இவ்வளவு பணமா ? இந்த பணத்தை எப்படி மாற்றுவது..? மாட்டிக்கொண்ட கொள்ளையர்கள்
01 Jun,2021
லண்டனில் உள்ள Fulham ல் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் காவல்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது மில்லியன் கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பில் Sergejs Auzins, Serwan Ahmadi மற்றும் Shamsutdinov’s ஆகிய மூவரையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இவர்களிடமிருந்து மொத்தமாக, ஐந்து மில்லியன் பவுண்ட் பணம் கைப்பற்றபட்டுள்ளது. அதாவது லண்டனில் தற்போது வரை இவ்வளவு அதிக தொகையை கைப்பற்றப்பட்டது இதுவே முதல் முறையாகும். இதனைத்தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை அன்று மூவருக்கும் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.