ராணி எலிசபெத்திற்கு கொரோனா பாதிப்பு... மருத்துவர்கள் தீவிர சிகிச்சை
20 Feb,2022
மிக லேசான அறிகுறிகளுடன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள மகாராணி எலிசபெத், எளிதான பணிகளை மேற்கொள்வார் என்று பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மிக லேசான அறிகுறிகளுடன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள மகாராணி எலிசபெத், எளிதான பணிகளை மேற்கொள்வார் என்று பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
பொதுவாக மகாராணியின் உடல்நிலை குறித்த விபரங்கள் ஏதும் வெளியில் அறிவிக்கப்படாது. சமீபத்தில் அவர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட தகவல் வெளியிடப்பட்டிருந்தது.
மகாராணி விரைவில் குணம் அடைய வேண்டும் என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், எதிர்க்கட்சி தலைவர் கெய்ர் ஸ்டார்மர் உள்ளிட்டோர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
பிரிட்டனில் கொரோனா பாதிப்பு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ள நிலையில் கொரோனாவுடன் வாழ்வோம் என்ற திட்டத்தை அந்நாட்டு அரசு தொடங்கியுள்ளது. இதன்படி அடுத்தவாரம் முதல் கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் அரசின் நடவடிக்கையை பிரிட்டன் அறிவியல் அமைப்புகள் விமர்சித்துள்ளன. அரசின் புதிய நடவடிக்கையால் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் சூழலே உருவாகும் என்று அவை எச்சரித்துள்ளன. பிரிட்டனில் கொரோனா பாதிப்புகளால் 1.60 லட்சத்திற்கும் அதிகானோர் உயிரிழந்துள்ளனர்.