செவ்வாய் கிரகத்தில் நில அதிர்வு; நாசாவின் ரோவர் தகவல்
                  
                     03 Apr,2021
                  
                  
                     
					  
                     
						
	 
	 
	கடந்த 2018-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் கிளை நிறுவனமான ஜெட் புரோஃபல்யூஷன் லேபரட்டரி, 'இன்சைட் ரோவர்' என்கிற சிறிய ரக ரோவர்-ஐ செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பியது.
	 
	 
	 
	இரண்டு ஆண்டுகளாக இந்த சிறிய கருவி செவ்வாய் கிரகத்தின்மீது அமர்ந்துள்ளது. அங்கு இருக்கும் முக்கிய தகவல்களைத் திரட்டி அவ்வப்போது நாசா விஞ்ஞானிகளுக்கு அனுப்பிவரும் இந்த சிறிய ரக ரோவர் சமீபத்தில் நாசாவில் நில அதிர்வு ஏற்படுவதை கண்டுபிடித்துள்ளது.
	 
	 
	 
	 
	ஒரு கிரகத்தின் அடி ஆழத்தில் உள்ள நிலத் தகடுகளின் நகர்வால் நில அதிர்வு ஏற்படும். இது அனைத்து கிரகங்களுக்கும் பொருந்தும். பூமியில் ஏற்படும் நில அதிர்வு போல செவ்வாய் கிரகத்திலும் 3.3 மற்றும் 5 ரிக்டர் அளவுகோலில் நில அதிர்வு பதிவாகியுள்ளது, தற்போது தெரியவந்துள்ளது. செவ்வாய் கிரகத்தின் சர்பேரோஷ் ஃபோசா என்கிற பகுதியில் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
	 
	இதுகுறித்து மேலும் ஆராய்ச்சி மேற்கொள்ள நாசா விஞ்ஞானிகள் முடிவெடுத்துள்ளனர். 2030-ஆம் ஆண்டுக்குள் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை நாசா கனவுத் திட்டமாக வைத்துள்ளது. இதனை நிறைவேற்ற இந்த சிறிய தகவல்களே நாசா விஞ்ஞானிகளுக்கு உதவிவருகின்றன.