பெண்கள் மட்டும் நிர்வாணமாக வாழும் அதிசய வனப்பகுதி!
06 Jul,2021
இந்தோனேசியாவில் உள்ள ஒரு வனப்பகுதியில் காலாகாலமாக பெண்கள் மட்டுமே வாழ்ந்து வருகின்றனர். இந்தோனேசியாவின் பப்புவா வனப்பகுதியிலேயே பெண்கள் மட்டுமே வாழ்கின்றனர். இங்கு ஆண்களுக்கு தடை விதித்துள்ளதுடன், அத்துமீறி நுழைபவர்களுக்கு உள்ளூர் மதிப்பில் ஒரு மில்லியன் ரூபியா(50 பவுண்டுகள்) அபராதமாகவும் வசூலிக்கின்றனர்.
பப்புவா வனப்பகுதிக்குள் நுழைய பெண்களுக்கும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர். இங்கு செல்லும் பெண்கள் கண்டிப்பாக ஆடைகள் இல்லால் பிறந்த மேனியாகவே நுழைய வேண்டும்.
பெரும்பாலும் இந்த வனப்பகுதியில் கிளிஞ்சல்கள் சேகரிக்கவும், கதைகள் பேசவுமே பெண்கள் செல்வதாக அங்கு குடியிருக்கும் பெண்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், வனப்பகுதிக்குள் படகில் செல்லும் அப்பகுதி கிராம பெண்கள், குறிப்பிட்ட எல்லையை கடந்த பின்னர், ஆண்கள் தொல்லை இல்லாமல், விரும்பியபடி வாழலாம் என தெரிவித்துள்ளனர்.
சுற்றும் பெண்கள் மட்டுமே என்பதால், முதியவர்களுடன் கதைகள் பேசி, தண்ணீரில் நீச்சலிட்டு, தேவைக்கு கிளிஞ்சல்கள் சேகரித்து மகிழ்ச்சியுடன் இருப்பதாக பெண்கள் கூறுகின்றனர்.
தொடர்ந்து, சேகரித்த கிளிஞ்சல்களை வனப்பகுதிக்கு அருகாமையில் உள்ள சந்தையில் விற்பனை செய்கின்றனர்.
பெண்கள் மட்டுமே வசிக்கும் இந்த வனப்பகுதி இல்லாமல் தங்களால் வாழ முடியாது என கூறும் அப்பகுதி மக்கள், நாளும் இந்த பகுதிக்கு சென்று கிளிஞ்சல்கள் சேகரித்து திரும்புவதாக தெரிவித்துள்ளனர்.
இங்கே பெண்கள் ஒருவருக்கொருவர் நம்பிக்கை வைக்கின்றனர். அந்த நம்பிக்கையை ஒருபோதும் இழக்க முடியாது என உறுதிபட தெரிவிக்கின்றனர் பப்புவா வனப்பகுதி மக்கள்