நடுக்கடலில் நடந்த அதிபயங்கர விபத்து: பயணித்தவர்களின் கதி என்ன?
13 Dec,2021
பால்டிக் கடலில் இரண்டு சரக்கு கப்பல்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. தெற்கு ஸ்வீடனில் உள்ள Ystad நகரத்திற்கும், டென்மார்க் தீவான Bornholm-க்கும் இடையேில் உள்ள பால்டிக் கடலில் இந்த விபத்து நடந்துள்ளது.
டென்மார்க்கின் Karin Hoej மற்றும் பிரித்தானியாவின் Scot Carrier கப்பல்களே ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. ஸ்வீடனின் Sய்dertயூlje-ல் இருந்து டென்மார்க்கின் Nykல்bing Falster நோக்கி பயணித்துக்கொண்டிருந்த டென்மார்க் கப்பலும், Latvia-வில் உள்ள Salacgrīva-ல் இருந்து பிரித்தானியாவின் Montrose-க்கு பயணித்துக்கொண்டிருந்த பிரித்தானியா கப்பலும் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் ஒரு கப்பல் கடலில் கவிழ்ந்ததாக ஸ்வீடன் ஸ்வீடிஷ் கடல்சார் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த விபத்து எப்படி நடந்தது என எங்களுக்கு தெரியாது, பெரிய அளவிலான மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
டென்மார்க் மற்றும் ஸ்வீடனிலிருந்து சுமார் 10 மீட்பு படகுகள் சம்பவயிடத்தில் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றன என ஸ்வீடிஷ் கடல்சார் நிர்வாகத்தின் தகவல்தொடர்பு மேலாளர் Jonas Franzen தகவல் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, சம்பவயிடத்தில் பல ஹெலிகாப்டர்களும் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
உயிர்களை காப்பாற்றுவதற்கே முன்னுரிமை அளிக்கப்படும். இருப்பினும், தற்போது வரை யாரும் உயிருடனோ அல்லது பிணமாகவோ மீட்கப்படவில்லை.
சம்பவயித்தில் இருட்டாகவும் மிகவும் குளிராகவும் இருக்கிறது. காலநிலை மிக மோசமாக இருக்கிறது.
டென்மார்க் கப்பலில் இரண்டு பேர் இருந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், மொத்தம் எத்தனை பேர் இருந்தார்கள் என எங்களுக்கு தெரியவில்லை என Jonas Franzen தகவல் தெரிவித்துள்ளார்.