அன்பு செலுத்தும் ஆண்கள் போகப்போக அதை குறைத்துக் கொள்கிறார்கள், மனைவியிடம் எப்படி இருக்கிறாய்.. சாப்பிட்டாயா? நேற்று தலைவலி என்றாயே இப்போது எப்படி இருக்கிறது? என்றெல்லாம் விசாரிப்பதே இல்லை. கணவன் மனைவிக்கு இடையே ஒரு அன்பு பரிமாற்றம் அல்லது அக்கறை போன்றவை குறைந்து வருகிறது. ஆரம்பத்தில் ஆண்கள் தங்கள் துணையிடம் அதிகம் பேசியிருப்பார்கள், தனக்கு பிடித்தது, பிடிக்காதது, சிறு வயதில் நடந்தது என எல்லாவற்றையும் சொல்லி பேசியிருப்பார்கள். ஆனால் போகப் போக அது குறைந்து விடும். ஒரு கட்டத்தில் பேசுவதற்கு விஷயமேயின்றி வறட்சி நிலை ஏற்படும். அப்போது தான் ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி வெளி நபர்கள் மீது சபலம் வர ஆரம்பிக்கிறது.
அந்த சம்பலத்தை எப்படி எதிர்கொள்வது, கையாளுவது என்பது குறித்து வெளிப்படையாக யாரும் பேசுவதே இல்லை, தனித்தனியாக அவர்களே முயற்சி செய்கிறார்களே தவிர பொதுப்படையாக சபலம் என்பது வரும், அதை எப்படி சரி செய்து கொள்ள வேண்டும் என்ற விவாதமே இல்லை. அதனால்தான் இத்தனை பிரச்சனைகள் வருகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.