பூஜையில் கட்டாயம் தவிர்க்கவேண்டிய சில விஷயங்கள் என்ன.?
19 Jan,2022
ஒரு சில சாஸ்திர விதிமுறைகளை நாம் தெரியாமல் மீறி தவறு செய்து விடுகிறோம். இதனால் உண்டாகும் கெடுபலன்களை அனுபவிக்கவும் செய்கிறோம். இதனை தவிர்த்துக் கொள்வதற்கு என்ன செய்யலாம்?
பூஜையில் வைக்கப்படும் வெற்றிலையை காம்பை கிள்ளி விட்டு தான் வைக்க வேண்டும். வெற்றிலையின் காம்பில் மூதேவி வாசம் செய்வதாக ஐதீகம் உள்ளது. அதனால் வெற்றிலை வைக்கும் பொழுது காம்பை கிள்ளி விட்டு வையுங்கள். வெறும் வெற்றிலையை மட்டும் எக்காரணம் கொண்டும் வைக்கக் கூடாது.
நாம் நம் வீட்டில் சுவாமி படங்களுக்கு சாற்றப்படும் பூக்களை உலரும் வரை அப்படியே விட்டுவிடக் கூடாது. அது போல் காய்வதற்கு முன்பே எடுத்து விடவும் கூடாது. மலர்கள் காயும் முன்பு எடுப்பதும், காய்ந்து சருகாகும் வரை படங்களில் விட்டு வைப்பதும் துரதிர்ஷ்டத்தை கொடுக்கும்.
காயும் நிலையில் இருக்கும் பூக்களை பவ்யமாக அப்புறப்படுத்தி, நீர் நிலைகளில் அல்லது செடிகளில் போட்டுவிட வேண்டும். இதனை குப்பையில் போடுவதும் துரதிர்ஷ்டத்தை வரவழைக்கும்.
எவர்சில்வர் பாத்திரத்தில் நிவேதனம் படைக்கும் பொழுது அப்படியே உணவை வைக்கக்கூடாது. அடியில் ஒரு வாழை இலையை வைத்து அதில் நிவேதனத்தை படைப்பது முறையாகும். எச்சில் பட்ட எவர்சில்வர் பாத்திரத்தில் நேரடியாக சுவாமிக்கு நிவேதனம் படைப்பது துரதிர்ஷ்டத்தை தரும்.