சிக்கன் முர்தபா
18 Nov,2019
சிக்கன் முர்தபா
தேவையான பொருட்கள் :
கோதுமை - 3 கப்
சிக்கன் - 200 கிராம்
பட்டாணி - 100 கிராம்
வெங்காயம் - கால் கிலோ
இஞ்சி பூண்டு விழுது - சிறிதளவு
முட்டை - 8
கோஸ் - 100 கிராம்
கேரட் - 50 கிராம்
கறிவேப்பிலை - 1 கொத்து
கொத்தமல்லி இலை - 1 கொத்து
மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன்
எண்ணெய் - 3 டீஸ்பூன்
துருவிய தேங்காய் - 1 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
சிக்கனை நன்றாக கழுவி கொள்ளவும்.
ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் சிறிது உப்பு சேர்த்து நன்றாக அடித்து கொள்ளவும்.
கோஸ், கேரட், வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கோதுமை மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் கொஞ்சம் எண்ணெய், உப்பு, தண்ணீர் ஊற்றி ரொட்டி மாவு பதத்திற்கு பிரைந்து கொள்ளவும்.
பிசைந்த மாவை 30 மணிநேரம் ஊற வைத்த பிறகு சப்பாத்திகளாக சுட்டு வைக்கவும்.
கடாயில் சிக்கனை போட்டு அதனுடன் தயிர், இஞ்சி பூண்டு விழுது, மசாலா மற்றும் உப்பு போட்டு வேகும்வரை வரட்டவும்.
பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி வெட்டிய வெங்காயம், கோஸ், கேரட், பட்டாணி, கறிவேப்பிலை, உப்பு மற்றும் மஞ்சள்தூள் இவைகளை போட்டு நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கிய பிறகு கொத்தமல்லி இலை, துருவிய தேங்காயை போட்டு தேங்காய் கொஞ்சம் கனிந்து சேர்ந்த பிறகு இறக்கவும்.
அடுப்பில் ரொட்டி தவாவை வைத்து தவா கொஞ்சம் காய்ந்ததும், 2 டீஸ்பூன் முட்டையை சட்டியில் பரவலாக ஊற்றவும்.
பிறகு அதன்மேல் தேய்த்து வைத்த ரொட்டியை போட்டு, முட்டை ரொட்டியுடன் நன்கு ஒட்டிய பிறகு, ரொட்டியை திருப்பி போடவும்.
ரொட்டியின் முட்டை மேல் 2 ஸ்பூன் சிக்கன் கலவையை வைத்து சதுரமாக நான்கு பக்கமும் மடிக்க வேண்டும்.
பிறகு முன்னும் பின்னும் எண்ணெய் ஊற்றி அழகாக சுட்டு எடுக்கவும்.
சூப்பரான சிக்கன் முர்தபா ரெடி.