அத்தியாவசியமற்ற இங்கிலாந்து பயணத்துக்கு பிரான்ஸ் தடை..!
16 Dec,2021
கொரோனாவின் புதிய மாறுபாடான ஒமைக்ரான் வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது பல நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் பரவி வரும் நிலையில், உலக நாடுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
தற்போது இங்கிலாந்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், இம்மானுவேல் மக்ரோன் தலைமையிலான பிரான்ஸ் அரசானது அத்தியாவசியமற்ற இங்கிலாந்து பயணத்தை தடை செய்ய உள்ளது. அதாவது சுற்றுலா மற்றும் தொழில் காரணங்களுக்காக இங்கிலாந்து செல்வதற்கு சனிக்கிழமை முதல் தடை செய்யப்படுகிறது. இந்த தடை உத்தரவு தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், போடாதவர்கள் இருவருக்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய மக்கள் இங்கிலாந்தில் இருந்து பிரான்சுக்கு திரும்பலாம் என்றும் ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.