ஆயே ஆயே என்ற விசித்திர மிருகம் குட்டி ஈன்றுள்ளது!
21 Oct,2019
அமெரிக்காவில் உள்ள விலங்கியல் பூங்கா ஒன்றில் உள்ள ஆயே ஆயே என்ற விசித்திர மிருகம் குட்டி ஈன்றுள்ளது.
வடக்கு கரோலினாவில் உள்ள டி எல் சி எனப்படும் டியூக் லெமூர் மையத்தில் ஆயே ஆயே என்ற அரிய வகையைச் சேர்ந்த அபூர்வமான உயிரினம் பராமரிக்கப்பட்டு வருகிறது.
அதன் தோற்றம் பார்ப்பவர்களை அச்சுறுத்தும் வகையில் இருப்பதால் இந்த உயிரினம் தீமையின் சகுனம் என்று அழைக்கப்படுகிறது. மடகாஸ்கர் தீவை பூர்விகமாகக் கொண்ட ஆயே ஆயே சிறு சிறு பூச்சிகள் மற்றும் புழுக்களை உணவாகக் கொள்ளும். இரவு நேரங்களில் மட்டும் வேட்டையாடும் திறன் கொண்டது.
சிறிய பொந்துகள் மற்றும் மரங்களில் உள்ள சிறிய துளைகளில் பதுங்கியிருக்கும் பூச்சிகளைப் பிடிப்பதற்காகவே இதன் விரல்கள் மிகவும் நீளமாக பார்ப்பதற்கே கொடூரமாகக் காட்சியளிக்கும். ஆனால் சாதுவான இந்த உயிரினம் அழிவின் விளிம்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.