15 ஆண்டுகளாக பதுக்கி வைக்கப்பட்ட உடல்ஸ. விசாரணையில் வெளிவந்த தகவல்.!!
21 May,2021
ஆஸ்திரேலிய நாட்டில் சிட்னி நகரில் ப்ரூஸ் ராபர்ட் என்பவர் வசித்து வந்தார். இவர் கடந்த 2002ஆம் ஆண்டு தன்னுடைய வீட்டில் திருட வந்த கொள்ளையனை சுட்டு கொலை செய்து அவரது உடலை வீட்டிலேயே பதுக்கி வைத்துள்ளார். பின்னர் நாளடைவில் சடலத்தின் துர்நாற்றம் வீச தொடங்கியதால் அதனை மறைப்பதற்கு 70க்கும் மேற்பட்ட ஏர் பிரெஷனர்களை பயன்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து கடந்த 2014ஆம் ஆண்டு ப்ரூஸ் ராபர்ட் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். அவருடைய இறப்பிற்கு பின் அவர் வசித்த வீட்டை தற்போது சுத்தம் செய்ய முயன்றுள்ளனர். அந்த சமயத்தில் கொள்ளையனின் சடலம் மற்றும் பல துப்பாக்கிகளை ராபர்ட் தனது வீட்டில் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலின் பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.