நத்தைகளின் படையெடுப்பால் மக்கள் எரிச்சல்!
02 Oct,2019
கியூபாவின் பல்வேறு பகுதிகளில் பெரிய அளவிலான நத்தைகளின் படையெடுப்பால் அப்பகுதி மக்கள் எரிச்சலடைந்துள்ளனர்.
ஜெயன்ட் ஆப்பிரிக்கன் ஸ்நெய்ல் (( giant African snail)) எனப்படும் இந்த நத்தைகள் அரை அடி முதல் அதிகபட்சமாக ஒரு அடி நீளம் கொண்டவையாக உள்ளன.
எங்கிருந்து வந்தன என்பது தெரியாமல் மொல்லுஸ்க் நகர மக்கள் நத்தைகள் படையெடுப்பால் எரிச்சலடைந்துள்ளனர். மேலும் அவைகளின் வரவால் தங்களுக்கு ஏதேனும் புதிய நோய் ஏற்பட்டு விடும் என்றும், பயிர்கள் அழிக்கப்பட்டு விடும் என்ற பயமும் கியூபா மக்களை தற்போது ஆட்கொண்டுள்ளது.
இதையடுத்து உப்பு தூவி நத்தைகளின் வரவை நிறுத்தியும், அழித்தும் வருகின்றனர் அந்நாட்டு மக்கள். இதனிடையே வெறும் கைகளால் தொடாமல் நத்தைகளை சேகரிக்கவும், பின்னர் அவற்றை சீல் வைத்த கொள்கலன்களில் அழிக்கவும் சுகாதார அதிகாரிகள் கேட்டுள்ளனர்