தனது கணவரை கொடூரமாக கொலை செய்துவிட்டு அதே பிணத்துடன் தூங்கி
12 Dec,2021
பாகிஸ்தானில் பெண் ஒருவர் தனது கணவரை கொடூரமாக கொலை செய்துவிட்டு அதே பிணத்துடன் தூங்கி கொண்டிருந்த சம்பவம்
பாகிஸ்தான் நாட்டின் உள்ள கராச்சி நகரத்தை சேர்ந்தவரான முகமது சோஹைல்(60) ஒரு பெண்ணுடன் லிவ் இங் டு கெதரில் இருந்து வந்துள்ளார். இவர்களிடையே அடிக்கடி பணம் தொடர்பாக பல பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கராச்சி நகரில் உள்ள குடியிருப்பு ஒன்றில் உயிரிழந்த நிலையில் ஒருவரின் கை மட்டும் தெரிந்துள்ளது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் காவல் நிலையத்திற்கு புகார் கொடுத்துள்ளனர். அந்த வகையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் வீட்டின் கதவை திறந்துள்ளனர்.
அப்போது தலை மற்றும் கை தனித்தனியாக வெட்டப்பட்ட நிலையில் மனித உடல் பாகங்கள் ஆங்காங்கே சிதறி அறை முழுவதும் ரத்தக்கறைகள் படிந்து இருந்தது. மற்றொரு அறையில் பெண் ஒருவர் போதையில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தார்.
அந்த பெண்ணின் உடையில் ரத்தக்கறை மற்றும் உடலை வெட்டுவதற்கான ஆயுதங்களும் அவர் அருகில் கிடந்தது. இதையடுத்து உடனடியாக பொலிஸ் அந்த பெண்ணை அதிரடியாக கைது செய்தனர்.