கோயிலுக்குள்.. பெண்ணுடன் தனி ரூமில் இருந்த பூசாரி.. டிரஸ்ஸை கிழித்து தாக்கிய மக்கள்.
05 Aug,2021
.
ராஜஸ்தான்: கோவிலில் பெண்ணுடன் தனிரூமில் இருந்துள்ளார் பூசாரி.. இதை பார்த்த பொதுமக்கள் ஆத்திரமடைந்து அவர்களை செருப்பாலேயே அடித்து விரட்டிய சம்பவம் வீடியோவாகவே வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கர் மாவட்டத்தில் கங்கரார் என்ற பகுதி உள்ளது.. இங்கு சர்னேஷ்வர் மகாதேவ் என்ற பிரசித்தி பெற்ற கோயில் உள்ளது..
இங்கு பூசாரியாக இருப்பவர், பெண் ஒருவருடன் தனியறையில் இருந்துள்ளார்... இதை அந்த ஊர் மக்களே கண்ணால் பார்த்துவிட்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்..
'யார்கிட்டையும் சொல்லக் கூடாது..' டெல்லியில் தலித் சிறுமி பாலியல் படுகொலை.. தாயை மிரட்டிய பூசாரி'யார்கிட்டையும் சொல்லக் கூடாது..' டெல்லியில் தலித் சிறுமி பாலியல் படுகொலை.. தாயை மிரட்டிய பூசாரி
தனியறை
அதனால், சம்பந்தப்பட்ட 2 பேரையும் வெளியே இழுத்து செருப்பால் அடித்துள்ளனர்.. 2 பேரையுமே தயவுதாட்சண்யமின்றி சராமாரியாக தாக்கியும் உள்ளனர்... குறிப்பாக அந்த பெண்ணின் டிரஸ்ஸை கிழித்து, அவரை கீழே தள்ளியும் தாக்கினர்.. இந்த காட்சிகள் அத்தனையும் வீடியோவாக வெளிவந்து இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
மறுப்பு
நடந்த சம்பவம் குறித்து பூசாரியும், அந்த பெண்ணும் சொல்லும்போது, எங்களை சிலர் தவறாக புரிந்து கொண்டுவிட்டனர்.. என்ன ஏதென்று தெரியாமலேயே தாக்கி, அதை வீடியோவாக எடுத்துவிட்டனர் என்று மறுப்பு தெரிவித்து கொண்டே உள்ளனர்.
வீடியோ
அந்த பெண் சொல்லும்போது, என் கணவர் மிகப்பெரிய வேலையில் இருக்கிறார்... சமூகத்தில் ஒரு அந்தஸ்துடன் இருக்கிறார்.. இப்படிப்பட்ட சம்பவத்தால் என் குடும்பமே மனஉளைச்சலுக்கு ஆளாகி விட்டது.. என்று கண்ணீர் மல்க கூறுகிறார்.. இதுகுறித்து போலீசுக்கும் தகவல் சென்றது.. போலீசாரும் சம்பவம் குறித்து விசாரணையை ஆரம்பித்தனர்.. இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண் தன்னுடைய கணவனுடன் வந்து போலீசில் புகார் தந்துள்ளார்..
புகார்
கோவிலுக்குள்தகாத முறையில் எந்த தவறும் நடந்து கொள்ளாத எங்களை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று புகாரில் கேட்டுக் கொண்டுள்ளார்.. இந்த தாக்குதலில் தொடர்புடைய 7 பேரையும் அடையாளம் காட்டி உள்ளார்... ஒருவேளை இந்த விவகாரத்தில் தனக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால், எஸ்பி ஆபீஸ் முன் தர்ணாவில் ஈடுபடுவேன் என்றும் தெரிவித்துள்ளார்