உயிரினத்தை வேறு கிரகங்களுக்கு அனுப்ப முடிவு ?
21 May,2021
அமெரிக்கா நடத்தி வரும் பல பரிசோதனைகள், ஏன் எதற்கு என்றே தெரிவது இல்லை. அதிலும் அவர்கள் செவ்வாய் கிரகத்தில் அதிக அளவு அக்கறை கொண்டுள்ளார்கள் என்றால். அதன் பின்னால் நிச்சயம் ஒரு மாபெரும் உண்மை இருக்கிறது. அமெரிக்கா தனது நாட்டின் வழத்தைப் பெருக்க, பின் லாடன் இரட்டை கோபுரத்தை தகர்த்ததாக கூறினார்கள். 2 விமானங்கள் அமெரிக்காவின் இரட்டை கோபுரங்களை தகர்த்தது. 3,000 பேர் இறந்தார்கள். அமெரிக்காவுக்கு 900 மில்லியன் டாலர்கள் நஷ்டம் மட்டுமே ஏற்பட்டது. ஆனால் அதனை சாட்டி அவர்கள் வைரக் கல் குகைகள் நிறைந்து காணப்படும் ஆக்பானிஸ்தானை பிடித்தார்கள்ஸ அங்கே அவர்கள் பின் லாடனை தேடவே இல்லை.. மாறாக வைரக் கல் குகைகளை தோண்டி வைரங்களை எடுத்து விற்று சுமார் 3B பில்லியன் டாலர்களை சம்பாதித்தார்கள் என்பதே உண்மை. அது போல தான்ஸ தற்போதுஸ
உலகில் உயிரினங்கள் தோன்ற முன்னரே பூமியில் வாழ்ந்த மைக்ரோப் என்று சொல்லப்படக்கூடிய மிகவும் சிறிய உயிரினங்களை அவர்கள், துப்பாக்கிக் குண்டுகளின் வேகத்தில் அதனை பயணிக்க வைத்துள்ளார்கள். அதாவது மணிக்கு 2,160 மைல் வேகம். இதனூடாக குறித்த மைக்ரோப் உயிரினங்கள் அந்த வேகத்தில் உயிர்வாழ வல்லவையா என்று அறிந்து கொண்டுள்ளார்கள். அதனை வேறு கிரகங்களுக்கு அனுப்ப அமெரிக்கா ஆராய்ந்து வருகிறது. உலகில் உயிரினங்கள் தோன்ற முன்னர் நீரில் தோன்றிய இந்த மைக்ரோப் என்னும் உயிரினங்fகள், பூமியில் காற்று மண்டலம் உருவாக. மற்றும் பிற உயிரினங்கள் உருவாக ஏதுவாக அமைந்த ஒரு முதன்மை உயிரினம்..
எனவே ஏதோ ஒரு கிரகத்திற்கு அதனை அனுப்பி, அங்கே உயிரினங்களை தோற்றுவிக்கும் ஒரு பரம ரகசிய திட்டத்தில் அமெரிக்கா தற்போது இறங்கியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. அது சனிக் கிரகத்தை சுற்றி வரும் டைடன் என்ற நிலா போன்ற கிரகம் என்ற வதந்தியும் உண்டு. ஆனால் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
கண்ணன்