ரஷ்யா- உக்ரைன் போர்: கள நிலவரம் மூன்றாம்நாள்

26 Feb,2022
 

 
 
ரஷ்யப் படைகளால் இதுவரை மூன்று குழந்தைகள் உட்பட 198 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைனின் சுகாதார அமைச்சர் விக்டர் லியாஷ்கோ தெரிவித்துள்ளார்.
 
 
 
33 குழந்தைகள் உட்பட 1,115 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
 
—————————————————————————————————————————–
 
பிரித்தானியா உட்பட பிற 25 நாடுகள், உக்ரைனுக்கு மனிதாபிமான உதவி அல்லது ஆயுத உதவி வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக பிரித்தானிய ஆயுதப் படை அமைச்சர் ஜேம்ஸ் ஹீப்பி தெரிவித்துள்ளார்.
 
ஸ்விஃப்ட் சர்வதேச வங்கி பரிமாற்ற அமைப்பில் இருந்து ரஷ்யாவை அகற்றுவதற்கு மற்ற நாடுகளை சம்மதிக்க வைக்க பிரிட்டிஷ் இராஜதந்திர முயற்சிகள் தொடர்ந்து நடந்து வருவதாகவும் அவர் கூறினார்.
 
—————————————————————————————————————————–
 
உக்ரைனில் சிறப்பு இராணுவ நடவடிக்கை என்று ரஷ்யா கூறுவதை 10 உள்ளூர் ஊடகங்கள் தவறாக சித்தரித்து அங்கு நிகழ்வுகள் பற்றிய தவறான தகவல்களை விநியோகித்ததாக ரஷ்யாவின் தகவல் தொடர்பு ஒழுங்குமுறை அதிகாரி குற்றம் சாட்டினார்.
 
—————————————————————————————————————————–
 
உக்ரைனுக்கு ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமை வழங்கப்பட வேண்டும் என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘நீண்டகால விவாதத்தை ஒருமுறை முடித்துவிட்டு, ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைனின் உறுப்பினர் குறித்து முடிவெடுப்பதற்கு இது ஒரு முக்கியமான தருணம்’ என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
 
 
 
ஐரோப்பிய சபையின் தலைவர் சார்லஸ் மைக்கேலுடன் மேலும் பயனுள்ள உதவி மற்றும் உக்ரேனியர்களின் சுதந்திர எதிர்காலத்திற்கான வீரமிக்க போராட்டம் பற்றி விவாதித்ததாக அவர் மேலும் பதிவிட்டுள்ளார்.
 
—————————————————————————————————————————–
 
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள உக்ரைன் தூதரகத்தின் ஊழியர்கள் லாத்வியாவிற்கு இடம்பெயர்ந்து வருவதாக லாத்வியா வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
‘இது அவர்களின் வேண்டுகோள், நாங்கள் உடனடியாக ஒப்புக்கொண்டோம். இந்த செயற்பாட்டில் நாங்கள் அவர்களுக்கு உதவுகிறோம் மற்றும் குடியேற உதவுகிறோம்’ என்று லாத்வியா வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜானிஸ் பெக்கரிஸ் கூறினார்.
 
—————————————————————————————————————————–
 
ரஷ்யர்களுக்கு எதிராக உக்ரேனியப் படைகள் பலமான பாதுகாப்பை மேற்கொள்ள முடிந்துள்ளதாக ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் ஆலோசகர் மைக்கைலோ பொடோலியாக் தெரிவித்தார்.
 
ரஷ்யப் படைகள் இன்னும் ஏராளமான துருப்புக்கள் மற்றும் உபகரணங்களை நகருக்குள் கொண்டு செல்ல முயற்சித்து வருகின்றன என்றும் மேலும் புறநகரில் சண்டை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
 
—————————————————————————————————————————–
 
தலைநகர் கீவ்வில் ஒரே இரவில் நடந்த சண்டையில் 35பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் இரண்டு குழந்தைகளும் அடங்குவதாகவும் நகரின் மேயர் விட்டலி கிளிட்ச்கோ தெரிவித்துள்ளார்.
 
எனினும், அவர் பொதுமக்களை மட்டும் குறிப்பிடுகிறாரா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
 
 
 
தலைநகர் கீவ்வில் தற்போது பெரிய ரஷ்ய இராணுவ பிரசன்னம் இல்லை என்றும், ஆனால் ரஷ்ய குழுக்கள் தீவிரமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
 
—————————————————————————————————————————–
 
800 க்கும் மேற்பட்ட உக்ரேனிய இராணுவ உள்கட்டமைப்பு தளங்கள் அழிக்கப்பட்டடுள்ளதாகவும் ரஷ்யா இதுவரை 800க்கும் மேற்பட்ட உக்ரேனிய இராணுவ உள்கட்டமைப்பு தளங்களின் செயல்பாடுகளை முடக்கியுள்ளது என்றும் மாஸ்கோவில் உள்ள பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
14 இராணுவ விமானநிலையங்கள், 19 கட்டளை நிலையங்கள், 24 S-300 விமான எதிர்ப்பு ஏவுகணை அமைப்புகள் மற்றும் 48 ரேடார் நிலையங்கள் அழிக்கப்பட்டதாக அமைச்சின் செய்தித் தொடர்பாளர் இகோர் கொனாஷென்கோவ் தெரிவித்தார். மேலும், எட்டு உக்ரைன் கடற்படை படகுகள் தாக்கப்பட்டதாக அவர் கூறினார்.
 
—————————————————————————————————————————–
 
உக்ரைனுக்குள் முன்னேறி வரும் ரஷ்ய துருப்புக்களுடன் போரிட, பிரான்ஸ் உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்புகிறது
 
—————————————————————————————————————————–
 
ரஷ்ய இராணுவம் உக்ரைனின் இராணுவ உட்கட்டமைப்பை, விமானம் மற்றும் கடல் சார்ந்த ஏவுகணைகள் மூலம் குறிவைத்துள்ளதாக உக்ரைனிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
‘இரவில், ரஷ்ய கூட்டமைப்பின் ஆயுதப் படைகள், உக்ரைனின் இராணுவ உட்கட்டமைப்பிற்கு எதிராக வான் மற்றும் கடலில் ஏவப்பட்ட கப்பல் ஏவுகணைகளைப் பயன்படுத்தி நீண்ட தூர துல்லியமான ஆயுதங்களுடன் மோதலைத் தொடங்கின’ என்று பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இகோர் கொனாஷென்கோவ் தெரிவித்தார்.
 
—————————————————————————————————————————–
 
ரஷ்யாவின் உக்ரைன் படையெடுப்பு தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதாரத் தடைகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, பிரெஞ்சு கயானாவில் இருந்து விண்வெளி ஏவுதல்களை ரஷ்யா நிறுத்துகிறது மற்றும் அதன் தொழில்நுட்ப பணியாளர்களை திரும்பப் பெறுகிறது என்று விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
—————————————————————————————————————————–
 
போலந்து பிரதமர் மேட்யூஸ் மொராவிக்கி மற்றும் லித்துவேனியா ஜனாதிபதி கீதானாஸ் நௌசேடா ஆகியோர் ஜேர்மனியின் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் பெர்லினில் சந்தித்து ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள் குறித்து விவாதித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
—————————————————————————————————————————–
 
உக்ரைனுக்கு 600 மில்லியன் டொலர்கள் வரை உடனடி இராணுவ உதவி வழங்குவதற்கான ஆணையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார்.
 
250 மில்லியன் டொலர்களை சட்டத்தின் எந்த விதியையும் பொருட்படுத்தாமல் வழங்குமாறு வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கனுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
 
 
 
மேலும், 350 மில்லியன் டொலர்கள், பாதுகாப்பு கட்டுரைகள் மற்றும் பாதுகாப்பு துறையின் சேவைகள் மற்றும் இராணுவ கல்வி மற்றும் பயிற்சிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
 
—————————————————————————————————————————–
 
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் அப் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ், ரஷ்ய அரசாங்க ஊடகங்கள் உலகில் எங்கும் அதன் தளங்களில் விளம்பரங்கள் அல்லது பணமாக்குவதைத் தடுக்கும் என்று அறிவித்துள்ளது.
 
இந்த புதிய நடவடிக்கைகள் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டு, வார இறுதியில் தொடரும் என பேஸ்புக்கின் பாதுகாப்புக் கொள்கையின் தலைவர் நதானியேல் க்ளீச்சர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
 
—————————————————————————————————————————–
 
ரஷ்ய துருப்புக்களிடம் சரணடைய இராணுவத்தை அழைத்ததாக வெளியான செய்திகளை தொடர்ந்து தலைநகர் கீவ்வின் வீதிகளில் நடந்து செல்வது போன்ற ஒரு சுய காணொளியொன்றை உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வெளியிட்டுள்ளார்.
 
அதில், ‘நான் இங்கே இருக்கிறேன், நாங்கள் எங்கள் ஆயுதங்களை கீழே வைக்க மாட்டோம், நாங்கள் எங்கள் மாநிலத்தை பாதுகாப்போம்’ என கூறினார்.
 
முன்னதாக வெளியான செய்தியில், ஆயுதங்களைக் கீழே போடுமாறு இராணுவத்தை உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அழைத்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.
 
—————————————————————————————————————————–
 
உக்ரைனின் தெற்குப் பகுதியான சபோரிஸ்ஸியாவில் உள்ள மெலிடோபோல் நகரை ரஷ்யப் படைகள் கைப்பற்றியதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகத்தை மேற்கோள் காட்டி ரஷ்ய செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 
மெலிடோபோல் என்பது உக்ரைனின் முக்கிய துறைமுகமான மரியுபோல் அருகே உள்ள ஒரு நடுத்தர நகரமாகும்.
 
—————————————————————————————————————————–
 
தீவிரமடைந்துவரும் மோதலில் ரஷ்ய இராணுவத்தின் 3,500க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக, உக்ரைன் தெரிவித்துள்ளது.
 
இதுதவிர, கிட்டத்தட்ட 200 பேர் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ளதாக உக்ரேனிய இராணுவம் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் குறிப்பிட்டுள்ளது.
 
 
 
ரஷ்யா இதுவரை 14 விமானங்கள், 8 ஹெலிகொப்டர்கள் மற்றும் 102 டாங்கிகளை இழந்துள்ளதாகவும் உக்ரைன் கூறுகின்றது.
 
எனினும், ரஷ்யா இதுவரை எந்த உயிரிழப்புகளையும் ஒப்புக் கொள்ளவில்லை.
 
—————————————————————————————————————————–
 
சுமி, பொல்டாவா மற்றும் மரியுபோல் நகரங்களுக்கு அருகிலுள்ள பகுதிகள் நேற்று (வெள்ளிக்கிழமை) வான்வழித் தாக்குதல்களால் தாக்கப்பட்டதாக உக்ரைனின் இராணுவக் கட்டளை கூறியுள்ளது,
 
கருங்கடலில் இருந்து நாட்டை நோக்கி ஏவப்பட்ட ரஷ்ய கலிப்ர் ஏவுகணைகள் இப்பகுதிகளை தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
—————————————————————————————————————————–
 
உக்ரைனை விட்டு வெளியேற வேண்டுமென்ற அமெரிக்காவின் கோரிக்கையை உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி நிராகரித்ததாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
 
‘இங்கே சண்டை நடந்துக் கொண்டிருக்கின்றது. எனக்கு வெடிமருந்துகள் தேவை சவாரி அல்ல’ என்று உக்ரைன் ஜனாதிபதி கூறியள்ளார்.
 
 
 
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கு உதவ அமெரிக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக கூறியுள்ளது.
 
முன்னாள் நகைச்சுவை நடிகரும் நடிகருமான உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ரஷ்ய படையெடுப்பிற்கு பதிலளித்ததற்காக சமூக ஊடகங்களில் பரவலாகப் பாராட்டப்பட்டார்.
 
—————————————————————————————————————————–
 
ரஷ்ய இராணுவப் படைகளின் தொடர்ச்சியான தாக்குதல்கள் இருந்தபோதிலும், உக்ரைன் முக்கிய நகரங்களைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது என பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
ரஷ்யப் படைகள் தலைநகர் கிவ்வை சுற்றி வளைக்க முயற்சிப்பதற்காக பல முனைகளில் இருந்து ஆதாயங்களைச் செய்து வருவதாகவும், ஆனால் உக்ரேனிய ஆயுதப் படைகளிடமிருந்து வலுவான எதிர்ப்பை எதிர்கொண்டதாகவும் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சக அறிக்கை கூறியது.
 
தெற்கு உக்ரைனில் அமைந்துள்ள மரியுபோல் மற்றும் மெலிடோபோல் நகரங்களுக்கு இடையே உள்ள பகுதியில் ரஷ்யப் படைகள் தரையிறங்கியுள்ளன என்று பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது.
 
—————————————————————————————————————————–
 
உக்ரேனிய தலைநகர் கீவ்வில் உள்ள வீதிகளில் ரஷ்ய படையினருடனான மோதல் தீவிரமடைந்துள்ளதாக, உக்ரைனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
குடியிருப்பாளர்கள் தங்குமிடங்களில் தங்குமாறும், ஜன்னல்கள் அல்லது பால்கனிகளை அணுக வேண்டாம் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
 
—————————————————————————————————————————–
 
ரஷ்யப் படைகளால் கைப்பற்றப்பட்ட செர்னோபில் அணுமின் நிலையத்திற்கு அருகே கதிர்வீச்சு கசிவு அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
1986ஆம் ஆண்டில் உலகின் மிக மோசமான அணுசக்தி பேரழிவின் தளமான செர்னோபில் அணுமின் நிலையத்தின் கட்டுப்பாட்டை ரஷ்ய துருப்புக்கள் கடந்த வியாழக்கிழமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
 
 
 
இந்தநிலையில் அங்கு கதிர்வீச்சு அளவு 20 மடங்கு அதிகரித்துள்ளதாக அங்குள்ள கண்காணிப்பு நிலையங்கள் தெரிவித்துள்ளன.
ஆனால் வல்லுநர்கள் மற்றொரு பெரிய அணுசக்தி பேரழிவு மிகவும் சாத்தியமில்லை என்று கூறுகிறார்கள்.
 
கைவிடப்பட்ட ஆலையைச் சுற்றியுள்ள 4,000-ச.கிமீ (2,485 சதுர மைல்) விலக்கு மண்டலத்தில் கனரக இராணுவ வாகனங்கள் அசுத்தமான மண்ணைக் கிளறிவிட்டதால் இந்த உயர்வு ஏற்பட்டது என்று உக்ரைனின் மாநில அணுசக்தி ஒழுங்குமுறை ஆய்வாளர் தெரிவித்துள்ளது.
 
—————————————————————————————————————————–
 
உக்ரைனைக்கு இராணுவ உதவிகளை வழங்கியுள்ள சுவீடன் அரசாங்கத்துக்கு, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
நேட்டோ நாடுகள் நேரடியாக உதவ முடியாத நிலையில், ரஷ்யாவின் தாக்குதல்களை எதிர்கொள்ளும் உக்ரைனிய இராணுவத்தினருக்கு சுவீடன் ஆயுதங்களை வழங்கியுள்ளது.
 
இந்த செயற்பாடு புடினை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியுள்ள நேட்டோ அமைப்பில் சேர சுவீடன் மற்றும் பின்லாந்து முயற்சித்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என புடின் எச்சரித்துள்ளார்.
 
—————————————————————————————————————————–
 
உக்ரைன் மீதான இராணுவ தாக்குதல் காரணமாக ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்பில் இருந்து ரஷ்யா இடைநீக்கம் செய்யப்படுவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
 
இது உடனடியாக அமுலுக்கு வருவதாகவும், எனினும் இது தற்காலிகமான ஒன்று என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இடைநீக்கம் செய்யப்பட்டாலும் ரஷ்யாவுடன் தகவல் தொடர்பு வழிகள் முடக்கப்படாது என்றும் ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்பின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
—————————————————————————————————————————–
 
உக்ரைன் அரசாங்கம் மற்றும் இராணுவத்தைச் சேர்ந்த நாஜி ஆதரவு தேசியவாதிகளிடமிருந்து நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றுமாறு அந்த நாட்டு இராணுவத்தினருக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் வேண்டுகோள் விடத்துள்ளார்.
 
உக்ரைனில் மேற்கொள்ளப்பட்டு வரும் ராணுவ நடவடிக்கைககளின் நிலவரம் குறித்து விவாதிப்பதற்காக, நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ரஷ்ய பாதுகாப்பு சபை கூட்டத்தில், அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்தார்.
 
 
 
இதன்போது கருத்து தெரிவித்த விளாடிமீர் புடின், ‘உக்ரைனில் தற்போது அந்த நாட்டின் சாதாரண படைகளுடன் ரஷ்ய வீரர்கள் சண்டையிடவில்லை. அதற்குப் பதிலாக, உக்ரைன் படைகளில் ஊடுருவியுள்ள நாஜி ஆதரவாளர்கள் மற்றும் தீவிர தேசியவாத சக்திகளுக்கு எதிராகத்தான் ரஷ்யா போரிடுகிறது.
 
அந்த தீயசக்திகள்தான் கிழக்கு உக்ரைனில் டான்பாஸில் (கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள டொன்ட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளை உள்ளடக்கிய பிராந்தியம்) பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றன என்பது உக்ரைன் படையினருக்கும் நன்கு தெரிந்திருக்கும்.
 
தற்போது கிடைத்துள்ள உளவுத் தகவலின்படி, அந்தத் தீய சக்திகள் கீவ், கார்கோவ் போன்ற முக்கிய நகரங்களில் பொதுமக்கள் இருப்பிடங்களில் ஏவுகணைகள் உள்ளிட்ட சக்திவாய்ந்த ஆயுதங்களை நிறுத்தி வருகின்றன.
 
இதன் மூலம், பொதுமக்களுக்கு உயிரிழப்பை ஏற்படுத்தி, அந்தப் பழியை ரஷ்யா மீது சுமத்துவதற்காக இந்தச் செயலில் அந்த சக்திகள் ஈடுபட்டுள்ளன.
 
எனவே, தங்களது குழந்தைகள், மனைவிகள், பெற்றோர்கள், வயதானவர்களை தங்களது சுயநலத்துக்காக அந்த நாஜி ஆதரவாளர்கள் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்த உக்ரைன் இராணுவத்தினர் அனுமதிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
 
எனவே, அவர்கள் அதிகாரத்தை தங்களது கைகளில் எடுத்துக்கொள்ள வேண்டும். உக்ரைனில் தற்போது அதிகாரம் செலுத்தி வரும் தீய சக்திகளைவிட, அந்த நாட்டு இராணுவப் படைகளுடன் ரஷ்யா பேச்சுவார்த்தை நடத்தினால்தான் தற்போதையப் பிரச்னைகளுக்கு உடனடித் தீர்வு காண முடியும்’ என கூறினார்.
 
—————————————————————————————————————————–
 
ரஷ்யா- உக்ரைன் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், கூட்டணியில் கிழக்கு நாடுகளுக்கு கூடுதல் படைகளை அனுப்பவுள்ளதாக நேட்டோ தெரிவித்துள்ளது.
 
நேற்று (வெள்ளிக்கிழமை) நேட்டோ கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு நேட்டோ தலைவர்களின் கூட்டறிக்கையொன்றை வெளியிட்டனர்.
 
இந்த அறிக்கையிலேயே அந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘உக்ரைன் மீதான தாக்குதலுக்கு ரஷ்யாவின் தாக்குதலை கண்டிக்கின்றோம். உடனடியாக தாக்குதலை நிறுத்திவிட்டு ஆக்கிரமிப்புகளிலிருந்து ரஷ்ய இராணுவத்தினர் வெளியேற வேண்டும்.
 
உக்ரைன் தொடர்ந்து தற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதால் அந்நாட்டிற்கு தேவையான அனைத்தையும் வழங்குவோம். மற்றவர்களை உதவ அழைப்போம்.
 
நேட்டோ கூட்டணி நாடுகளின் பாதுகாப்பை கருதி கிழக்குப் பகுதிகளில் உள்ள நாடுகளுக்கு கூடுதல் தற்காப்புப் படைகளை அனுப்புகிறோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
—————————————————————————————————————————–
 
எதிர்வரும் சீசனில் ஃபார்முலா- 1 கிராண்ட் பிரிக்ஸ் நடத்தும் உரிமையை ரஷ்யாவிடம் இருந்து பறித்துள்ளதாக FIA அறிவித்துள்ளது.
 
உலகின் அதிவேக கார்பந்தயத் தொடரான ஃபார்முலா-1இன் தலைமையகம், இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், ‘தற்போதைய சூழ்நிலையில் ரஷ்ய கிராண்ட் பிரிக்ஸ் நடத்துவது சாத்தியமற்றது’ என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
 
—————————————————————————————————————————–
 
உக்ரைன் நெருக்கடியை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கும் முயற்சிகளில் சீனா, ரஷ்யாவை ஆதரிக்கிறது என்று அந்நாட்டின் ஜனாதிபதி ஸி ஜின்பிங், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினிடம் கூறியதாக சீன அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
 
இருநாட்டு தலைவர்கள் தொலைபேசி மூலம் நிலைமை குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக சீன அரச தொலைக்காட்சியான சிசிடிவி உறுதிப்படுத்தியுள்ளது.
 
—————————————————————————————————————————–
 
உக்ரைனில் ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்கு தனது ஆதரவைத் தெரிவிக்க, சிரிய ஜனாதிபதி பஷார் அல் அசாத் தனது நண்பரான ரஷ்யப் பிரதமர் விளாடிமிர் புடினை அழைத்ததாக சிரிய ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
‘அழைப்பின் போது, அவர்கள் உக்ரைனின் நிலைமை மற்றும் டான்பாஸ் பிராந்தியத்தில் உள்ள பொதுமக்களைப் பாதுகாக்க ரஷ்ய கூட்டமைப்பின் சிறப்பு இராணுவ நடவடிக்கை பற்றி பேசினர்,’ என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
—————————————————————————————————————————–
 
ரஷ்யப் படைகள் தலைநகர் கீவ்வுக்குள் நுழைந்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
 
முன்னதாக ரஷ்ய இராணுவ டாங்கிகள், வடக்கு பகுதிக்குள் நுழைந்துள்ளதாக வெளியான செய்தியை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 
—————————————————————————————————————————–
‘சிரியா தனது நிலைப்பாட்டின் சரியான நம்பிக்கையின் அடிப்படையில், ரஷ்ய கூட்டமைப்புடன் நிற்கிறது என்பதை அவரது அசாத் வலியுறுத்தினார்’ என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ரஷ்யாவின் படையெடுப்பு நாட்டிற்கு உலகளாவிய கொடுப்பனவு அமைப்பான, சொசைட்டி ஃபார் வேர்ல்டுவைட் இன்டர்பேங்க் ஃபைனான்சியல் டெலிகம்யூனிகேஷன் (SWIFT) வலையமைப்பிலிருந்து ரஷ்யாவை வெளியேற்ற தூண்டியுள்ளது.
 
இது உலகின் பெரும்பாலான நாடுகளுடன் வர்த்தகம் செய்யும் ரஷ்யாவின் திறனை முடக்கி, ரஷ்யப் பொருளாதாரத்திற்கு கடும் அடியை ஏற்படுத்தும்.
 
—————————————————————————————————————————–
 
உக்ரைன் இராணுவம் தனது ஆயுதங்களைக் கைவிட்டவுடன் ரஷ்யா, உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருக்கும் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
 
உக்ரேனிய மக்கள் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்றும், அவர்களின் விதியை சுதந்திரமாக வரையறுத்துக்கொள்ளவும் ரஷ்யா விரும்புவதாகவும் செர்ஜி லாவ்ரோவ் கூறினார்.
 
ஆனால், கிரெம்ளின் ரஷ்யாவின் அண்டை நாடை நவ-நாஜிக்கள் ஆட்சி செய்ய விரும்பவில்லை என்று எச்சரித்தார்.
 
தற்போதைய உக்ரேனிய அரசாங்கத்தை ஜனநாயக அரசாங்கம் என்று அங்கீகரிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ரஷ்யா காணவில்லை என்றும் அவர் கூறினார்.
 
இதனிடையே, ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் வைத்திருக்கும் உக்ரைனில் உள்ள இரண்டு முக்கிய பிராந்தியங்களின் பிரதிநிதிகளை, வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ் சந்திப்பதைக் காட்டும் காணொளியொன்றை ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
 
—————————————————————————————————————————–
 
எறிகணைத் தாக்குதல்கள் மற்றும் வான்வழித் தாக்குதல்கள் காரணமாக உக்ரைனில் குறைந்தது 25பேர் உயிரிழந்துள்ளதாக ஐ.நா. மனித உரிமை அலுவலகம் தெரிவித்துள்ளது.
 
மேலும், 102பேர் காயமடைந்துள்ளதாகவும் பாதிப்பு எண்ணிக்கை குறைவான மதிப்பீடாக இருக்கலாம் எனவும் ஐநா மனித உரிமை அலுவலகம் கூறியுள்ளது.
 
—————————————————————————————————————————–
 
கியேவில் உள்ள உள்ளூர் அதிகாரிகள், நகரின் வடமேற்கு ஓபோலோன் பகுதியில் வசிப்பவர்களை வெளியில் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.
 
—————————————————————————————————————————–
 
போர் பதற்றத்திற்கு மத்தியில், ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஊடகவியலாளர் சந்திப்பில் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
 
ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிக்க விரும்பவில்லை எனவும் மாறாக இதுவொரு இராணுவ நடவடிக்கை எனவும் விளாடிமிர் புடினின் அறிவிப்பை அவர் மீண்டும் கூறுகிறார்.
 
ஒரு ஜனநாயக நாட்டை வீழ்த்துவது ரஷ்யாவின் விருப்பமா என்று கேட்டதற்கு? லாவ்ரோவ் ‘அந்த நாட்டை ஜனநாயக நாடு என்று அழைக்க முடியாது’ என்று குறிப்பிடுகிறார்.
 
உக்ரைன் நாட்டில் ரஷ்ய மொழி பேசும் மக்களை நடத்தும் விதம் குறித்து அவர் கவலை தெரிவித்தார்.
 
—————————————————————————————————————————–
 
உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் நடவடிக்கையை ‘படையெடுப்பு’ என்று அழைக்க சீன வெளியுறவு அமைச்சகம் மறுத்து வருகிறது.
 
நீண்டகால ரஷ்ய நட்பு நாடான சீனாவின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின், பெய்ஜிங்கில் நடைபெற்ற ஊடக சந்திப்பில், அனைத்து நாடுகளின் பிராந்திய ஒருமைப்பாட்டையும் மதிக்கும் அதே வேளையில், பாதுகாப்பு விவகாரங்களில் ரஷ்யாவின் நியாயமான கவலைகளையும் புரிந்துகொள்கிறது என்று சீனாவின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.
 
சீனா இன்னும் உக்ரைனை ஒரு சட்டபூர்வமான நாடாக அங்கீகரித்து வருவதாகவும், அரசியல் தீர்வுக்கான கதவு உக்ரைனில் இன்னும் மூடப்படவில்லை என்றும் நம்புவதாகவும், ஆனால் எப்படி பேச்சுவார்த்தை நடத்துவது என்பது குறித்த பரிந்துரைகளை வழங்கவில்லை என்றும் அவர் கூறினார்.
 
உக்ரைனின் கிழக்கில் உள்ள டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகிய சுயமாக அறிவிக்கப்பட்ட பிரிந்து சென்ற குடியரசுகளை பெய்ஜிங் அங்கீகரிக்குமா இல்லையா என்பதையும் அவர் கூறவில்லை.
 
—————————————————————————————————————————–
 
உக்ரைன் மீதான படையெடுப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்து ரஷ்யாவில் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 1,800க்கும் மேற்பட்டோரை உடனடியாக விடுவிக்குமாறு ஐநா மனித உரிமைகள் அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் ரவினா ஷம்தாசனி அழைப்பு விடுத்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘கருத்துச் சுதந்திரம் அல்லது அமைதியான கூட்டத்திற்கான உரிமைகளைப் பயன்படுத்துவதற்காக தனிநபர்களை கைது செய்வது தன்னிச்சையான சுதந்திரத்தை பறிக்கும் செயலாகும்’ என கூறினார்.
 
ரஷ்யா முழுவதும் 60 நகரங்களில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் குறைந்தது 1,831 எதிர்ப்பாளர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
 
—————————————————————————————————————————–ரஷ்யாவின் படையெடுப்பை அடுத்து, இந்த ஆண்டுக்கான சம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியை செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இருந்து பாரிஸுக்கு மாற்றப்போவதாக யு.இ.எஃப்.ஏ. அறிவித்துள்ளது.
 
உக்ரேனிய மற்றும் ரஷ்ய கழகங்கள் மற்றும் யுஇஎஃப்ஏ போட்டிகளில் போட்டியிடும் தேசிய அணிகளின் சொந்த மைதான போட்டிகள் ஆகியன மேலும் அறிவிப்பு வரும் வரை நடுநிலையான இடங்களில் விளையாடப்படும் என்றும் ஐரோப்பிய கால்பந்தின் ஆளும் குழு தெரிவித்துள்ளது.
 
—————————————————————————————————————————–பிரித்தானியாவுடன் தொடர்புடைய அல்லது பதிவுசெய்யப்பட்ட நிறுவனத்தால், சொந்தமான, குத்தகைக்கு அல்லது இயக்கப்படும் விமானங்கள் ரஷ்ய வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு ரஷ்ய விமானப் போக்குவரத்து ஆணையம் தடை விதித்துள்ளது.
 
பிரித்தானியாவின் விமானப் போக்குவரத்து அதிகாரிகளின் நட்பற்ற முடிவுகளுக்கு இது ஒரு பதிலடி என்று ரஷ்ய விமானப் போக்குவரத்து ஆணையம் விபரித்தது.
 
உக்ரைன் மீதான படையெடுப்பிற்கு பதிலளிக்கும் வகையில், ரஷ்யாவின் முதன்மை விமான நிறுவனமான எயிரோ ஃப்ளோட்டை பிரித்தானியா தடை செய்தது. இதற்கு எதிர்வினையாற்றும் வகையில் ரஷ்யாவின் இந்த தடை வருகின்றது.
 
———————————————————————————————————————&mdash



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies