ஐரோப்பிய ஒன்றிய விதிகளை பிரித்தானியா மீறியுள்ளது : ஐரோப்பிய ஆணையம்
15 Nov,2019
புதிய ஆணையரை பரிந்துரைக்காததன் மூலம் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றிய விதிகளை மீறியுள்ளதாக ஐரோப்பிய ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.
ஐரோப்பிய ஆணையர் ஜீன்- குளோட் ஜங்கருக்குப் பதிலாக புதிய ஒருவரின் பெயரைப் பரிந்துரைக்குமாறு ஐரோப்பிய ஒன்றிய நிர்வாகி ஊர்சுலா ஃபொன் டே லைன் (Ursula von der Leyen) பிரித்தானியாவிடம் கேட்டிருந்தார்.
ஆனால் டிசெம்பரில் பொதுத் தேர்தலை நடத்துவதன் விதிமுறை காரணமாக புதிய ஆணையரின் பெயரைப் பரிந்துரைக்க முடியாது என்று பிரித்தானியா தெரிவித்திருந்தது.
இந்த நடவடிக்கை ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் நீதிமன்றத்தில் பிரித்தானியாவுக்கு எதிராக வழக்குத் தொடுக்க வழிவகுக்கும் என்று கூறப்படுகின்றது.
பொதுத் தேர்தலில் கொன்சர்வேற்றிவ் கட்சி வெற்றி பெற்றால், ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிய பிரெக்ஸிற் காலநீடிப்புத் திகதியான 2020 ஜனவரி
31இல் பிரித்தானியா வெளியேறிவிடும்.
எனினும் ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தங்களின் கீழ் ஐரோப்பிய ஆணையத்துக்கு, பிரித்தானியா ஒருவரின் பெயரைப் பரிந்துரைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது என்று ஊர்சுலா ஃபொன் டே லைன் சுட்டிக்காட்டியுள்ளார்