மருத்துவமனைக்கு வந்த ஜலஜாவை மடக்கி காருக்குள்ளேயே போலீஸ்காரர் ஜல்சா செய்தார். கதவை திறந்து பார்த்த கணவன் கெட்டிக்கார போலீசுக்கு தந்த வெகுமதி, ஒட்டுமொத்த போலீஸ்காரர்களையும், அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
திருநெல்வேலி, ஹைகிரவுண்ட் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிபவர் முருகன். இவர், நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தினுள் காருக்குள் பெண் ஒருவருடன் உல்லாசமாக இருந்துள்ளார்.
இதை பார்த்த அப்பகுதியினர் காவலர் முருகனை வெளியே அழைத்து வந்து அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேற லெவலுக்கு வைரலானது.
விசாரணையில், அந்த பெண் கங்கைகொண்டான் பகுதியை சேர்ந்தவர் என்பதும் ஏற்கனவே திருமணமான நிலையில் காவலர் முருகனுடன் தொடர்பில் இருப்பதும் தெரிய வந்தது.
அதாவது சில வருடங்களுக்கு முன்பு அந்த பெண் தனது தாயாரை ஹைகிரவுன்ட் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்து வந்தபோது காவலர் முருகன் அவருக்கு சில உதவிகளை செய்துள்ளார்.
அப்போது அவருடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதையறிந்து பெண்ணின் கணவர் மாரிமுத்து காவலருடனான தொடர்பை நிறுத்தும்படி தனது மனைவியிடம் பலமுறை எடுத்து கூறியும் அவர் கேட்கவில்லை என தெரிகிறது.
இதனால் கோபமடைந்த மாரிமுத்து கடந்த இரண்டு ஆண்டுகளாக தனது மனைவியை பிரிந்து வாழ்வதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் வேலை விஷயமாக செல்வதாக கூறி விட்டு அடிக்கடி அந்த பெண் காவலருடன் தனியாக சந்தித்து வந்துள்ளார்.
அதன்படி அரசு மருத்துமனையில் காருக்குள் வைத்து இருவரும் சந்தித்துள்ளனர். இதற்கிடையில் எதார்த்தமாக அங்கு சென்ற மாரிமுத்து தனது மனைவியின் கார் நிற்பதை கண்டு அருகில் சென்று பார்த்துள்ளார்.
அப்போது உள்ளே காவலர் முருகனுடன் தனது மனைவி சல்லாபத்தில் ஈடுபட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக மாரிமுத்து கார் கதவை திறந்து தனது மனைவி மற்றும் முருகனை சரமாரியாக தாக்கி ஹைகிரவுன்ட் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளார்.
ஆனால், அந்த பெண் தனது கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தார். அதன்பேரில், தற்போது போலீசார் மாரிமுத்து மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதற்கு மாரிமுத்து தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முருகன் தனக்கு டிஜிபி வரை செல்வாக்கு இருப்பதாக மிரட்டுவதாகவும், அவருக்கு சாதகமாக இந்த விவகாரத்தில் போலீசார் நடந்து கொள்வதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.