சுகாதார நிலையத்தில் பெண் ஊழியருடன் பணி நேரத்தில் பாலியல் உறவில் ஈடுபட்ட அரசு மருத்துவர்
27 Oct,2021
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள இளையரசனேந்தலில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. அங்கு மருத்துவராகப் பணியாற்றுபவர் அதே ஊரைச் சேர்ந்த 51 வயதான குருசாமி. மேலும் அவர் இளையரசனேந்தலில் தனியாக ஸ்ரீமுத்தையா கிளினிக் என்ற பெயரிலும் மருத்துவமனை நடத்தி வருகின்றார்.
ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் தற்காலிக பெண் ஊழியர்களிடம் இவர் பாலியல் ரீதியில் தொந்தரவு செய்து வருவதாக நீண்ட காலமாக புகார் இருந்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தாலும், உயரதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
ஒரே இடத்தில் பணியாற்றும் அரசுப் பணியாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்படும் விதியின் கீழ் மருத்துவர் குருசாமியும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் இரண்டே நாட்களில் மீண்டும் தன் சொந்த ஊரான இளையரசனேந்தல் கிராமத்திற்கே வந்து சேர்ந்து விடுவார்; அந்த அளவுக்கு மேலிடத்தில் செல்வாக்கு உள்ளவர் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் தற்காலிக பெண் ஊழியருடன் பணி நேரத்தில் பணியிடத்திலேயே உல்லாசமாக இருந்துள்ளார் மருத்துவர் குருசாமி. அந்தக் காட்சியை இன்னொரு பெண் பணியாளர் பார்த்து விட்டார்; அன்று முதல் அந்தப் பெண் பணியாளரை வாசலில் காவலுக்கு இருக்கும்படி நிர்ப்பந்தம் செய்துள்ளார் மருத்துவர் குருசாமி.
குருசாமியின் வக்கிரங்களைத் தட்டிக் கேட்காமல் இருப்பவர்களுக்கு அனைத்து சலுகைகளையும் அவர் கொடுத்துள்ளார். தட்டிக் கேட்டால் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி எந்தளவுக்கு நெருக்கடி கொடுக்க முடியுமோ அந்தளவுக்கு நெருக்கடி கொடுப்பார் என்கின்றனர் பாதிக்கப்பட்டவர்கள்.
பணிநேரத்திலேயே பணியிடத்தில் படுத்து உறங்குவது உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்களிலும் குருசாமி ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில்தான், மருத்துவரின் உல்லாசக் காட்சிகள் திடீரென சமூக வலைதளங்களில் வெளியாகி பரவத் தொடங்கியுள்ளன.
இதையடுத்து மருத்துவரால் காவலுக்கு நியமிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட இன்னொரு பெண், கோவில்பட்டி மேற்கு காவல்நிலையத்தில், புகார் அளித்துள்ளார். இதையடுத்து ஆபாசமாகப் பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல், பெண் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் குருசாமியின் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் அவரைக் கைது செய்தனர்.
போலீசார் குருசாமியைக் கைது செய்து சிறையில் அடைக்க கொண்டு செல்லும்போது கண்ணீர் விட்டு கதறிக் கொண்டே சென்றார். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பட்டப் பகலில் பெண் ஊழியருடன் உல்லாசமாக இருந்த அரசு மருத்துவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.