ரஷ்யா- உக்ரைன் போர்: கள நிலவரம் ஆறாம் நாள்!

02 Mar,2022
 

 
 
 
அவர் தனது நாட்டில் நடப்பது ஒரு சோகம் என்றும், அவர்கள் தங்கள் நிலத்திற்காகவும், தங்கள் சுதந்திரத்திற்காகவும், தங்கள் வாழ்க்கைக்காகவும் போராடுகிறார்கள் என்று தெரிவித்தார்.
 
——————————————————————————————————————————————————–
 
ரஷ்யாவிற்கு எதிராகப் பொருளாதாரப் போரை நடத்துவதாக பிரான்சின் நிதியமைச்சர் உறுதியளித்ததை அடுத்து, மேற்கத்திய அதிகாரிகளை “தங்கள் நாக்கைப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று முன்னாள் ஜனாதிபதியும் ரஷ்ய உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரியுமான டிமிட்ரி மெட்வடேவ் எச்சரித்துள்ளார்.
 
 
 
——————————————————————————————————————————————————–
 
உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவின் மையத்தில் ரஷ்யப் படைகள் நடத்திய ரொக்கெட் தாக்குதல்களில் குறைந்தது 10பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 35பேர் காயமடைந்தனர் என்று உட்துறை அமைச்சக ஆலோசகர் அன்டன் ஹெராஷ்செங்கோ தெரிவித்துள்ளார்.
 
இடிபாடுகள் அகற்றப்பட்டு வருவதால், உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடுமென அவர் தெரிவித்தார்.
 
 
 
உக்ரேனிய அதிகாரிகளின் கூற்றுப்படி, நேற்று (திங்கட்கிழமை) கார்கிவ் மீது ரஷ்ய ரொக்கெட் தாக்குதல்களால் குறைந்தது 11பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
 
——————————————————————————————————————————————————–
 
பிஃபா மற்றும் யூ.இ.எப்.ஏ. ஆகியவை ரஷ்ய தேசிய மற்றும் உள்நாட்டு கழக அணிகளை மீள் அறிவிப்பு வரும் வரை தங்கள் போட்டிகளில் இருந்து தடை செய்துள்ளன.
 
 
 
அதே நேரத்தில் சர்வதேச ஒலிம்பிக் ஆணையம், ரஷ்ய விளையாட்டு வீரர்களை விலக்க விளையாட்டு கூட்டமைப்புகளை வலியுறுத்தியுள்ளது.
 
——————————————————————————————————————————————————–
 
உக்ரைனுடனான தனது எல்லையில் அதிக படைகளை பெலாரஸ் நிலைநிறுத்த திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோவை மேற்கோள் காட்டி அந்நாட்டின் அரச செய்தி நிறுவனமான பெல்டா செய்தி வெளியிட்டுள்ளது.
 
நன்கு பயிற்றுவிக்கப்பட்ட இராணுவமாகும். இந்தபடை பெலாரஸுக்கு எதிரான எந்தவொரு ஆத்திரமூட்டல் மற்றும் எந்தவொரு இராணுவ நடவடிக்கையையும் தடுத்து நிறுத்த தயாராக உள்ளதாக லுகாஷென்கோ கூறியதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
——————————————————————————————————————————————————–
 
கார்கிவ் மீது இன்று (செவ்வாய்கிழமை) காலை நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் கொல்லப்பட்டதாக இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.
 
 
 
——————————————————————————————————————————————————–
 
ரஷ்யா தனது படையெடுப்பைத் தொடங்கியதில் இருந்து 13 குழந்தைகள் உட்பட குறைந்தது 136 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 400 பேர் காயமடைந்துள்ளனர் என்று ஐநா மனித உரிமைகள் அலுவலகத்தின் (OHCHR) செய்தித் தொடர்பாளர் லிஸ் த்ரோசல் தெரிவித்துள்ளார்.
 
 
 
உக்ரைனின் கிழக்கு நகரமான கார்கிவ் மீதான தாக்குதல்கள் ரஷ்யாவால் மேற்கொள்ளப்பட்ட அரச பயங்கரவாதத்திற்கு சமம் என்று உக்ரைன் ஜனாதிபதி  தெரிவித்துள்ளார்.
 
இதனிடையே முன்னதாக அவர் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார், அதில் அவர் ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைனின் உறுப்பினர் விண்ணப்பத்தில் கையெழுத்திட்டதைக் காட்டுகிறது.
 
——————————————————————————————————————————————————–
 
ரஷ்யா ஆக்கிரமித்ததில் இருந்து 660,000 க்கும் அதிகமான மக்கள், பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள், உக்ரைனில் இருந்து அண்டை நாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர் என்று ஐநா அகதிகள் நிறுவனம் (UNHCR) தெரிவித்துள்ளது.
 
 
 
போலந்திற்குள் நுழைய 60 மணிநேரம் வரை மக்கள் காத்திருப்பதாகவும், ரோமானிய எல்லையில் 20 கிமீ (12 மைல்கள்) வரை வரிசைகள் இருப்பதாகவும் UNHCR செய்தித் தொடர்பாளர் ஷாபியா மாண்டூ  கூறினார்.
 
——————————————————————————————————————————————————–
 
முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் எந்த நாட்டிலும் ராணுவ வசதிகளை மேற்கத்திய நாடுகள் முன்னெடுக்கக் கூடாது என ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறியதாக ரஷ்ய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
 
சில ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவிடமிருந்து அணு ஆயுதங்களை வழங்குவதை ரஷ்யா ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், உக்ரைன் இதேபோன்ற ஆயுதங்களைப் பெறுவதைத் தடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் லாவ்ரோவ் கூறினார்,
 
——————————————————————————————————————————————————–
 
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின், மேற்கு நாடுகளின் ஒற்றுமை மற்றும் உறுதியை குறைத்து மதிப்பிட்டுள்ளார் என பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
 
போலந்தில் நடந்த ஊடக சந்திப்பில், பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கூறுகையில், ‘விளாடிமிர் புடின் தங்கள் நாட்டைப் பாதுகாக்க உக்ரைன் மக்களின் உணர்ச்சிமிக்க விருப்பத்தை குறைத்து மதிப்பிட்டுள்ளார்.
 
பொருளாதாரத் தடைகள் மூலம் ரஷ்யா மீதான பொருளாதார அழுத்தத்தை தொடர்ந்து எதிர்கொள்ளும்.
 
கடந்த சில ஆண்டுகளில் ரஷ்யாவிற்கு எதிராக மற்றும் உண்மையில் எந்த நாட்டிற்கும் எதிரான மிகவும் சக்திவாய்ந்த பொருளாதாரத் தடைகளில் இதுவும் ஒரு தொகுப்பு’ என கூறினார்.
 
 
 
உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் தலைமை மற்றும் தைரியத்தை பிரதமர் பொரிஸ் பாராட்டினார். அவர் ரஷ்ய படையெடுப்பிற்கு மத்தியில் தனது நாட்டையும் உலகையும் அணிதிரட்டியுள்ளார் என்று கூறினார்.
 
——————————————————————————————————————————————————–
 
ரஷ்யா தனது இலக்குகளை அடையும் வரை உக்ரைனில் “இராணுவ நடவடிக்கை”  தொடரும் என்று அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு தெரிவித்துள்ளார்
 
மேற்கு நாடுகளால் உருவாக்கப்பட்ட அச்சுறுத்தல்களிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதே மாஸ்கோவின் முக்கிய குறிக்கோள் என்றும், ரஷ்யா உக்ரைனின் பிரதேசத்தை ஆக்கிரமிக்கவில்லை என்றும் செர்ஜி ஷோய்கு கூறினார்.
 
——————————————————————————————————————————————————–
 
கார்கிவ் நகரில்  நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் சுமார் 20 பொதுமக்கள் காயமடைந்துள்ளதாகவும் மேலும் ஆறு பேர் மீட்கப்பட்டதாகவும் அந்நகரின் அவசர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
இருப்பினும்  மக்கள் கொல்லப்பட்டார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
 
——————————————————————————————————————————————————–
 
உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கெய்வ் மற்றும் கார்கிவ் மீது ரஷ்யப் படைகள் முற்றுகையிட முயற்சிப்பதாக உக்ரைன் ஜனாதிபதியின் ஆலோசகர் ஒலெக்ஸி அரெஸ்டோவிச் தெரிவித்துள்ளார்.
 
 
 
——————————————————————————————————————————————————–
 
உக்ரேனியர்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்த கார்கிவ் நகரில் மிகப்பெரிய தாக்குதலொன்று நடத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான காணொளியொன்று தற்போது வெளியாகியுள்ளது.
 
 
பிராந்திய நிர்வாக அலுவலகத்திற்கு வெளியே சுதந்திர சதுக்கத்தில் இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
 
இது நாட்டின் இரண்டாவது பெரிய நகரம் மற்றும் போல்ஷிவிக்குகளால் அமைக்கப்பட்ட உக்ரேனிய சோவியத் சோசலிச குடியரசின் முதல் தலைநகரம் ஆகும்.
 
இது உக்ரைனின் மிக முக்கியமான தொழில்துறையின் தாயகமாகும், இதில் ஒரு டேங்க் தொழிற்சாலை மற்றும் பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளன.
 
——————————————————————————————————————————————————–
 
நாட்டில் முதல் ஐந்து நாட்களில் தீவிரமான சண்டையில் 5,710 ரஷ்ய துருப்புக்கள் கொல்லப்பட்டதாகக் உக்ரைன் இராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.
 
மேலும், 200க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் உக்ரேனியப் படைகளால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
198 ரஷ்ய டாங்கிகள், 29 விமானங்கள், 846 கவச வாகனங்கள் மற்றும் 29 ஹெலிகொப்டர்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் பொது ஊழியர்களின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
 
——————————————————————————————————————————————————–
 
டசன் கணக்கான பொதுமக்களைக் கொன்ற கார்கிவ் மீதான குண்டுவீச்சை ஒரு போர்க்குற்றம் என்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வர்ணித்துள்ளார்.
 
திங்களன்று உக்ரைனின் இரண்டாவது நகரத்தில் குடியிருப்பு கட்டடங்களை குறிவைத்து ரஷ்ய கிளஸ்டர் குண்டுகள் வெடித்ததில் மூன்று குழந்தைகள் உட்பட 9 பேர் கொல்லப்பட்டனர்.
 
——————————————————————————————————————————————————–
 
உக்ரைனின் முக்கிய தென்கிழக்கு துறைமுக நகரம் தொடர்ந்து ஷெல் தாக்குதலுக்கு உள்ளாகி, பொதுமக்களைக் கொன்றது மற்றும் உள்கட்டமைப்பை சேதப்படுத்தியதாக மரியுபோல் மேயர் வாடிம் போய்ச்சென்கோ தெரிவித்துள்ளார்.
 
——————————————————————————————————————————————————–
 
உக்ரைனில் ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கையில் சேர பெலாரஸுக்கு எந்த திட்டமும் இல்லை என்று பெலாரஷ்ய ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ கூறியதாக பெலாரஷ்ய அரச செய்தி நிறுவனமான பெல்டா தெரிவித்துள்ளது.
 
பெலாரஸின் பிரதேசத்தில் இருந்து ரஷ்ய துருப்புக்கள் உக்ரைனைத் தாக்குகின்றன என்ற கீவ்வின் குற்றச்சாட்டையும் லுகாஷென்கோ மறுத்தார் என்று பெல்டா செய்தி வெளியிட்டுள்ளது.
 
——————————————————————————————————————————————————–
 
ரஷ்யாவின் தாக்குதலால் இதுவரை மொத்தமாக 14 குழந்தைகள் உட்பட 352 பேர் உயிரிழந்துள்ளதாக, உக்ரைனின் சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.
 
இந்தநிலையில், உக்ரைனில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்து விசாரணையைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றமத்தின் கரீம் ஏ.ஏ. கான் கியூசி தெரிவித்துள்ளார்.
 
இதனிடையே, ரஷ்ய படையெடுப்பு தொடங்கியதில் இருந்து 520,000க்கும் அதிகமான மக்கள் உக்ரைனில் இருந்து வெளியேறியுள்ளனர் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.
 
——————————————————————————————————————————————————–
 
ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல்கள் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் நகர நிர்வாகக் கட்டிடம் உட்பட உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரத்தின் மையத்தைத் தாக்கியதாக கார்கிவ் பிராந்திய நிர்வாகத்தின் தலைவர் ஒலெக் சினெகுபோவ் தெரிவித்துள்ளார்.
 
——————————————————————————————————————————————————–உக்ரைனுக்குள் ரஷ்யா 75 சதவீத படைகளைக் கொண்டுள்ளதாக இராணுவ கல்வியாளர் டாக்டர் ஜாக் வாட்லிங் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக இந்த எண்ணிக்கை 40 சதவீதமாக இருந்தது.
 
ரஷ்ய துருப்புக்களின் ஒரு பெரிய குழு பெலாரஸிலிருந்து தெற்கே முன்னேறி வருவதாகவும், அவர்கள் தலைநகர் கீவ்வில் தாக்குதலை நடத்துவதற்கான நிலைமைகளை அமைக்கத் தொடங்குவதாகவும் அவர் மேலும் கூறினார்.
 
கார்கிவில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் ரஷ்யா கிரேட் ஏவுகணைகளைப் பயன்படுத்தியுள்ளது என்ற ஆலோசனையைப் பற்றி கேட்டபோது, அவர் இந்த ஆயுதங்களை பல ஏவுகணை ரொக்கெட் அமைப்புகள் என்று விபரித்துள்ளனர்.
 
இது அதிக எண்ணிக்கையிலான வழிகாட்டப்படாத ஏவுகணைகளை ஒரு பகுதிக்குள் செலுத்துகிறது எனவும் இவற்றில் சிலவற்றில் கொத்துக் குண்டுகள் இருந்ததற்கான ஆதாரங்களும் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
 
——————————————————————————————————————————————————–கீவ், கார்கிவ் மற்றும் வின்னிட்சியா, உமான் மற்றும் செர்காசி உள்ளிட்ட பிற நகரங்களில் ரஷ்யா வான்வழித் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.
 
கீவ் அருகே உள்ள புசோவா கிராமத்தில் உள்ள மகப்பேறு மருத்துவமனை மீது ரஷ்ய ஷெல் தாக்குதல் நடத்தியதாக மருத்துவமனை நிர்வாகி கூறியுள்ளார்.
 
இதனையடுத்து அனைத்து மக்களும் கட்டடத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
 
——————————————————————————————————————————————————–தெற்கு உக்ரைனில் உள்ள கெர்சன் என்ற பிராந்திய மையம், ரஷ்ய துருப்புக்களால் சூழப்பட்டுள்ளதாக அப்பகுதியிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
நேரில் கண்ட சாட்சிகளின் கணக்குகளின்படி, ரஷ்யா கட்டுப்பாட்டில் உள்ள கிரிமியாவிற்கு அருகில் அமைந்துள்ள நகரத்தின் மீது ரஷ்ய துருப்புக்கள் இன்று காலை தரைவழித் தாக்குதலை நடத்தியது.
 
கெர்சன் நுழைவாயிலில் ரஷ்ய இராணுவம் சோதனைச் சாவடிகளை அமைக்கிறது என்று மேயர் இகோர் கோலிகாயேவ் பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.
 
——————————————————————————————————————————————————–அமெரிக்கா மற்றும் பிற நட்பு நாடுகளுடன் சேர்ந்து ஜப்பான், ரஷ்யா மீது கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
 
இதில் நாட்டின் தலைவர்கள் மற்றும் மூன்று நிதி நிறுவனங்களின் சொத்துக்கள் முடக்கம் அடங்கும்.
 
——————————————————————————————————————————————————–ரஷ்யா மற்றும் பெலாரஸை அனைத்து சர்வதேச ரக்பியிலிருந்தும் மீள் அறிவிப்பு வரும் வரை இடைநீக்கம் செய்வதாக சர்வதேச ரக்பி சம்மேளனம் அறிவித்துள்ளது.
 
——————————————————————————————————————————————————–பெலாரஷ்ய இராணுவத்தின் “மிகவும் பயிற்சி பெற்ற இராணுவப் பிரிவுகளை” ரஷ்யா தனது படையெடுப்பில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதாக உக்ரைனின் ஆயுதப்படைகள் தெரிவித்துள்ளன.
 
——————————————————————————————————————————————————–உக்ரைனுக்கு 70 மில்லியன் அவுஸ்ரேலியா டொலர்கள் இராணுவ உதவி வழங்குவதாக, அவுஸ்ரேலியா அறிவித்துள்ளது.
 
உக்ரைனுக்கு மனிதாபிமான உதவியாக தனது அரசாங்கம் 35 மில்லியன் அவுஸ்ரேலிய டொலர்களையும் வழங்கும் என பிரதமர் ஸ்கொட் மோரிசன் கூறினார்.
 
——————————————————————————————————————————————————–உக்ரைனின் வடகிழக்கு நகரமான ஓக்திர்கா மீது ரஷ்யா நடத்திய பீரங்கி தாக்குதலில் 70 உக்ரேனிய வீரர்கள் கொல்லப்பட்டதாக சுமி பிராந்தியத்தின் மாநில நிர்வாகத்தின் தலைவரான டிமிட்ரோ ஜிவிட்ஸ்கி தெரிவித்துள்ளார்.
 
மேலும் மீட்புப் பணியாளர்களும் தன்னார்வலர்களும் இடிபாடுகளில் இருந்து உடல்களை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
 
——————————————————————————————————————————————————–உக்ரைனில் உள்ள சீன தூதரகம் தற்போது தனது குடிமக்களை வெளியேற்றத் தொடங்கியுள்ளதாக அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 
நேற்று (திங்கட்கிழமை) முதல் ஒழுங்கமைக்கப்பட்ட குழு வெளியேறியதாக இவர்கள் கிவ்வில் இருந்து மால்டோவாவுக்குச் செல்லும் சீன மாணவர்கள் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
——————————————————————————————————————————————————–உக்ரைனில் நடந்த சண்டையின் போது ரஷ்யா தடைசெய்யப்பட்ட தெர்மோபரிக் எனப்படும் வெப்ப அழுத்தக் குண்டை வீசியதாக அமெரிக்காவுக்கான உக்ரைன் தூதர் ஒக்ஸானா மார்க்கரோவா தெரிவித்துள்ளார்.
 
இது ஜெனீவா உடன்பாடு மூலம் தடைசெய்யப்பட்டுள்ளது என அறிந்தும் ரஷ்யா இந்த வெற்றிட குண்டைப் பயன்படுத்தியதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
 
தெர்மோபரிக் எனப்படும் வெப்ப அழுத்த அல்லது வெற்றிடக் குண்டுகள் வழக்கமான வெடிமருந்துகளைப் பயன்படுத்துவதில்லை.
 
அதற்கு பதிலாக அவை உயர் அழுத்த வெடிபொருளால் நிரப்பப்பட்டு, சுற்றியுள்ள சூழலில் இருந்து ஒக்ஸிஜனை உறிஞ்சி மிகவும் சக்திவாய்ந்த வெடிப்பு மற்றும் அழுத்த அலையை உருவாக்குகின்றன.
 
——————————————————————————————————————————————————–ஐந்தாம் நாள் கள நிலவரம் !
 
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பால், உலகளாவிய எண்ணெய் விலை உயர்வு பிரித்தானியாவில் எதிரொலித்துள்ளது.
 
பெட்ரோலின் சராசரி விலை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரு லிட்டர் 1.51 பவுண்டுகளாக உயர்ந்தது. டீசல் 1.55 பவுண்டுகளாக உயர்ந்துள்ளது.
 
கச்சா எண்ணெயின் இரண்டாவது பெரிய ஏற்றுமதியாளராக ரஷ்யா உள்ளது. மேலும் பிரித்தானியா இறக்குமதியில் 6 சதவீதம் மட்டுமே ரஷ்யாவிலிருந்து வருகிறது.
 
பொருளாதாரத் தடைகள் உலகளவில் விநியோகத்தை கட்டுப்படுத்தலாம் மற்றும் விலைகளை உயர்த்தலாம் என்ற கவலைகள் உள்ளன.
 
——————————————————————————————————————————————————–
 
ஐரோப்பிய ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர்கள் உக்ரைனுக்கு 500 மில்லியன் யூரோக்கள் ($560 மில்லியன்) மதிப்பிலான ஆயுதங்களை கூட்டாக வழங்குவதற்கான திட்டங்களைப் பற்றி பின்னர் விவாதிக்க உள்ளனர்.
 
மேலும், இதில் ரஷ்ய படைகள், வெளிநாட்டு படைகளை விரட்டும் கெய்வின் முயற்சிகளுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்ட தற்காப்பு ஆயுதங்கள் அடங்கும்.
 
——————————————————————————————————————————————————–
 
கிழக்கு உக்ரைன் நகரமான கார்கிவ் மீது ரஷ்யா நடத்திய ரொக்கெட் தாக்குதல்களால், டசன் கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் உட்துறை அமைச்சக ஆலோசகர் அன்டன் ஹெராஷ்செங்கோ தெரிவித்துள்ளார்.
 
மேலும், நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளதாக அவர் வெளியிட்டுள்ள பேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ளார்.
 
ஹெராஷ்செங்கோவின் கருத்துக்கள் குறித்து ரஷ்யா தரப்பில் இருந்து உடனடி கருத்து எதுவும் வெளியாகவில்லை.
 
——————————————————————————————————————————————————–
 
போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இருநாடுகளும் இணங்குவதற்கு குறைந்த அளவிலான வாய்ப்புகளே இருப்பதாக கூறப்படுகின்றது.
 
இந்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே ரஷ்யா தொடர்ந்து சண்டையிடுவதாகத் தெரிகிறது.
 
ஆகவே இரு தரப்பினரும் எவ்வாறு போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு வர முடியும் என்பதைப் பார்ப்பது கடினம் என அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
 
——————————————————————————————————————————————————–
 
ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கைக்கான பிரதிநிதி, உக்ரைன் மோதல் குறித்து விவாதிக்க முகாமின் பாதுகாப்பு அமைச்சர்களுடன் ஒரு கூட்டத்தைக் கூட்டுகிறார்.
 
ஜோசப் பொரெல் ஃபோன்டெல்லெஸ் வெளியிட்ட ட்வீட்டின்படி, நிகழ்ச்சி நிரல் “அவசர தேவைகள்” மற்றும் உக்ரேனியர்களுக்கு முகாமின் உதவியை ஒருங்கிணைத்தல் ஆகியவற்றை மையமாகக் கொண்டிருக்கும்.
 
முன்னதாக, உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, ஐரோப்பிய ஒன்றியத்தில் நாடு உடனடியாக இணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
 
——————————————————————————————————————————————————–
 
ரஷ்யப் படைகள் உக்ரைனுக்குள் நுழைந்த ஐந்தாவது நாளில், இரு நாடுகளின் பிரதிநிதிகளும் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளனர்.
 
உக்ரைன் ஜனாதிபதியின் அலுவலகம் உடனடி போர் நிறுத்தம் மற்றும் ரஷ்ய படைகளை திரும்பப் பெற விரும்புவதாகக் கூறுகிறது.
 
இதற்கிடையில், ரஷ்ய பேச்சுவார்த்தையாளர் விளாடிமிர் மெடின்ஸ்கியின் கூற்றுப்படி, மாஸ்கோ இரு தரப்பு நலன்களுக்கும் ஒரு உடன்பாட்டை எட்ட விரும்புகிறது.
 
கூட்டம் தொடங்குவதற்கு முன், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ரஷ்ய துருப்புக்களை தங்கள் ஆயுதங்களை கீழே வைக்குமாறு வலியுறுத்தினார், மேலும் ஐரோப்பிய ஒன்றியம் உக்ரைனுக்கு உடனடியாக அந்த முகாமின் உறுப்புரிமையை வழங்குமாறு அழைப்பு விடுத்தார்.
 
——————————————————————————————————————————————————–
 
ரஷ்யாவிடம் சுமார் 630 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கையிருப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த பணம் நிறைய டொலர், யூரோ மற்றும் ஸ்டெர்லிங் மற்றும் தங்கம் போன்ற வெளிநாட்டு நாணயங்களில் சேமிக்கப்படுவதால், ரஷ்யாவின் மத்திய வங்கியுடன் கையாள்வதற்கான மேற்கத்திய தடையானது ரஷ்யாவை பணமாக அணுகுவதைத் தடுக்கிறது.
 
——————————————————————————————————————————————————–
 
ரூபிள் வீழ்ச்சியை அனுப்பிய மேற்கத்திய நாடுகளால் விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளை அகற்ற ரஷ்யா திட்டமிட்டுள்ளது என கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
 
‘ரஷ்யா மீதான மேற்கத்திய தடைகள் கடினமானவை என்றாலும் நமது நாட்டிற்கு சேதத்தை ஈடுசெய்ய தேவையான ஆற்றல் உள்ளது’ என அவர் மேலும் தெரிவித்தார்.
 
அத்துடன், பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொள்ளுவது குறித்து நிதியமைச்சர் மற்றும் மத்திய வங்கி ஆளுநர் உட்பட முக்கிய அமைச்சர்களை ஜனாதிபதி புடின் சந்திப்பார் என்றும் அவர் கூறினார்.
 
பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் சேர்ந்து, மேற்கு நாடுகளில் உள்ள நிதிச் சந்தைகளில் இருந்து ரஷ்யாவின் வங்கிகளைத் துண்டித்து.
 
இதன் விளைவாக, ரஷ்யாவின் மத்திய வங்கி அதன் முக்கிய வட்டி வீதத்தை 9.5 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக இருமடங்காக அதிகரித்துள்ளது.
 
——————————————————————————————————————————————————–
 
தனது நாட்டுக்கு உடனடி உறுப்புரிமை வழங்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தை உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.
 
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘எங்கள் இலக்கு அனைத்து ஐரோப்பியர்களுடனும் ஒன்றாக இருக்க வேண்டும், மிக முக்கியமாக, சமமான நிலையில் இருக்க வேண்டும். இது நியாயமானது என்று நான் நம்புகிறேன். அது சாத்தியம் என்று நான் நம்புகிறேன்’ என கூறினார்.
 
மேலும் ஒரு காணொளி அறிக்கையில், ரஷ்ய வீரர்கள் தங்கள் ஆயுதங்களைக் கீழே போடுமாறு ஜெலென்ஸ்கி வலியுறுத்தினார்.
 
‘உங்கள் ஆயுதங்களை கைவிடுங்கள். இங்கிருந்து வெளியேறுங்கள். உங்கள் தளபதிகளை நம்பாதீர்கள். உங்கள் பிரச்சாரகர்களை நம்பாதீர்கள். உங்கள் உயிரைக் காப்பாற்றுங்கள்’ என்று அவர் கூறினார்.
 
——————————————————————————————————————————————————–
 
ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கியதில் இருந்து 500,000 க்கும் மேற்பட்ட மக்கள் உக்ரைனில் இருந்து வெளியேறியுள்ளனர் என்று அகதிகளுக்கான ஐநா உயர் ஆணையர் பிலிப்போ கிராண்டி தெரிவித்துள்ளார்.
 
——————————————————————————————————————————————————–
 
உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை பெலாரஷிய எல்லையில் தொடங்கியுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதியின் ஆலோசகர் மைக்கைலோ பொடோலியாக் தெரிவித்துள்ளார்.
 
முன்னதாக உக்ரைன் ஜனாதிபதியின் அலுவலகம், கலந்துரையாடலுக்கான உக்ரைனின் இலக்கு உடனடியான போர்நிறுத்தம் மற்றும் உக்ரைனில் இருந்து அனைத்து ரஷ்ய படைகளையும் திரும்பப் பெறுவது எனக் கூறியது.
 
——————————————————————————————————————————————————–
 
ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ரஷ்யாவின் விமானங்களுக்கு தங்கள் வான்வெளியை மூடிவிட்டதால், ரஷ்ய விமான நிறுவனங்கள் பால்டிக் கடலில் உள்ள அதன் கலினின்கிராட் என்கிளேவுக்குச் சென்று திரும்பும் பாதையில் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.
 
கலினின்கிராட், ரஷ்யாவிற்கு சொந்தமான 15,000 சதுர கிமீ (9,320 சதுர மைல்கள்) நிலப்பரப்பு, பிரதான நிலப்பகுதிக்கு மேற்கே 300 கிமீ தொலைவில் அமைந்துள்ளது மற்றும் பால்டிக் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளான லிதுவேனியா மற்றும் போலந்துக்கு இடையில் அமைந்துள்ளது.
 
லாட்வியா மற்றும் லிதுவேனியா மீது நேரடியாகப் பறப்பதற்குப் பதிலாக, ரஷ்ய விமானங்கள் இப்போது வடக்கே செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நோக்கிப் பறக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. பின்னர் பால்டிக் கடற்கரையைச் சுற்றி வருகின்றன.
 
ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் பிரித்தானியாவுடன் இணைந்து ரஷ்ய விமானங்களை அதன் வான்வெளியில் இருந்து தடை செய்யும் சமீபத்திய நாடாக கனடா மாறியுள்ளது.
 
பழிவாங்கும் நடவடிக்கையாக, ரஷ்யாவின் தேசிய விமான நிறுவனமான எயிரோ ஃப்ளோட் ஐரோப்பிய இடங்களுக்கான அனைத்து விமானங்களையும் ரத்து செய்வதாகக் கூறியுள்ளது.
 
———————————————————&mdas



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies