மர்ம உறுப்பு சிதைக்கப்பட நிலையில் இறந்து கிடந்த இளைஞர்!
01 Aug,2019
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இளைஞர் அடித்துக் கொல்லப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன். இவர் சத்தியமங்கலத்தில் உள்ள அம்மன் மோட்டார்ஸ் என்ற லாரி பணிமனையில் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார்.
இவர் இரவில் வீட்டிற்கு செல்லாமல் பணிமனையிலேயே தங்குவது வழக்கம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை பணிமனை அருகே சாலையில் ஜெகதீஸ்வரன் மர்ம உறுப்பு சிதைக்கப்பட நிலையில் இறந்து கிடந்தார்.
தகவலறிந்து வந்த ஜெகதீஸ்வரனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரது உடலைக் கண்டு கதறி அழுதனர். இந்நிலையில் வெகு நேரமாக காவல்துறையினர் வரவில்லை என்று கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அங்கு வந்த போலீசார் மோப்பநாய் பிரிவு மற்றும் தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர்.
மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் ஜெகதீஸ்வரன் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில் பணிமனை உரிமையாளர் நடராஜ், காவலாளி சின்னத்தம்பி ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.