பத்து நிமிஷ உடலுறவுக்கு பத்தாயிரம், பியூட்டி பார்லரில் நடந்த பலான தொழில்
26 Feb,2022
ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள செக்டார்-31 உள்ள மார்க்கெட்டில் ஒரு ஸ்பா செயல்பட்டு வருகிறது .அந்த ஸ்பாவில் பியூட்டி பார்லர் என்ற போர்வையில் பலான தொழிலை ஸ்பா ஆபரேட்டர் அபினய் மற்றும் தீபக் என்ற ஸ்பா உரிமையாளர் ஆகியோர் நடத்தி வந்தனர் .அங்கு அடிக்கடி பல வாலிபர்களுக்கு மசாஜ் செய்வது போல் விபச்சாரம் நடந்து வந்தது .இதனால் அந்த ஸ்பா ஆப்பரேட்டர் பத்து பர்சென்ட் கமிஷன் வாங்கிக்கொண்டு அந்த ஸ்பாவை பலான தொழிலுக்கு வாடகைக்கு விட்டு லட்சக்கணக்கில் சம்பாதித்து வந்தார் .
இந்த விஷயம் போலீசுக்கு ரகசியமாக கிடைத்தது .அதனால் ஒரு போலீசை மாறுவேடத்தில் கஸ்டமர் போல அங்கு அனுப்பி வைத்தனர் .அவர் அங்கு சென்று பார்த்த போது ,அங்கு விபச்சார தொழில் கொடி கட்டி நடப்பதை கண்டுபிடித்து ,மற்ற போலீஸ் படையை அங்கு வரவைத்தார் .போலீசார் அந்த பார்லரில் ரெய்டு நடத்திய போது ,அங்கு ஒரு ரூமில் ஒரு வாலிபரும் ஒரு பெண்ணும் உல்லாசத்தில் இருப்பதையும் ,இன்னொருவர் காத்திருப்பதையும் கண்டுபிடித்து அந்த இரு வாடிக்கையாளர்களான தினேஷ் மற்றும் ஹர்பிரீத் ஆகியோரை கைது செய்தனர் .மேலும் ஸ்பா ஆபரேட்டர் அபினயும் கைது செய்யப்பட்டு , ஸ்பா உரிமையாளரை கைது செய்ய அவரை தேடி வருகின்றனர் .