க்ளோனிங் முறையில் உருவான 6 நாய்கள்!காவல்துறை பணியில்
24 Nov,2019
சீனாவில் க்ளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட 6 நாய்கள், பெய்ஜிங் நகர காவல்துறை பணியில் சேர்க்கப்பட்டுள்ளன.
காவல்துறையினரின் பணிக்கு சிறப்பாக உதவிய 2 நாய்களின் தோல் மாதிரியை சேகரித்து, அவற்றின் மூலம் க்ளோனிங் முறையால் 6 குட்டிகள் உருவாக்கப்பட்டன.
கடந்த ஆகஸ்ட் மாதம் பிறந்த அவற்றுக்கு சிறப்பு கவனம் கொடுத்து பராமரித்து, காவல்துறை அதிகாரி மா ஜின்லாய் என்பவர் பயிற்சி அளித்தார். அந்த 6 நாய்களும் பிஜிங் காவல்துறை பணியில் தற்போது சேர்க்கப்பட்டன.
பிஜிங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிகாரிகள் முன்னிலையில் 6 நாய்களும் சேர்த்து கொள்ளப்பட்டன