உறவினர் போல் நடித்து கொள்ளை!
26 Oct,2019
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே மண்மலை எனுமிடத்தில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடமிருந்து உறவினர் போல் பேசி 80 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
அரசுப் பள்ளி ஆசிரியரான சேகர் மற்றும் அவர் மனைவி மகேஸ்வரி ஆகியோர் வேலைக்கு சென்ற நிலையில் 75 வயதான சேகரின் தாயார் பச்சையம்மாள் வீட்டில் தனியாக இருந்ததை நோட்டமிட்ட பெண் ஒருவர், உறவுமுறை பெண் எனக்கூறி பச்சையம்மாளிடம் பேச்சு கொடுத்துள்ளார்.
உங்கள் மருமகள் கேஸ் வாங்கி வைக்கும்படி கூறியதாக சொல்லி பீரோ சாவியை வாங்கியுள்ளார் அந்தப் பெண். பின்னர் அதில் இருந்த 80 சவரன் நகைகளை களவாடிக் கொண்டு அவர் மாயமாகி விட்டார். செவிலியரான மகேஸ்வரி நகைகள் கொள்ளை போனதையறிந்த பின் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் தலைமறைவான அந்தப் பெண்ணைத் தேடி வருகின்றனர்