பிரான்சில் கொரோனாத் தடுப்பூசிக் கடவுச் சீட்டு
20 Apr,2021
வெளிநாடு செல்வதற்கும், நாட்டிற்குள் நுழைவதற்கும் பெரும்பாலான நாடுகள் கொரோனாத் தடுப்பு ஊசி அத்தாட்சிப் பத்திரத்திரம் அல்லது சுகாதாரக் கடவுச் சீட்டு (Passeport sanitaire) கட்டாயம் ஆக்கி உள்ளது.
ஆனால் இது பிரான்சிற்குத் தற்போதைக்குச் சாத்தியமில்லை என வெளியக வர்த்தகங்களிற்கான அமைச்சர் Franck Riester தெரிவித்துள்ளார்.
பிரான்சில் இன்னமும் 10% மக்கள் மட்டுமே இரண்டு அலகு தடுப்பு ஊசிகளைப் பெற்றுள்ளனர். அவர்கள் பெரும்பான்மையாக 75 வயதிற்கு மேற்பட்டவர்கள். இவர்கள் பெருமளவில் பிரயாணம் செய்யப்போவதில்லை. வெளிநாடுகளிற்குப் பிரயாணம் மேற்கொள்ள விரும்புபவர்களிற்கு இப்போதைக்குத் தடுப்பு ஊசிகள் கிடைக்கப் போவதில்லை.
அபிரான்சின் தடுப்பு ஊசித் திட்டம் ஒழுங்காகச் சென்று கொண்டிருக்கின்றது. ஆனாலும் அனைவரிற்கும் தடுப்பு ஊசிகள் வழங்குவது தற்போதைக்குச் சாத்தியமில்லை. அனைவரிற்கும் தடுப்பு ஊசிகள் போடாமல், கொரோனாத் தடுப்பு ஊசி அத்தாட்சிப் பத்திரத்திரம் அல்லது சுகாதாரக் கடவுச் சீட்டு வழங்க முடியாதுஞ
என அமைச்சர் தெரிவித்துள்ளார்.