இத்தாலியில் கையில் இறந்த குழந்தையுடன் பல்பொருள் அங்காடிக்குள் நுழைந்த ஆபாச பட நடிகை!
06 Oct,2021
இத்தாலியிலுள்ள பல்பொருள் அங்காடி ஒன்றிற்குள், இரத்தம் சொட்டச் சொட்ட குழந்தை ஒன்றுடன் நுழைந்த ஒரு பெண், உதவி கோரி கதறியுள்ளார். Katalin Erzsebet Bradacs (44) என்ற அந்த பெண், தன் குழந்தையை பணம் செலுத்தும் கவுண்டர் மீது வைத்துவிட்டு உதவி கோரிக் கதற, விரைந்து வந்த மருத்துவ உதவிக்குழுவினரில் சிலர் குழந்தையை பரிசோதிக்க, மற்றவர்கள் அந்த பெண்ணுக்கு சிகிச்சையளிக்க முற்பட்டுள்ளார்கள்.
Alex Juhasz (2) என்னும் அந்த குழந்தையின் கழுத்திலும் மார்பிலும் ஒன்பது கத்திக் குத்துக் காயங்கள் இருக்க, குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இதற்கிடையில், பொலிசார் Katalinஉடைய கைப்பையை சோதிக்க, அதற்குள் ஒரு கத்தி இருப்பது தெரியவரவே, உடனடியாக அவரை பொலிசார் கைது செய்துள்ளார்கள்.
அத்துடன், அருகிலுள்ள ஒரு பழைய கட்டிடத்தில், ஒன்பது ஓட்டைகள், இரத்தக் கறையுடன் Alexஇன் சட்டையும், Katalin உடைய உடையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், அந்த பல்பொருள் அங்காடிக்குள் நுழைவதற்கு சற்று முன், உயிரிழந்த அந்த குழந்தையின் தந்தையான Norbert Juhaszக்கு, செத்துக்கொண்டிருக்கும் தன் குழந்தையின் படத்தை வாட்ஸ் ஆப்பில் அனுப்பியிருக்கிறார் Katalin.
ஹங்கேரியில் வசிக்கும் Norbert உடனடியாக ஹங்கேரி பொலிசாருக்கு தகவலளித்துள்ளார்.
விடயம் என்னவென்றால், Norbertம் Katalinம் கடந்த மாதம்தான் விவாகரத்து செய்து பிரிந்திருக்கிறார்கள். நீதிமன்றம் குழந்தையை அதன் தந்தையிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
ஆனால், Katalin தன் குழந்தையை தூக்கிக்கொண்டு ஹங்கேரியிலிருந்து இத்தாலிக்கு தப்பியோடியிருக்கிறார். தற்போது தன் கணவனை பழிவாங்குவதற்காகவே அவர் குழந்தையை கொலை செய்திருக்கிறார் என பொலிசார் நம்புகிறார்கள்.
Katalin காவலில் அடைக்கப்பட்டுள்ளார். பொலிசார் அவரை விசாரித்து வருகிறார்கள். நான் என் குழந்தையைக் கொல்லவில்லை என்றே கூறிவருகிறார் அவர்.
Katalin ஒரு முன்னாள் ஆபாசப் பட நடிகை மற்றும் இரவு விடுதிகளில் நடனமாடுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.