அணு உலை பாதுகாப்பாக உள்ளது: உக்ரைன்

05 Mar,2022
 

 
 
யாருக்கும் சேதம் இல்லை !
 
உக்ரைனின் ஷபோரிஷியா என்ற நகரில் உள்ள அணுமின் நிலையம் ஐரோப்பியாவிலேயே பெரியது ஆகும். இங்கு நடந்த தாக்குதலில் யாரும் காயம் இல்லை என்றும் அணு உலையில் சாதாரண நிலையே இருக்கிறது என்றும் அந்நாட்டு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
 
8:55 AM IST
உக்ரைனின்அணு உலை மீது தாக்குதல் நடத்தப்படுவது கண்டிக்கத்தக்கது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
 
6:26 AM IST
உக்ரைன் அணுமின் நிலையம் மீது ரஷ்யா தாக்குதல்
கீவ்: உக்ரைன் மீது 9வது நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அங்குள்ள அணுமின் நிலையம் மீது ரஷ்யா படை தாக்குதல் நடத்தி உள்ளது.
இதுகுறித்து உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியதாவது: சபோரிசியாவில் உள்ள அணு உலை மீது ரஷ்ய படை நாலாபுறமும் இருந்து தாக்குதல் நடத்தி வருகிறது. அணு உலை வெடித்தால் செர்னோபிலை விட 10 மடங்கு அதிக பாதிப்புகள் ஏற்படும்.
 
6:26 AM IST
எல்லையில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு
உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்காக, அதன் அண்டைநாடுகளுக்கு மத்திய அமைச்சர்கள் விரைந்துள்ளனர். ஸ்லோவாக்கியாசென்றுள்ள மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, அங்கு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இந்தியர்களை சந்தித்து, அவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்; அவர்களது குறைகளையும் கேட்டறிந்தார்.
 
6:26 AM IST
ரஷ்யாவின் 130 பஸ்கள் தயார்“
உக்ரைனின் கார்கிவ் மற்றும் சுமி நகரங்களில் இருக்கும் இந்திய மாணவர்கள் மற்றும் வெளிநாட்டினரை, ரஷ்யாவின் பெல்கோரோட் நகருக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்ல 130 பஸ்கள் தயாராக உள்ளன,” என ரஷ்ய ராணுவத்தின் தலைமை அதிகாரி மிக்கேல் மிஸின்செவ் கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் போனில் பேசியபோது, உக்ரைனில் இருக்கும் இந்தியர்களை பாதுகாப்பாக அனுப்பி வைக்க வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்தே ரஷ்ய ராணுவ அதிகாரி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
 
6:25 AM IST
கீவ் நகரில் ஏவுகணை தாக்குதல்
ரஷ்ய படையினர் உக்ரைனுக்குள் நுழைந்து, ஒரு வாரத்திற்கும் மேலாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தலைநகர் கீவில் அந்நாட்டின் ராணுவ அமைச்சகம் இருக்கும் பகுதியில், சக்திவாய்ந்த ஏவுகணையை வீசி ரஷ்ய வீரர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
 
6:25 AM IST
தேசிய கொடிகள் அகற்றம்
'ஒன் வெப்' என்ற தொலைதொடர்பு நிறுவனத்தின் 36 செயற்கைக்கோள்களை, 'சோயுஸ்' ராக்கெட் வாயிலாக, ரஷ்யா நாளை விண்ணில் செலுத்துகிறது. இதில், அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா மற்றும் ஜப்பான் பங்கு பெற்றுள்ளன. உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஜப்பான் மீது கோபத்தில் உள்ள ரஷ்யா, சோயுஸ் ராக்கெட்டில் பொறிக்கப்பட்டிருந்த அந்த மூன்று நாடுகளின் தேசிய கொடிகளை அகற்றி உள்ளது; இந்திய மூவர்ண கொடியை மட்டும் அகற்றவில்லை.
 
6:25 AM IST
பீரங்கியில் உல்லாச பயணம்
உக்ரைனில் நுழைந்து, தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய படைகளுக்கு, உக்ரைன் ராணுவத்தினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், ரஷ்ய ராணுவத்தின் பீரங்கி ஒன்றை, உக்ரைன் வீரர்கள் கைப்பற்றி உள்ளனர். மேலும், அதில் அமர்ந்து அவர்கள் உல்லாசமாக பயணித்துள்ளனர். பின், அதை, 'செல்பி வீடியோ'வாக எடுத்து பதிவிட்டனர். அந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
 
6:24 AM IST
பேச்சுக்கு ரஷ்யா தயார்
ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் குறித்து, ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறியதாவது:போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சு நடத்த ரஷ்யா தயாராக உள்ளது. எனினும் அதுவரை, உக்ரைன் நாட்டின் ராணுவ உள்கட்டமைப்புகளை அழிக்கும் நடவடிக்கைகள் தொடரும்.இவ்வாறு அவர் கூறினார்.
 
6:24 AM IST
உக்ரைனில் 227 பேர் பலி
ரஷ்ய படையினர் போர் தொடுத்து வரும் உக்ரைனில், பொதுமக்கள் 227 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 525 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஐ.நா.,வுக்கான மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்தது. எனினும், உறுதிபடுத்தப்பட்ட உயிரிழப்புகள் மட்டுமே கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டதாகவும், மேலும் பல உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்ககூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
6:23 AM IST
அகதிகளான 10 லட்சம் மக்கள்
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருவதால், தாக்குதல்களில் இருந்து தப்பிக்க, உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக சென்ற வண்ணம் உள்ளனர்.இந்நிலையில், இதுவரை 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள், அகதிகளாக பக்கத்து நாடுகளுக்கு சென்றுள்ளதாக, ஐ.நா.,வின் அகதிகளுக்கான ஆணையம் தெரிவித்தது.
 
03 Mar 2022
8:40 PM IST
போருக்கு எதிராக ரஷ்ய மக்கள் போராட்டம்
மாஸ்கோ:உக்ரைன்மீது ரஷ்யா நடத்தி வரும் போருக்கு எதிராக ரஷ்யர்கள் போராட்டம் நடத்தினர். உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்தி விட்டு ரஷ்ய படைகள் நாடு திரும்ப வேண்டும் என வலியுறுத்தி செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் ரஷ்யர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
8:19 PM IST
ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைனில் புதிய சட்டம்
உக்ரைன் நாட்டில் ரஷ்ய அரசு மற்றும் ரஷ்யர்களுக்கு சொந்தமான சொத்துக்கள் இருந்தால் அதனை பறிமுதல் செய்ய புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்திற்கு உக்ரைன் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
 
 
8:09 PM IST
ரஷ்யர்களின் சொத்துக்கள் பறிமுதல்
உக்ரைனில் உள்ள ரஷ்யர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய அந்நாட்டு பாராளுமன்றத்தில் புதிய சட்டம் இயற்றப்பட்டது
 
5:33 PM IST
எதுவும் இல்லை
 
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியதாவது: உக்ரைன் மீது போரை துவக்கி உள்ளதற்கு ரஷ்யா உரிய விலையை கொடுக்கும். நாங்கள் இழப்பதற்கு எதுவும் இல்லை. ஆனால், சுதந்திரத்தை இழந்துள்ளோம். அனைத்து வீடுகள், தெருக்கள், நகரங்கள் அனைத்தையும் சீரமைப்போம். உக்ரைனுக்கு எதிராக செய்த அனைத்திற்கும் நீங்கள் திருப்பி செலுத்துவீர்கள் என ரஷ்யாவிற்கு கூறி கொள்கிறேன் எனக்கூறியுள்ளார்.
 
4:34 PM IST
உறவு துண்டிப்பு
சர்வதேச விண்வெளி நிலையத்தில் அமெரிக்காவுடனான தனது அனைத்து உறவுகளையும் துண்டிப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது. அமெரிக்காவுக்கான ராக்கெட் எஞ்சின்கள் வழங்குவதையும் நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
 
3:21 PM IST
வெளிநாட்டு மக்கள் வெளியே இடையூறு
 
வெளிநாட்டு மக்கள் உக்ரைனை விட்டு வெளியேற அந்நாட்டு அரசு இடையூறு செய்வதாக ரஷ்யா குற்றம் சாட்டி உள்ளது.
 
1:13 PM IST
தடகள வீரர்களுக்கு தடை
உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதன் எதிரொலியாக, ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளை சேர்ந்த தடகள வீரர்கள், குளிர்கால பாராலிம்பிக்கில் பங்கேற்க தடை விதித்து சர்வதேச பாராலிம்பிக் கமிட்டி உத்தரவிட்டு உள்ளது.
 
11:17 AM IST
10 லட்சம் பேர் வெளியேறினர்
 
உக்ரைனில் ரஷ்ய ராணுவம் 8-ம் நாளாக (மார்ச்.3) தாக்குதல் நடத்தி வருகின்றன. இதுவரை உக்ரைனில் இருந்து 10 லட்சம் பேர் வெளியேறி உள்ளதாக ஐ.நா., தெரிவித்துள்ளது.
 
11:05 AM IST
மறுப்பு
உக்ரைனில், இந்திய மாணவர்கள் பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள மத்திய அரசு, மாணவர்களுடன் தொடர்பில் உள்ளதாகவும் கூறியுள்ளது.
 
8:06 AM IST
கெர்சன் நகரை கைப்பற்றியது ரஷ்ய படை
 
உக்ரைனில் தலைநகர் கியூ உள்பட பல நகரங்ளை ரஷ்ய படை நெருங்கி உள்ளது. தற்போது கெர்சன் என்ற 3 வது முக்கிய நகர் ரஷ்ய படையின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக அந்நகர மேயர் உறுதி செய்துள்ளார்.
 
7:29 AM IST
போரை விரும்பாத ரஷ்ய வீரர்கள்
 
கீவ்: உக்ரைன் மீது போர் தொடுக்க விரும்பாத ரஷ்ய வீரர்கள் பலர், பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். ரஷ்ய அதிபரின் உத்தரவால் மட்டுமே உக்ரைனுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தும் ரஷ்ய வீரர்கள், இந்த போரை நிறுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். தங்கள் சொந்த ராணுவ வாகனங்களை சேதப்படுத்தி வருகின்றனர். சிலர் கண்ணீர் விட்டு அழுதும், தங்கள் கவலையை போக்கிக்கொள்கின்றனர்.
 
7:28 AM IST
3ம் உலகப் போர்: ரஷ்ய அமைச்சர் எச்சரிக்கை!
 
மாஸ்கோ: ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் நேற்று கூறுகையில், ''உக்ரைன் அணு ஆயுதத்தை கையில் எடுத்தால் இந்த போர் மிகவும் ஆபத்தானதாக மாறும். இந்த சண்டை மூன்றாம் உலகப் போராக மாறினால், அதில் அணுஆயுதங்களின் பங்கு நிச்சயம் இருக்கும். அது மிகப் பெரிய அழிவுகளை ஏற்படுத்தும்'' என்றார்.
 
7:27 AM IST
அதிகரிக்கும், 'டிவி' பார்வையாளர்கள்
 
கீவ்: உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா நடத்தும் போர் மீது அனைவரின் கவனமும் திரும்பி உள்ளது. இதுகுறித்த தகவலை அறிந்துகொள்ள, அமெரிக்க மக்கள், 'டிவி' செய்தி சேனல்களை பார்க்க துவங்கி உள்ளனர். இதனால், அவற்றின் பார்வையாளர்களின் எண்ணிக்கை, அதிகரித்துள்ளது. இந்த ஒரு வாரத்தில், 64 லட்சம் பார்வையாளர்கள் செய்தி சேனல்களை பார்த்துள்ளது தெரியவந்துள்ளது.
 
7:26 AM IST
'பாபி யர்' நினைவு வளாகம் தகர்ப்பு: உக்ரைன் அதிபர் கண்டனம்
கீவ்: உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி நேற்று கூறுகையில், “வரலாற்று சிறப்புமிக்க, 'பாபி யர்' நினைவு வளாகத்தை ரஷ்ய படையினர் தகர்த்துள்ளது கண்டனத்திற்கு உரியது. இந்த தாக்குதல்கள், மத வழிபாட்டுத் தலங்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளன. உக்ரைன் வரலாற்றை அழிக்க ரஷ்யா முயற்சிக்கிறது,” என்றார்.
 
7:26 AM IST
சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை
கீவ்: தங்கள் நாட்டின் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யாவுக்கு எதிராக, ஐ.நா.,வின் சர்வதேச நீதிமன்றத்தில், உக்ரைன் முறையிட்டுள்ளது. இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை அடுத்த வாரம் துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, வரும் 7ம் தேதி, உக்ரைன் தரப்பு வழக்கறிஞர்கள் தங்கள் வாதங்களை முன்வைக்க உள்ளனர். 8ம் தேதி, ரஷ்ய வழக்கறிஞர்கள் வாதாட உள்ளனர்.
 
7:24 AM IST
உக்ரைனில் பஞ்சாப் மாணவர் மரணம்
 
கீவ்: உக்ரைனின் கார்கிவ் நகரில், ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில், கர்நாடகாவின் ஹவேரி மாவட்டத்தைச் சேர்ந்த நவீன் சேகரப்பா ஞானகவுடர், 21, என்ற மருத்துவ மாணவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இந்நிலையில் உக்ரைனில் உள்ள வினிட்சியா நகரில் வசித்த பஞ்சாப் மாநிலம் பதிண்டாவைச் சேர்ந்த சந்தன் ஜிண்டால், 22, என்ற மாணவர், மூளை நோயால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தார். வினிட்சியா தேசிய மருத்துவ பல்கலையில், நான்காம் ஆண்டு மருத்துவம் படித்து வந்த அவர், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மூளை நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சந்தன் ஜிண்டால் மரணம் அடைந்தார்.
 
7:24 AM IST
போலீஸ் தலைமையகம் தகர்ப்பு
கீவ்: உக்ரைனின் கார்கிவ் பகுதியில் உள்ள போலீஸ் மற்றும் புலனாய்வுப் பிரிவின் தலைமையகத்தை, ரஷ்ய ராணுவத்தினர் நேற்று ஏவுகணை வீசி தகர்த்துள்ளனர். அந்த கட்டடத்தின் மேல்பகுதியில் தீ பற்றி எரியும் காட்சிகள் அடங்கிய, 'வீடியோ' ஒன்று, சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
 
7:23 AM IST
வானொலி நிலையம் மூடல்
மாஸ்கோ: ரஷ்யாவில் செயல்பட்டு வந்த, 'எக்கோ மோஸ்க்வி' என்ற வானொலி நிலையம், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருவது குறித்த செய்திகளை வெளியிட்டு வந்தது. இந்நிலையில்,ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் குறித்து போலி தகவல்கள் ஒலிபரப்பியதாக கூறி, அந்த வானொலி நிலையத்தை ரஷ்ய அரசு மூடியது.
 
7:23 AM IST
ரஷ்ய கப்பல்களுக்கு பிரிட்டன் அரசு தடை
லண்டன்: ரஷ்யா மீது, உலக நாடுகள் பல்வேறு தடைகளை விதித்து வருகின்றன. இந்நிலையில், தங்கள் நாட்டு துறைமுக பகுதிகளுக்குள் நுழைய, ரஷ்யா தொடர்புடைய அனைத்து கப்பல்களுக்கும் தடை விதிக்கப்படுவதாக, பிரிட்டன் அரசு நேற்று அறிவித்தது. இந்த நடவடிக்கையை எடுத்துள்ள முதல் நாடாக பிரிட்டன் உள்ளது.
 
7:22 AM IST
போலந்து நாட்டிற்குள் விரைவாக நுழைய இந்தியர்களுக்கு அறிவுரை
உக்ரைனில் சிக்கி உள்ள இந்தியர்களை, அதன் அண்டை நாடுகளுக்கு வரவழைத்து, அங்கிருந்து சிறப்பு விமானங்களில் இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர். இந்நிலையில், நீண்ட வரிசைகளில் காத்திருக்காமல், போலந்து நாட்டிற்குள் விரைவாக நுழைய, புடோமியர்ஸ் எல்லை வழியாக செல்லுமாறு, இந்தியர்களுக்கு உக்ரைனில் உள்ள இந்திய துாதரகம் நேற்று அறிவுறுத்தியது.
 
7:18 AM IST
இந்தியாவுக்கு பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது: இந்திய விமானப்படை
கீவ்: உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யா மீது, அமெரிக்கா பல பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இந்நிலையில், நேற்று இதுகுறித்து இந்திய விமானப் படையின் துணை தளபதி சந்தீப் சிங் கூறுகையில், “ இந்த தடையால் சில சவால்கள் இருப்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனினும், இவை இந்தியாவுக்கு பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது,” என்றார்.
 
02 Mar 2022
10:19 PM IST
இந்திய மாணவர் பலி :உக்ரைன் தூாதர் இரங்கல்
உக்ரைன் ரஷ்யா தாக்குதலில் இந்திய மாணவர் உயிரிழந்ததற்காக ஆழ்ந்த இரங்கலை உக்ரைன் தரப்பில் தெரிவித்து கொள்கிறேன் னெ ஐநாவிற்கான உக்ரைன் தூதர் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கும் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கும் எங்களதுஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோம். என தெரிவித்து உள்ளார்.
 
8:37 PM IST
ரஷ்யாவுக்கு எதிராக 4-வது கட்ட பொருளாதார தடை :ஐரோப்பிய ஒன்றியம்
ரஷ்யாவுக்கு எதிராக 4-வது கட்ட பொருளாதார தடை விதிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்து உள்ளது. ரஷ்யாவிற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் இதுவரையில் மூன்று கட்ட பொருளாதார தடை விதித்துள்ளது. இந்நிலையில் தற்போது விதிக்கப்பட்ட உள்ள 4-ம் கட்ட பொருளாதார தடையானது ரஷ்ய நாட்டின் பெரு வணிகர்களுக்கு எதிரான நடவடிக்கை இந்த தடையில் இருக்கும் என கூறப்படுகிறது.
 
8:30 PM IST
ஒரேநாளில் 6 விமானங்கள் மூலம் 1,700 பேர் மீட்பு
உக்ரைன் நாட்டில் இருந்து ஒரேநாளில் இந்தியர்கள் 1,700 மீடககப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து கூறப்படுவதாவது: ஆறு விமானங்கள் மூலம் இந்தியர்கள் சொந்த நாடு திரும்பி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளை பார்வையிட மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா ருமேனியா நாட்டிற்கு சென்று உள்ளதாக கூறப்படுகிறது.
 
8:30 PM IST
இந்தியர்களை மீட்க மேலும் 15 விமானங்கள் : வெளியுறவுத்துறை
உக்ரைனில் இருந்து அண்டை நாடுகளுக்கு வந்துள்ள இந்தியர்களை மீட்க மேலும் 15 விமானங்கள் இயக்கப்படும் என வெளியுறவுத்துறை தெரிவித்து உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் இந்தியர்கள் தாயகத்திற்கு அழைத்து வரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
8:10 PM IST
உக்ரைன் நாட்டு மகளிருக்கு போர் பயிற்சி அறிவிப்பு
உக்ரைன் நாட்டில் போருக்கு வந்து ரஷ்ய படைகள் தங்களது துருப்புகளை பறி கொடுத்துள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்து உள்ளது. மேலும் அந்த ஆயுதங்களை தங்கள் நாட்டு பெண்களுக்கு வழங்க உக்ரைன் அரசு திட்டமிட்டு உள்ளது. இதனையடுத்து ஆயுதங்களை பெற்றுக்கொள்ள வருமாறு தங்கள் நாட்டு பெண்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது உக்ரைன் அரசு.
 
7:22 PM IST
ரஷ்ய படைகள் தாக்குதலில் கார்கிவ் நகர பள்ளிகட்டடம் சேதம்
கார்கிவ் நகரில் ரஷ்ய படைகள் நடத்தி வரும் தாக்குதலில் பள்ளி கட்டடம் சேதம் அடைந்தன.பள்ளி கூட சுவரை துளைத்து கொண்டு சென்ற ஏவுகணையால் பள்ளிகட்டடம் பலத்த சேதம் அடைந்துள்ளது. கார்கிவ் நகரில் ரஷ்ய படைகள் சரமாரியாக குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன. பள்ளி கட்டடத்தை போலவே பல்வேறு கட்டடங்களும் சேதம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
 
6:57 PM IST
உக்ரைனில் இருந்து 17 ஆயிரம் இந்தியர்கள் மீட்பு : வெளியுறவுத்துறை
புதுடில்லி: உக்ரைனில் இருந்து இதுவரை 17 ஆயிரம் இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர்அரிந்தம் பக்சி தெரிவித்துள்ளார்.
 
5:51 PM IST
மரணம்
உக்ரைனில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த பஞ்சாபை சேர்ந்த மாணவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
 
5:50 PM IST
உடனடியாக வெளியேறுங்கள்
இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கை: கார்கிவ் நகரில் உள்ள இந்தியர்களுக்கு அவசர அறிவுரை- பாதுகாப்பு கருதி அனைவரும் கார்கிவ் நகரில் இருந்து உடனடியாக வெளியே வேண்டும். வெகு விரைவில் பெசோசின், பபயே, பெஜ்லுடோவ்கா நகரங்களுக்கு செல்ல வேண்டும். மாலை 6 மணிக்குள் செல்லும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
 
3:35 PM IST
அனுமதிக்க மாட்டோம்
வெளிநாடுகளிடம் இருந்து அணு ஆயுதங்களை உக்ரைன் வாங்குவதை அனுமதிக்க முடியாது என ரஷ்யா கூறியுள்ளது.
 
3:35 PM IST
தயார்
இன்று(மார்ச்2) இரவு உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
 
1:26 PM IST
6 ஆயிரம் வீரர்கள் பலி
 
கடந்த 6 நாட்களாக நடந்து வரும் தாக்குதலில் 6 ஆயிரம் ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். கெர்சான் நகரை, ரஷ்ய படைகள் சுற்றி வளைத்துள்ளதாக அம்மாகாண கவர்னர் கூறியுள்ளார்.
 
1:11 PM IST
அண்டை நாடுகள் வழியாக
 
மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளீதரன் கூறுகையில், உக்ரைனில் 20 ஆயிரம் இந்தியர்கள் சிக்கி இருந்தனர். அவர்களில் கடந்த பிப்.,24 வரை 4 ஆயிரம் பேர் திரும்பினர். நேற்று வரை மேலும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அழைத்து வரப்பட்டனர். மற்ற இந்தியர்களையும் ருமேனியோ, போலந்து, ஹங்கேரி, ஸ்லோவேகியா, மோல்டோவா வழியாக அழைத்து வரப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
 
 
1:10 PM IST
விமானப்படை தகவல்
 
இந்திய விமானப்படை துணைத்தளபதி சந்தீப் சிங் கூறியதாவது: உக்ரைனில் சிக்கிய இந்தியர்களை மீட்க 3 விமானப்படை விமானங்கள் சென்றுள்ளன. 24 மணி நேரமும் மீட்பு பணி நடக்கும். நிவாரண பொருட்களும் கொண்டு செல்லப்பட்டுள்ளன. மத்திய வெளியுறவு அமைச்சகத்துடன் ஒருங்கிணைந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடைபெறுகின்றன.
 
11:56 AM IST
கார்கிவ் நகரில் ரஷ்யா தாக்குதல்
உக்ரைனின் முக்கிய நகரமான கார்கிவ் நகரில் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. அங்குள்ள ராணுவ அகாடமி மற்றும் மருத்துவமனைகளை குறிவைத்து தாக்குதல் நடந்தது.
 
9:14 AM IST
ரஷ்ய விமானங்கள் பறக்க தடை
 
அமெரிக்க வான்வெளியில் ரஷ்ய விமானங்கள் பறக்க தடை விதித்து, ரஷ்யாவின் போர் நடவடிக்கைக்கு தனது கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.
 
01 Mar 2022
10:24 PM IST
நேட்டோ அமைப்பு நாடுகள் வெள்ளிக்கிழமை அவசர ஆலோசனை
நேட்டோ அமைப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் வரும் வெள்ளிக்கிழமை அவசர ஆலோசனை நடத்த உள்ளனர். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது.
 
9:40 PM IST
ரஷ்ய நாட்டு தடகள வீரர்கள் வீராங்கனைகளுக்கு தடை
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் ஆறாவது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனையடுத்து சர்வதேச தடகள சங்கம் ரஷ்ய நாட்டு தடகள வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க கூடாது என தடை விதித்துள்ளது.
 
9:39 PM IST
கீவ் நகர தொலைக்காட்சி மீது ரஷ்ய படைகள் தாக்குதல் : 5 பேர் பலி
கீவ்: உக்ரைன் நாட்டின் டி.வி கோபுரம் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி உள்ளதாக கூறப்படுகிறது. ஒளிபரப்பை தடை செய்யும் நோக்கில் தாக்குதல் நடத்தி இருப்பதாகவும், மேலும் இத்தாக்குதலில் 5பேர் பலியானதாகவும் கூறப்படுகிறது.
 
8:25 PM IST
சர்வதேச கடன் தள்ளுபடி :உக்ரைன் கோரிக்கை
ரஷ்யா உடனான போரில் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதால் சர்வதேச அளவில்உக்ரைன் பெற்றுள்ள சுமார் 57 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என அந்நாட்டின் அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
7:53 PM IST
உக்ரைன் சீன வெளியுறவுத்துறை அமைச்சர்கள் போனில் பேச்சு
உக்ரைன் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சருடன் சீனநாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் போனில் பேசினர். அப்போது உக்ரைன் போரை எதிர்கொள்ளும் சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளது குறித்து சீன அமைச்சர் வருத்தம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
 
7:28 PM IST
உக்ரைன் ரஷ்யா இடையே நாளை இரண்டாம் கட்ட பேச்சுவார்தை
போலந்து பெலராஸ் நாடுகளுக்கு இடையிலான எல்லை பகுதியில் உக்ரைன் ரஷ்யா இடையே நாளை இரண்டாம் கட்ட பேச்சுவார்தை நடைபெற உள்ளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. முதற்கட்ட பேச்சுவார்ததை எந்த முடிவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது. இருநாட்டு தலைவர்கள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
 
7:28 PM IST
உக்ரைன் போரில் ஒரு கோடியே 20 லட்சம் பேர் பாதிப்பு
நியூயார்க்: உக்ரைன் போரால் ஒரு கோடியே 20 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஐ.நா.,சபை தெரிவித்த உள்ளது. மேலும் அந்நாட்டிற்கு 1.7 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்க நிதி உதவி தேவைப்படுவதாகவும் அவை தெரிவித்துள்ளது.
 
7:17 PM IST
கீவ் நகர மக்களுக்கு ரஷ்யா அறிவுறுத்தல்
கீவ் நகரில் உளவுத்துறை அலுவலகங்கள் வசிப்போர் உடனடியாக வெளியேற வேண்டும் என ரஷ்யா அறிவுறுத்தி உள்ளது
 
 
 
6:51 PM IST
4-வது முறையாக ஆலோசனை
உக்ரைன் விவகாரம் : 48 மணி நேரத்தில் பிரதமர் மோடி 4-வது முறையாக அவசர ஆலோசனை
 
6:40 PM IST
ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினராகிறது உக்ரைன்
கீவ்: ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக இணைய உள்ளது உக்ரைன். இதற்காக உக்ரைன் கொடுத்த விண்ணப்பத்தை ஏற்றது ஐரோப்பிய யூனியன்.
 
6:39 PM IST
உறுப்பினராகிறது
ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினராகிறது உக்ரைன்
 
5:21 PM IST
பிரதமர் ஆறுதல்
உக்ரைனில் ரஷ்யாவின் தாக்குதலில் உயிரிழந்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மாணவர் நவீனின் குடும்பத்தாருக்கு பிரதமர் மோடி ஆறுதல் கூறினார்.
 
4:44 PM IST
தூதர்களுக்கு சம்மன்
டில்லியில் உள்ள ரஷ்யா, உக்ரைன் நாட்டு தூதர்களுக்கு சம்மன் அனுப்பிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், உக்ரைனில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்படி கேட்டு கொண்டுள்ளது.
 
3:08 PM IST
இந்திய மாணவன் பலி
 
உக்ரைன் கார்கிவ் நகரில் நடந்த தாக்குதலில் இந்திய மாணவன் பலியானதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உயிரிழந்த மாணவன் கர்நாடகாவை சேர்ந்த நவீன் என்பதும், அவர் கார்கிவ் நகரில் இருந்து வெளியேற ரயில் நிலையம் சென்ற போது, வெடிகுண்டு வீச்சில் அவர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, இந்திய மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்படி ரஷ்யா, உக்ரைன் தூதர்களிடம் இந்தியா வலியுறுத்தி உள்ளது.
 
1:06 PM IST
5 பேர் பலி
 
உக்ரைனின் கார் கிவ் நகரில் கட்டடம் ஒன்றின் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தின. அதி்ல் 5 பேர் உயிரிழந்தனர். கட்டடம் பலத்த சேதம் அடைந்துள்ளதால், உயிரிழப்பு இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அஞ்சப்படுகிறது.
 
12:41 PM IST
உக்கிரமான தாக்குதல்
உக்ரைன் தாக்குதல் தொடர்பாக பிரிட்டன் பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், உக்ரைனின் கீவ், கார்கிவ், செர்னிகிவ் உள்ளிட்ட நகரங்களில் ரஷஅய படைகள் உக்கிரமாக தாக்குதல் நடத்தி வருகின்றன. வான்வெளி மூலமாகவும் தாக்கி வருகின்றன. மக்கள் அதிகளவில் வசிக்கும் பகுதிகளில் கனரக ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்துவதால், மக்கள் உயிரிழப்பும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இரவிலும் தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமிட்டு உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
 
12:33 PM IST
தூதரகம் அறிவுரை
 
உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கை: கீவ் நகரில் வசிக்கும் மாணவர்கள் உட்பட இந்தியர்கள் அனைவரும் ,இன்று உடனடியாக வெளியேற வேண்டும். அங்கு கிடைக்கும் ரயில் அல்லது சாலை வழியாக எந்த வழியிலாவது வெளியேற வேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது.
 
11:53 AM IST
70 உக்ரைன் வீரர்கள் பலி
 
ஒக்ட்ரிகா நகரில் ரஷ்ய ராணுவம் உக்ரைன் ராணுவ முகாம் மீது நடத்திய தாக்குதலில் 70 உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
9:12 AM IST
துப்பாக்கிகள் பேசுகிறது ; ஐ.நா., பொதுசெயலர் கவலை
 
ஐ.நா. : உக்ரைனில் போர் நிறுத்தப்பட வேண்டும் என ஐ.நா., சிறப்பு கூட்டத்தில் பேசிய அமைப்பின் பொதுசெயலர் அன்டோனியா கட்டர்ஸ் வலியுறுத்தி உள்ளார். படைகள் திரும்ப பெறப்பட வேண்டும். தலைவர்கள் அமைதி பேச்சு முடிவுக்கு வர வேண்டும். மக்கள் காக்கப்பட வேண்டும். சர்வதேச எல்லைகள் மதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். தற்போது துப்பாக்கிகள் பேசி கொண்டிருப்பது கவலை அளிப்பதாகவும் தெரிவித்தார். எந்தவொரு விஷயத்திற்கும் போர் ஒரு தீர்வாக முடியாது. இது உயிர்ச்சேதமாகத்தான் இருக்கும். மனிதர்களை பாதிப்பதாகத்தான் இருக்கும். பேச்சு வார்த்தை வரவேற்கப்பட வேண்டியது. பேச்சு வார்த்தைக்கு ஐ.நா., துணை நிற்கும் என்றார்.
 
5:04 AM IST
ரஷ்யாவில் வலுக்கும் போராட்டம்
உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யாவுக்கு எதிராக, அந்நாட்டு மக்களே போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். தலைநகர் மாஸ்கோவில், சாலைகளில் இறங்கி அதிபர் புடினுக்கு எதிராக மக்கள் கோஷங்களை எழுப்பி வருகின்றனர். போலீசின் கைது நடவடிக்கைகளை பொருட்படுத்தாமல், புடின் அரசுக்கு எதிராக பேரணிகள் நடத்துகின்றனர்.
 
5:03 AM IST
ரஷ்ய நாணய மதிப்பு சரிவு
உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யா மீது, பல பொருளாதார தடைகளை, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விதித்து வருகின்றன. குறிப்பாக, 'ஸ்விப்ட்' பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபட, ரஷ்ய வங்கிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த அதிரடி நடவடிக்கைகளால், அமெரிக்க டாலருக்கு நிகரான ரஷ்ய ரூபிள் நாணய மதிப்பு, 26 சதவீதம் சரிவடைந்துஉள்ளது. வீழ்ச்சி அடையும் நாணய மதிப்பை உயர்த்தும் முயற்சியாக, வட்டி விகிதத்தை 9.5 சதவீதத்தில் இருந்து, 20 சதவீதமாக உயர்த்தி, ரஷ்ய மத்திய வங்கி நேற்று அறிவித்தது.
 
5:03 AM IST
கதிரியக்க தளத்தில் தாக்குதல்
உக்ரைன் தலைநகர் கீவில், கதிரியக்க கழிவுகளை அப்புறப்படுத்தும் தளத்தில், ரஷ்ய ராணுவத்தினர் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். இருந்தும் அங்கிருந்த கதிரியக்க பொருட்கள் வெளியேறியதற்கான எந்த அறிகுறிகளும் தென்படவில்லை. இதை, அணுசக்தி தொடர்பான ஐ.நா.,வின் சிறப்பு அமைப்பு உறுதிபடுத்தி உள்ளது. அந்த பகுதியை, உக்ரைன் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
 
5:02 AM IST
தடையை மீறிய ரஷ்ய விமானம்
\வட அமெரிக்க நாடான கனடாவின் வான்வழிக்குள் பறக்க, ரஷ்ய விமானங்களுக்கு நேற்று முன்தினம் தடை விதிக்கப்பட்டது. எனினும், தடை விதிக்கப்பட்ட சில மணி நேரங்களில், ரஷ்யாவின், 'ஏரோபிலோட்' நிறுவனத்தின் விமானம் ஒன்று, தடையை மீறி, கனடா வான்வழிக்குள் பறந்துள்ளது. இதை, கனடா போக்குவரத்து துறை செய்தித் தொடர்பாளர் ஒமர் அல்காப்ரா நேற்று உறுதிபடுத்தினார்.
 
4:28 AM IST
பீர் தயாரிப்பு ஆலைகளில் தயாராகும் பெட்ரோல் குண்டு
 
லீவ்: ரஷ்யாவின் தாக்குதல்களை முறியடிக்க உக்ரைன் ராணுவமும், நாட்டு மக்களும் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அடுத்தது என்ன நடக்குமோ என்ற பதற்றத்தில் உள்ளனர். இதனால், அங்குள்ள மக்கள், மது குடிப்பது குறைந்துள்ளது. அதையடுத்து, லீவ் நகரில் உள்ள 'பீர்' தயாரிக்கும் ஆலையில், உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பீர் பாட்டில்களை, பெட்ரோல் குண்டுகளாக மாற்றும் வேலை நடந்து வருகின்றது. காலி பாட்டில்களில், பெட்ரோல் உள்ளிட்டவற்றை நிரப்பி, நீண்ட துணி போன்ற திரியைப் பொருத்துகின்றனர். ரஷ்ய ராணுவத்துக்கு எதிராக இந்த பெட்ரோல் குண்டுகள் பயன்படுத்தப்படுகின்றன.
 
28 Feb 2022
10:58 PM IST
போலந்து எல்லையில் அடுத்த சுற்று பேச்சு
உக்ரைன்- ரஷ்யா இடையேயான அடுத்த சுற



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies