உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பின் 13ஆம் நாள்

08 Mar,2022
 

 
 
ரஷ்யாவின் எண்ணெய் வர்த்தகத்தில் மேற்கத்திய நாடுகள் தடையை முன்னெடுத்தால், ஜெர்மனிக்கான முக்கிய எரிவாயுக் குழாய் மூடப்படலாம் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது.
 
 
 
இது தொடர்பாக ரஷ்யாவின் துணை பிரதமர் அலெக்சாண்டர் நோவக் கூறுகையில், ‘ரஷ்ய எண்ணெய் வர்த்தகத்தை நிராகரிப்பது, உலக சந்தையில் பேரழிவு விளைவுகளுக்கு வழிவகுக்கும். இதனால் விலை இரண்டு மடங்குக்கும் மேலாக, ஒரு பீப்பாய் 300 டொலராக உயர வாய்ப்புள்ளது’ என கூறினார்,
 
ரஷ்யாவிடம் இருந்து பெறும் எரிவாயுவுக்கு அமெரிக்காவின் தடை ஆலோசனையை ஜேர்மனி மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் நிராகரித்துள்ளன.
 
ஐரோப்பிய ஒன்றியம் அதன் மொத்த எரிவாயுவில் 40 சதவீதம் மற்றும் அதன் எண்ணெய் கொள்முதலில் 30 சதவீதம் ரஷ்யாவிடமிருந்துதான் பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
——————————————————————————————————————————————————-
தலைநகர் கீவ்வின் அண்டை நகரான ஹாஸ்டோமல் நகர மேயர் யூரி புரைலிப்கோ உணவு மற்றும் மருந்துகளை கொடுத்து உதவுவதற்காக வெளியே வந்தபோது துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளார்.
 
 
 
அதேபோல, கார்கிவ் அருகே ரஷ்ய மேஜர் ஜெனரல் விட்டலி ஜெராசிமோவை உக்ரைன் படைகள் கொன்றதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகத்தின் உளவுத்துறை தலைமை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
 
ஜெனரல் ஜெராசிமோவ் ஒரு மூத்த ராணுவ அதிகாரி, இரண்டாவது செச்சென் போரில் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
——————————————————————————————————————————————————-
உக்ரைனில் கடந்த 24ஆம் திகதி போர் தொடங்கியதில் இருந்து 12 நாட்களில், 17இலட்சத்து 35 ஆயிரம் பேர் அகதிகளாக வெளியேறி உள்ளதாக ஐ.நா. அகதிகள் முகமை தெரிவித்துள்ளது.
——————————————————————————————————————————————————-
ரஷ்யாவில் அனைத்து வணிக நடவடிக்கைகளையும் நிறுத்தி உள்ளதாக அமெரிக்க பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான ஐ.பி.எம். (சர்வதேச வணிக இயந்திரங்கள்) அறிவித்துள்ளது.
 
 
 
முன்னணி அமெரிக்க கணினி உற்பத்தியாளரான ஐ.பி.எம்., அமெரிக்காவிலும் வெளிநாட்டிலும் சந்தையின் பெரும் பங்கைக் கொண்டுள்ளது.
——————————————————————————————————————————————————-
 
ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் வாங்குவதற்கு தடை விதிப்பது குறித்த எந்த ஒரு முடிவையும் இது வரை ஜனாதிபதி ஜோ பைடன் எடுக்கவில்லை என வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் ஜென் சாக்கி தெரிவித்துள்ளார்.
 
ஆனால், எங்கள் உள்வட்டாரங்களிலும், பிற ஐரோப்பிய நட்பு நாடுகளுடனும் அது பற்றிய ஆலோசனைகள் நடைபெறுகின்றன. கச்சா எண்ணெய் விலையை கட்டுக்குள் வைக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என்று அவர் மேலும் தெரிவித்தார்.
——————————————————————————————————————————————————-
மனிதாபிமான அடிப்படையில் பொதுமக்களை வெளியேற்றுவதை ரஷ்ய ராணுவம் தடுத்ததாக உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார்.
 
 
 
தெற்கு உக்ரைனில் முற்றுகையிடப்பட்டுள்ள மரியுபோல் நகருக்கு உணவு மற்றும் மருந்துகளை கொண்டு வருவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட வீதியை ரஷ்ய படைகள் தகர்த்துள்ளது என்று அவர் கூறினார்.
ஆனாலும், சமாதான உடன்படிக்கையை எட்டுவதற்கு ரஷ்யாவுடன் தொடர்ந்து உக்ரைன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.
 
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பின் 12ஆம் நாள் கள நிலவரம்!
 
மத்திய உக்ரைனில் உள்ள டினிப்ரோ நகரை சுற்றி வளைக்க ரஷ்யா ஆயுத வளங்களை பெருக்கி வருகிறது என்று உக்ரைனின் தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு சபையின் செயலாளர் ஓலெக்ஸி டானிலோவ் தெரிவித்துள்ளார்.
 
——————————————————————————————————————————————————-
 
ஐரோப்பிய ஒன்றியம் உக்ரைனில் இருந்து வரும் “ஐந்து மில்லியன் அகதிகளை வரவேற்க தயாராக வேண்டும்” என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் பிரதிநிதி ஜோசப் பொரெல் கூறினார்.
 
——————————————————————————————————————————————————-
 
 
 
ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபாவை துருக்கியின் அன்டலியாவில் வியாழக்கிழமை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
உக்ரைன் மீதான ரஷ்யா தனது ஆக்கிரமிப்பைத் தொடரும் நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.
 
——————————————————————————————————————————————————-
உக்ரைனில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து ரஷ்ய ஜனாதிபதி; விளாடிமிர் புட்டினிடம் விசாரணை நடத்தப்படும் என்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ஐசிசி) தலைமை வழக்கறிஞர் கரீம் கான் அறிவித்துள்ளார்.
 
2014ஆம் ஆண்டிலிருந்து உக்ரைனில் போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை தலைமை வழக்கறிஞர் கரீம் கான், விசாரித்து வருகிறார்.
 
கடந்த வார தொடக்கத்தில், உக்ரைனில் நடந்த அனைத்து புதிய சந்தேகக் குற்றங்களும் விசாரணையில் சேர்க்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
 
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஹேக்கில் உள்ள நிரந்தர சர்வதேச குற்றவியல் நீதிமன்றமாகும். நீதிமன்றத்தின் உறுப்பினர்களில் 123 நாடுகள் அடங்கும்.
 
 
 
அதன் சட்டப்பூர்வ அடிப்படையானது 1998 இன் ரோம் சட்டமாகும், மேலும் இது நான்கு முக்கிய குற்றங்களுக்கு பொறுப்பாகும். அவையாவன, இனப்படுகொலை, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு குற்றங்கள் ஆகும்.
 
——————————————————————————————————————————————————-
 
உக்ரைனிய நகரங்களில் இருந்து ரஷ்யா மற்றும் பெலாரஸ் வரையிலான மனிதாபிமான வழித்தடங்களைத் திறக்குமாறு புடினிடம் இம்மானுவேல் மக்ரோன் கேட்கவில்லை என்று பிரான்ஸ் ஜனாதிபதியின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
 
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) புடின் மற்றும் மக்ரோன் தொலைபேசியில் பேசிய பிறகு, கார்கிவ், கீவ், மரியுபோல் மற்றும் சுமியிலிருந்து மனிதாபிமான வழித்தடங்களைத் திறப்பதாக ரஷ்யா அறிவித்தது.
 
இது பிரான்ஸ் ஜனாதிபதியின் தனிப்பட்ட கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.
 
ஆனால், எலிசி அரண்மனை அப்படி எந்த கோரிக்கையும் வைக்கப்படவில்லை என்று கூறியுள்ளது.
 
அதற்கு பதிலாக மக்ரோன், சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் மரியாதை, குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் உதவி வழங்கல் ஆகியவற்றை வலியுறுத்தினார் என தெரிவித்துள்ளது.
 
——————————————————————————————————————————————————-
 
உக்ரைனின் தகவல் தொடர்பு வசதிகளை ரஷ்யா வேண்டுமென்றே குறிவைப்பதாக பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
 
 
உக்ரைனிய குடிமக்களின் நம்பகமான செய்திகள் மற்றும் தகவல்களுக்கான அணுகலைக் குறைப்பதற்காக உக்ரைனின் தகவல் தொடர்பு உள்கட்டமைப்பைக் குறிவைத்திருக்கலாம் என பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
 
கடந்த வாரம் தலைநகர் கீவ்வில் இதேபோன்ற தாக்குதலைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை கார்கிவில் உள்ள தொலைக்காட்சி கோபுரத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது.
 
——————————————————————————————————————————————————-
 
தாய்வானை நோக்கிய அதன் மூலோபாயத்தை மதிப்பிடுவதற்கு உக்ரைனில் நடக்கும் நிகழ்வுகளை சீனா உன்னிப்பாக கவனித்து வருவதாக தாய்வானின் வெளியுறவு அமைச்சர் ஜோசப் வூ கூறினார்.
 
‘உக்ரைனில் நடப்பதை நாங்கள் பார்க்கும்போது, தாய்வானுக்கு சீனா என்ன செய்யக்கூடும் என்பதையும் நாங்கள் மிகவும் கவனமாகப் பார்த்து வருகிறோம்’ என கூறினார்.
 
——————————————————————————————————————————————————-
 
ரஷ்ய எரிசக்தி விற்பனைக்கு தடை விதிக்க லிதுவேனியாவின் வெளியுறவு அமைச்சர் கேப்ரியலியஸ் லாண்ட்ஸ்பெர்கிஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
 
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கனுடன் ஒரு கூட்டு ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
 
இத்தாலியப் பிரதமர் மரியோ ட்ராகி, பிரஸ்ஸல்ஸில் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயனைச் சந்தித்து, இத்தாலியின் தற்போதைய ரஷ்ய எண்ணெய் இறக்குமதி சார்ந்திருப்பது குறித்தும், இத்தாலியின் தற்போதைய எரிசக்தி விநியோகத்தை பல்வகைப்படுத்த என்ன செய்யலாம் என்பது குறித்தும் விவாதிக்கிறார்.
 
 
 
ரஷ்யாவின் எண்ணெய் இறக்குமதி கட்டுப்பாடுகளால் பெரிதும் பாதிக்கப்படும் ஐரோப்பிய நாடுகளில் இத்தாலியும் ஜேர்மனியும் அடங்கும்.
 
——————————————————————————————————————————————————-
 
தலைநகர் கீவ்வுக்கு அருகிலுள்ள இர்பின் நகரில் இருந்து சுமார் 2,000 பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக, உள்ளூர் பொலிஸாரின் அறிக்கை தெரிவிக்கின்றது.
 
எந்த காலக்கட்டத்தில் வெளியேற்றங்கள் நடந்தன என்பதை அந்த அறிக்கை தெளிவுபடுத்தவில்லை.
 
——————————————————————————————————————————————————-
 
முற்றுகையிடப்பட்ட தெற்கு உக்ரேனிய நகரங்களான மரியுபோல் மற்றும் வோல்னோவாகாவில் ரஷ்யப் படைகளின் தாக்குதல் தொடர்வதால், பொதுமக்களுக்கு அச்சம் அதிகரித்து வருகிறது.
 
——————————————————————————————————————————————————-
 
அமெரிக்காவும் மற்ற நேட்டோ உறுப்பினர்களும் இதுவரை உக்ரைனுக்கு 17,000 டேங்கர் எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் 2,000 ஸ்டிங்கர் விமான எதிர்ப்பு ஏவுகணைகளை அனுப்பியுள்ளனர்.
 
அமெரிக்காவினால் ஏற்கனவே 350 மில்லியன் அமெரிக்க டொலர் பாதுகாப்பு உதவிப் பொருட்கள் உக்ரைனுக்கு வழங்கப்பட்டுவிட்டன.
 
ரஷயாவின் படையெடுப்பு தொடங்கியவுடன், 14 நாடுகள் உக்ரைனுக்கு பாதுகாப்பு உதவிகளை அனுப்பியுள்ளன.
 
——————————————————————————————————————————————————-
 
லிதுவேனியாவில் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், “லிதுவேனியாவின் ஜனநாயகத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தவும், சைபர் தாக்குதல்கள் மற்றும் தவறான தகவல்களால் துருவமுனைப்புக்கு வித்திடவும்” ரஷ்யா முயன்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
 
——————————————————————————————————————————————————-
 
வடக்கில் இருந்து தலைநகர் கீவ்வின் மேற்கே பரந்த பகுதியில் இன்று (திங்கள்கிழமை) அதிகாலை கடுமையான சண்டை நடந்துள்ளது.
 
உக்ரைன் தலைநகருக்குள் நுழைய ரஷ்யப் படைகள் பல பகுதிகளில் தாக்குதல் நடத்தியதாகத் அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
——————————————————————————————————————————————————-
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் அகதிகள் நெருக்கடி இதுவனெ ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
 
ரஷ்ய படையெடுப்பின் காரணமாக 1.7 மில்லியனுக்கும் அதிகமான பொதுமக்கள் இப்போது உக்ரைனில் இருந்து வெளியேறியுள்ளனர்.
 
நான்கு மில்லியன் மக்கள் நாட்டை விட்டு வெளியேற முயற்சி செய்யலாம் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
 
——————————————————————————————————————————————————-
 
உக்ரைனுக்கு இராணுவ விமானங்களை வழங்குமாறும், ரஷ்ய எண்ணெய் மற்றும் பிற ஏற்றுமதிகளை புறக்கணிக்குமாறும் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி, உக்ரைனின் நட்பு நாடுகளிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
 
——————————————————————————————————————————————————-
 
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் ஆர்கடி ரோட்டன்பெர்க் ஆகியோர் சர்வதேச ஜூடோ கூட்டமைப்பில் (ஐஜேஎஃப்) அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்டதாக விளையாட்டு நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது.
 
உக்ரைனில் நடந்து வரும் மோதல்கள் காரணமாக கடந்த மாதம் புடினின் கௌரவ ஜனாதிபதி பதவியை இடைநீக்கம் செய்ததாக சர்வதேச ஜூடோ கூட்டமைப்பு அறிவித்ததை அடுத்து இந்த முடிவு வந்துள்ளது.
 
——————————————————————————————————————————————————-
 
மூலோபாய துறைமுக நகரமான மைக்கோலைவ் நோக்கி ரஷ்ய துருப்புக்கள் இன்று (திங்கள்கிழமை) காலை தாக்குதலைத் தொடர்ந்ததாக பிராந்திய ஆளுனர் விட்டலி கிம் தெரிவித்துள்ளார்.
 
மேலும். மைக்கோலைவ்வில் உள்ள குடியிருப்பாளர்களை தங்கள் தங்குமிடங்களில் இருந்து வெளியேற வேண்டாம் என எச்சரித்தார்.
 
விடியற்காலையில் ரஷ்ய ஏவுகணைகளால் நகரம் தாக்கப்பட்டதாக மைக்கோலைவ் மேயர் ஓலெக் சென்கெவிச் கூறிய சில மணிநேரங்களுக்குப் பிறகு தாக்குதல் பற்றிய எச்சரிக்கை வந்தது.
 
——————————————————————————————————————————————————-
 
ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் முதன்முறையாக மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.
 
வருடாந்திர ஊடக கூட்டத்தில் கருத்து தெரிவித்த சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, ‘சமாதானப் பேச்சுக்களை ஊக்குவிப்பதில் சீனா தொடர்ந்து ஆக்கப்பூர்வமான பங்கை வகிக்கத் தயாராக உள்ளது மற்றும் தேவையான சமயங்களில் சர்வதேச சமூகத்துடன் இணைந்து பணியாற்றத் தயாராக உள்ளது’ என கூறினார்.
 
அத்தகைய பங்கு என்னவாக இருக்கும், அல்லது சீனாவின் சாத்தியமான ஈடுபாட்டின் நிலை பற்றிய கூடுதல் விபரங்களை வாங் வழங்கவில்லை.
 
——————————————————————————————————————————————————-
 
உக்ரைன் மீதான ரஷ்யா படையெடுப்புக்கு பின்னர் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றதற்காக ரஷ்ய பொலிஸார் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 5,020 பேரை கைது செய்துள்ளதாக எதிர்ப்புக் கண்காணிப்புக் குழு OVD-Info தெரிவித்துள்ளது.
 
மேலும், இதுவரை ரஷ்யாவில் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றதற்காக 13,300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
——————————————————————————————————————————————————-
 
உக்ரைன் நகரங்களைச் சுற்றி பொதுமக்கள் தப்பிச் செல்ல ஆறு மனிதாபிமான வழித்தடங்கள் திறக்கப்படும் என்று ரஷ்யா கூறியுள்ளது.
 
‘மனிதாபிமான வழித்தடங்கள் பற்றிய விரிவான தகவல்கள் உக்ரைன் தரப்புக்கு முன்கூட்டியே வழங்கப்பட்டன’ என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இகோர் கொனாஷென்கோவ் கூறினார்.
 
——————————————————————————————————————————————————-
 
உக்ரைனியர்கள் மேற்கு உக்ரைனிய நகரமான எல்விவ் நோக்கி வெளியேற அனுமதிக்கும் வகையில் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ளுமாறு ரஷ்யாவை உக்ரைன் அழைப்பு விடுத்துள்ளது.
 
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் மக்ரோன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் திங்கள்கிழமை காலை மனிதாபிமான வழித்தடங்கள் தொடர்பான ரஷ்யாவின் முன்மொழிவை உக்ரைன் பெற்றது என உக்ரைனின் துணைப் பிரதமர் இரினா வெரேஷ்சுக் கூறினார்.
 
 
 
——————————————————————————————————————————————————-
 
ரஷ்யாவுடனான சீனாவின் நட்பு உறுதியானது என அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் வாங் யீயின் தெரிவித்துள்ளார்.
 
மாஸ்கோவிற்கும் பெய்ஜிங்கிற்கும் இடையிலான ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் மிகவும் பரந்தவை என்று அவர் கூறியுள்ளார்.
 
போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதில் பங்கு வகிக்கத் தயாராக இருப்பதாக பெய்ஜிங் கடந்த வாரம் சமிக்ஞை செய்ததைத் தொடர்ந்து இந்த செய்தி வந்துள்ளது.இப்போது வரை, சீனாவின் அரசாங்கம் ரஷ்யாவின் ஊடுருவல் விவகாரத்தில் சமநிலை வகித்து வருகின்றது.
 
இது ரஷ்யாவின் தாக்குதலை ஒரு ‘படையெடுப்பு’ என்று அழைப்பதைத் தவிர்த்தது மற்றும் இந்த நடவடிக்கையை வெளிப்படையாகக் கண்டிக்கவில்லை அல்லது ஆதரிக்கவில்லை.
 
——————————————————————————————————————————————————-
 
கடந்த 24 மணி நேரத்தில் வடகிழக்கு நகரமான கார்கிவில் குடியிருப்புப் பகுதிகள் மீது ரஷ்ய குண்டுவீச்சுகளால் குறைந்தது எட்டு பேர் இறந்துள்ளனர் என்று உக்ரைனின் அவசர சேவை தெரிவித்துள்ளது.
 
திங்கள்கிழமை இரவு 7:15 மணியளவில் குண்டுவெடிப்பு நடந்ததாக அவசர சேவை தெரிவித்துள்ளது.
 
——————————————————————————————————————————————————-
 
13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு எண்ணெய் விலை உயர்ந்ததை அடுத்து ஐரோப்பிய சந்தைகள் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளன.
 
வர்த்தகத்தின் தொடக்க நிமிடங்களில் ஜெர்மன் டாக்ஸ் 3% க்கும் அதிகமாக சரிந்தது மற்றும் பிரெஞ்சு CAC 40 கிட்டத்தட்ட 3% குறைந்தது. UK FTSE 100 0.5% குறைவாக இருந்தது.
 
ஆசியாவில் பெரும் இழப்பைத் தொடர்ந்து விற்பனையானது. ஹாங்காங்கின் ஹாங் செங் குறியீடு காலை வர்த்தகத்தில் 5% வரை சரிந்தது. ஏழு மாதங்களில் அதன் மோசமான தினசரி வீழ்ச்சியை பதிவு செய்யும் பாதையில், இது கடைசியாக 3.4% குறைந்தது. ஜப்பானின் நிக்கேய் 225 3.6% சரிந்தது. தென் கொரியாவின் கோஸ்பி 2.5% சரிந்தது. சீனாவின் ஷாங்காய் காம்போசிட் 1% இழந்தது.
 
அமெரிக்க சந்தையில், டவ் ஃபியூச்சர்ஸ் 450 புள்ளிகள் அல்லது 1.3% சரிந்தது. S&P 500 மற்றும் Nasdaq எதிர்காலம் முறையே 1.6% மற்றும் 2% குறைந்தது.
 
——————————————————————————————————————————————————-
 
ஆயிரக்கணக்கான உக்ரைனிய அகதிகள் நாட்டை விட்டு வெளியேறுவதால் சர்வதேச சமூகம் இதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மால்டோவன் பிரதமர் நடாலியா கவ்ரிலிடா, வலியுறுத்தியுள்ளார்.
 
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘ஒரு அசாதாரண மனிதாபிமான நெருக்கடியை நாங்கள் காண்கிறோம். ஏற்கனவே 230,000 பேர் உக்ரைனில் இருந்து மால்டோவன் எல்லையைக் கடந்துள்ளனர். மேலும் சுமார் 120,000பேர் தங்குவதற்குத் தேர்வு செய்துள்ளனர். இதில் 96,000பேர் உக்ரரனிய குடிமக்கள்.
 
அந்த எண்ணிக்கை மால்டோவாவின் மொத்த மக்கள் தொகையான 2.6 மில்லியனில் 4 சதவீதம் ஆகும்’ என கூறினார்.
 
அகதிகளுக்கு ஆதரவளிக்க மால்டோவன் அரசாங்கம் தன்னால் இயன்றதைச் செய்கிறது. ஆனால் அவர்களின் திறன் குறைவாகவே இருந்தது.
 
——————————————————————————————————————————————————-
 
உக்ரைனிய குடிமக்கள் உக்ரைனிய எல்லை வழியாக தங்கள் வீடுகளை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் ரஷ்யா வேண்டுமென்றே முந்தைய வெளியேற்ற முயற்சிகளுக்கு இடையூறு விளைவிப்பதாகவும் உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கியின் செய்தித் தொடர்பாளர் குற்றம் சாட்டினார்.
 
——————————————————————————————————————————————————-
 
உக்ரேனிய நகரங்களை விட்டு வெளியேற அனுமதிக்கும் மாஸ்கோவின் மனிதாபிமான வழித்தடங்கள் தொடர்பான ரஷ்யாவின் நிலைப்பாடு “முற்றிலும் ஒழுக்கக்கேடானது” என்று உக்ரைன் சாடியுள்ளது.
 
——————————————————————————————————————————————————-
 
சீனாவின் செஞ்சிலுவைச் சங்கம் உக்ரைனுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கும் என்று வெளியுறவு அமைச்சர் வாங் யி தெரிவித்துள்ளார், இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் தொடர வேண்டும் என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
 
——————————————————————————————————————————————————-
 
பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சகம் திங்களன்று உக்ரைன் சுதந்திரமான செய்திகளை அணுகுவதை மட்டுப்படுத்த ரஷ்யா முயல்வதாக உளவுத்துறை தெரிவிக்கிறது.
 
“உக்ரேனிய குடிமக்கள் நம்பகமான செய்திகள் மற்றும் தகவல்களுக்கான அணுகலைக் குறைப்பதற்காக உக்ரைனின் தகவல் தொடர்பு உள்கட்டமைப்பை ரஷ்யா குறிவைக்கிறது” என்று அமைச்சகம் ட்விட்டரில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 
——————————————————————————————————————————————————-
 
மனித உரிமைகள் கண்காணிப்பகம் (HRW) என்ற சர்வதேச அமைப்பானது, உக்ரைன் மீதான படையெடுப்பைத் தொடர்ந்து, ஊடகங்கள் மீதான ரஷ்யாவின் அடக்குமுறையைக் கண்டித்துள்ளது.
 
கருத்துச் சுதந்திரம் மற்றும் தகவல் அணுகல் மீறல் “போர் காலங்களில் கூட சர்வதேச சட்டத்தின் கீழ் நியாயப்படுத்தப்பட முடியாது” என்று கூறியுள்ளது.
 
——————————————————————————————————————————————————-
 
நம்பகமான செய்தி ஆதாரங்களுக்கான அணுகலைக் குறைப்பதற்காக உக்ரைனின் தகவல் தொடர்பு உட்கட்டமைப்பை ரஷ்யா குறிவைக்கிறது என்று பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
——————————————————————————————————————————————————-
 
பொதுமக்களை வெளியேற்ற அனுமதிக்க புதிய மனிதாபிமான வழித்தடங்களை திறப்பதாக ரஷ்யா கூறியுள்ளது.
குறித்த வழித்தடங்கள் பொதுமக்கள் ரஷ்யாவிற்கும் பெலாரஸுக்கும் செல்ல முடியும் என்பதைக் காட்டுகிறது.
 
தலைநகர் கீவ்வில் இருந்து நடைபாதை ரஷ்ய நட்பு நாடான பெலாரஸுக்கு செல்ல வழிவகுக்கும், மேலும் கார்கிவில் இருந்து பொதுமக்கள் ரஷ்யாவிற்கு செல்லும் ஒரு வழித்தடத்தை மட்டுமே கொண்டிருக்கும்.
 
——————————————————————————————————————————————————-
 
ரஷ்ய படையெடுப்பு தொடங்கியதில் இருந்து மொத்தம் 1.067 மில்லியன் உக்ரேனியர்கள் போலந்துக்கு தப்பிச் சென்றுள்ளனர், இதில் ஞாயிற்றுக்கிழமை 142,300 பேர் உள்ளனர் என்று போலந்து எல்லைக் காவல்படை தெரிவித்துள்ளது.
——————————————————————————————————————————————————–
 
ரஷ்யாவை தனது ஐந்தாவது பெரிய கச்சா எண்ணெய் விநியோகஸ்தராகக் கருதும் ஜப்பான், ரஷ்யாவின் எண்ணெய் இறக்குமதியைத் தடை செய்வது குறித்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் விவாதித்து வருவதாக கியோடோ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
——————————————————————————————————————————————————–
 
உக்ரைனில் நடந்த போரின் காட்சிகளைக் காட்ட ரஷ்ய அரச தொலைக்காட்சி ஒளிபரப்புகளை ஹேக் செய்ததாக Anonymous தெரிவித்துள்ளது.
 
ரஷ்ய ஸ்ட்ரீமிங் சேவைகளான விங்க் மற்றும் ஐவிக்கு கூடுதலாக ரஷ்யா 24, சேனல் ஒன் மற்றும் மாஸ்கோ 24 உள்ளிட்ட சேனல்களை ஹேக் செய்ததாக Anonymous குறிப்பிட்டுள்ளது.
 
——————————————————————————————————————————————————–
 
சவுதி அரேபியாவிற்கு எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்குமாறு வலியுறுத்தும், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் பயணத்தை அமெரிக்க அரசாங்கம் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
 
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பினால் ஏற்பட்ட உலகளாவிய எரிசக்தி நெருக்கடியைத் தீர்க்க வெள்ளை மாளிகை போராடி வரும் நிலையில், அமெரிக்க அரசியல் செய்தி நிறுவனமான ஆக்சியோஸ், வசந்த காலத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பயணம் மேற்கொள்வார் என தெரிவித்துள்ளது.
 
எவ்வாறாயினும், அத்தகைய பயணம் எதுவும் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றும், இது ஊகங்கள் என்றும் வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
 
அமெரிக்கா தற்போது கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்களின் இறக்குமதியில் 10% ரஷ்யாவை நம்பியுள்ளது.
 
——————————————————————————————————————————————————–
 
போர் தொடங்கியதில் இருந்து உக்ரைனில் இருந்து வெளியேறிய 1.5 மில்லியன் மக்களில் சிறு குழந்தைகளும் அடங்குவர். சிலர் தனியாக பயணம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
 
பெரும்பாலான அகதிகள் போலந்திற்கு தப்பிச் சென்றுள்ளனர், மற்றவர்கள் ஹங்கேரி, ஸ்லோவாக்கியா, மால்டோவா மற்றும் ருமேனியா ஆகிய நாடுகளுக்குச் சென்றுள்ளனர்.
 
——————————————————————————————————————————————————–
 
தலைநகர் கிவ் உட்பட பல உக்ரேனிய நகரங்களில் மனிதாபிமான வழித்தடங்களை திறப்பதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகத்தின்படி உள்ளூர் நேரப்படி 10:00 மணி முதல் போர்நிறுத்தம் நடைபெறும், தலைநகர் கீவ் மற்றும் கார்கிவ், மரியுபோல் மற்றும் சுமி ஆகியவற்றில் வெளியேற்ற பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நகரங்கள் அனைத்தும் தற்போது குறிப்பிடத்தக்க ரஷ்ய தாக்குதல் நடவடிக்கையின் கீழ் உள்ளன.
 
இதை உக்ரைன் அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
 
——————————————————————————————————————————————————–
 
தங்கள் படைகள் கிழக்கு நகரமான சுஹூவை மீண்டும் கைப்பற்றியதாக உ



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies