மீண்டும் காட்சிக்கு வைக்கப்பட்டது மோனலிசா ஓவியம்!
12 Oct,2019
உலக புகழ்பெற்ற மோனலிசா ஓவியம் மீண்டும் லூவர் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
1503 முதல் 1506ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் டா வின்சியால் வரையப்பட்ட மோனலிசா ஓவியம் உலகப்புகழ்பெற்றது.
பரிசில் உள்ள லூவர் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள மோனலிசா ஓவியத்தை வந்து பார்வையிடும் சுற்றுலாப்பயணிகள் அதனுடன் இணைந்து இருப்பது போன்று ஒளிப்படம் எடுத்து சென்றனர்.
இதனால் ஏற்படும் கூட்ட நெரிசலை தடுக்கும் விதமாக மோனலிசா ஓவியம் இருந்த இடத்தை புனரமைக்கத் திட்டமிட்டு கடந்த ஜூலை 16ம் திகதி ஓவியம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது.
இரண்டு மாத புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்த பின்னர் மோனலிசா ஓவியம் மீண்டும் தனது பழைய இடத்திலேயே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.