ஆட்டுவெட்டியகத்தியால் கொல்லப்பட்ட வியாபாரி!
01 Aug,2019
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் ஆட்டு வியாபாரி ஒருவர் இறைச்சி அறுக்கும் கத்தியால்
வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உசிலம்பட்டி அருகே பெருமாள்கோவில்பட்டியைச் சேர்ந்தவர் முனியாண்டி. உசிலம்பட்டியில் ஆட்டு வியாபாரம் செய்து வரும் இவருக்கும், அவரது உறவினரான ஆசை என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கலில் முன்விரோதம் உண்டானதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் உசிலம்பட்டி நகராட்சி அலுவலகம் அருகே உள்ள இறைச்சி கடையில் இறைச்சி வாங்குவதற்காக முனியாண்டி நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த ஆசை, பணத்தைக் கேட்டுத் தகராறில் ஈடுபட்டதாகச் சொல்லப்படுகிறது. அப்போது ஆத்திரம் அடைந்த அவர் இறைச்சி வெட்டும் கத்தியை பிடுங்கி, முனியாண்டியை கழுத்து மற்றும் கை கால்களில் சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து முனியாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், ஆசையைக் கைது செய்தனர். முனியாண்டியின் உடலைக் கைப்பற்றி பிதேர பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.