தாஜ்மஹால் வடிவில் வீடு: மனைவிக்காக கட்டிய கணவர்
23 Nov,2021
மத்திய பிரதேசத்தின் புர்ஹான்பூரில் மனைவிக்காக தாஜ்மஹால் வடிவில் ஒருவர் வீடு கட்டியுள்ளார்.ம.பி.,யின் புர்ஹான்பூரில் வசிப்பவர் ஆனந்த் பிரகாஷ் சோக்சி.
இவரது மனைவி மஞ்சு ஷா. இவர், தன் கணவரிடம், 'எனக்காக என்னசெய்வீர்கள்' என,கேட்டுள்ளார். இதையடுத்து தன் மனைவிக்காக உலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ்மஹால் வடிவில் வீடு கட்ட முடிவு செய்தார், ஆனந்த். இதற்காக அவர் ஏற்பாடு செய்த இன்ஜினியர் ஆக்ரா சென்று தாஜ்மஹாலை மிக கவனமாக கண்காணித்தார். அதன் வடிவமைப்பு, பளிங்கு கற்கள், கலைநயம் உள்ளிட்டவற்றை பதிவு செய்தார்.பின் புர்ஹான்பூரில் தாஜ்மஹால் வடிவிலான வீட்டை அமைக்கும் பணி துவங்கி மூன்று ஆண்டுகளில் முடிவிற்கு வந்துள்ளது.
வீட்டின் குவிமாடம் 29 அடி உயரத்தில் தாஜ்மஹால் போல் கோபுரங்களுடன் அமைந்துள்ளது. தரையில் ராஜஸ்தானின் மக்ரானாவில் இருந்து கொண்டு வந்த வெள்ளை மார்பிள் பதிக்கப்பட்டு உள்ளது. இருளில் ஜொலிக்கும் வகையில் உள்ளேயும், வெளியேயும் விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன.மனைவிக்காகதாஜ்மஹால் வடிவில் வீடு கட்டியஆனந்துக்கு பாராட்டுகள் குவிகின்றன.