வங்கி தவறுதலாக செலுத்திய லட்சம் டாலர்களை செலவழித்த தம்பதி மீது வழக்கு மற்றும்
10 Sep,2019
அமெரிக்காவின் பென்ஸில்வேனியாவில் உள்ள வங்கி ஒன்று, தங்களது வாடிக்கையாளர் கணக்கில் தவறுதலாக லட்சக்கணக்கான டாலர்கள் பணம் செலுத்திவிட, அதனை அவர்கள் முழுவதுமாக செலவு செய்துவிட்டனர்.
ராபர்ட் மற்றும் டிஃபனி வில்லியம்ஸ் ஜோடியின் வங்கி கணக்கில் 1,20,000 டாலர்கள் பணத்தை வங்கி தவறுதலாக செலுத்தியது. அதில் அவர்கள் SUV கார், மற்றும் பிற பொருட்களை வாங்கியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அவர்கள் மீது திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்தப்பணம் அவர்களுக்கு சொந்தம் இல்லை என்று தெரிந்தும், அவர்கள் அதனை செலவு செய்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.