ஜெர்மனியில் மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.
10 Oct,2019
கிழக்கு ஜெர்மனி ஹாலேயில் உள்ள சர்ச் அருகே மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்களில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தப்பி ஓடிய மற்ற நபர்கள் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் பதுங்கி இருக்கலாம் என்று கருதிய போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.