பாழடைந்த வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட 7ம் வகுப்பு மாணவி!
18 Oct,2019
நெல்லை மாவட்டம் உவரி அருகே சடலமாக மீட்கப்பட்ட 7 ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரத்துக்குள்ளாகி கொலை செய்யப்பட்டாரா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடற்கரை கிராமமான கூட்டப்பனைச் சேர்ந்த 12 வயது சிறுமி, அதே ஊரில் உள்ள புனித அந்தோனியார் நடுநிலைப்பள்ளியில் 7 ஆம் வகுப்பு பயின்று வந்தார்.
இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு பள்ளிக்கு சென்று வீடு திரும்பாத மாணவி, அருகே உள்ள பாழடைந்த வீடு ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், மாணவியின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
மாணவி பாலியல் பலாத்காரத்துக்குள்ளாகி கொலை செய்யப்பட்டாரா என்று சந்தேகிக்கும் போலீசார், 2 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
சுற்றுவட்டாரத்தில் அதிகளவில் கஞ்சா விற்பனை நடப்பதாகவும் அதற்கு அடிமையாகியுள்ள இளைஞர்கள சிலர் இதுபோன்ற கொடூரத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று பொதுமக்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.