இளைஞருடன் உல்லாசமாக இருக்க ஆசைப்பட்டு உயிரை விட்ட பரிதாபம்..!
17 Dec,2021
தெய்வானை வேலைக்காக திருப்பூர் கே.வி.ஆர்.நகர் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் தங்கியிருந்து அங்குள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது, அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் தெய்வானை (45). இவரது கணவர் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார். ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். மகன் நெல்லையில் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். மகள் திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். தெய்வானை வேலைக்காக திருப்பூர் கே.வி.ஆர்.நகர் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் தங்கியிருந்து அங்குள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது, அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில், தெய்வானை தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கள்ளக்காதலனிடம் கூறியுள்ளார். ஆனால் அவர் திருமணம் செய்ய மறுத்துள்ளார். இதனால், கடும் மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக தெய்வானை திருப்பூர் தெற்கு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து இருவரையும் காவல்நிலையம் அழைத்த போலீஸார் சமாதானம் பேசி அனுப்பி வைத்துள்ளனர். இருப்பினும் அந்த நபரை தன்னுடன் சேர்ந்து வாழ வைக்க கோரி தொடர்ந்து காவல்நிலையம் வந்துள்ளார். எந்த பலனும் இல்லாததால் விரக்தியடைந்த பெண் திடீரென கள்ளக்காதலன் வீட்டு முன்பு நடுரோட்டில் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.
உடலில் தீப்பற்றிய நிலையில் வலி தாங்க முடியாமல் அலறியுள்ளார். இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைத்தனர். பின்னர் அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி தெய்வானை பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து திருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதல் விவகாரத்தில் 45 பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெய்வானை உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி பற்ற வைத்து கொண்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.