உளுந்து வடையை தினமும் சாப்பிட்டால் –
30 Jul,2019
காலையிலிருந்து மாலை வரை வேலை செய்து வருபவர்களுக்கு உடலிலும் மனத்திலும் ஒரு வித மிகுந்த சோர்வு உண்டாகும். அந்த சோர்வில் இருந்து மீளவே மாலை வேளைகளில் நமது உடலுக்கு ஊட்டத்தையும் ஆற்றலையும் தருகிற சிற்றுண்டியை உண்ணும் பழக்கம் நம்மிடையே ஏற்பட்டது. அவ்வாறு உணணும் சிற்றுண்டிகளில் மிகவும் சிறந்த ஒன்றாக ஆயுர்வேத மருத்துவர்கள் சொல்வது மெது வடை எனும் உளுந்து வடையே ஆகும்.
வாய்ப்புண், வயிற்றுப்புண், இடுப்புவலி, எலும்புத் தேய்மானம் உள்ளவர்கள் இந்த மெது வடை எனும் உளுந்து வடையைத் தினமும் மாலை வேளையில் இரண்டு வடைகளை சாப்பிட்டு வந்தால் போதும். மேற்சொன்ன நோய்கள் யாவும் பறந்து போகும். மேலும் அதீத உடலுழைப்பில் ஈடுபடுபவர்களும், மார்க்கெட்டிங், சேல்ஸ் மேன் போனற அலைச்சல் அதிகமுள்ள பணிகளை மேற்கொள்பவர் களுக்கும் இந்த உளுந்து வடை ஒரு மா மருந்தாகவே கருதப் படுகிறது.
(( கடைகளில் விற்கப்படும் மெது வடை எனும் உளுந்து வடை, முற்றிலும் உடலுக்கு கேடு விளைவிக்கக் கூடியது, அபாயகரமானது காரணங்கள், தரமற்ற உளுந்து, தரமற்ற மூலப்பொருட்கள் எல்லாவற்றுக்கும் மேலாக பயன்படுததிய எண்ணெய்யிலேயே வடை சுடுவது போனறவையே ))
உங்கள் வீட்டு பெண்களிடம் செய்யச் சொல்லி, அல்லது நீங்களே கூட வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். கொஞ்சம் மிளகு, சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி உள்ளிட்டவற்றை வடைக்கான தரமான உளுந்து ஈர மாவில் சேர்த்துக் கலக்கிக் கொள்ள வேண்டும். அதன் பிறகு எரியும் அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் சுத்தமான எண்ணெய்யை ஊற்றி நன்றாக காய்ந்ததும் உளுந்து மாவை, கைகளால் வடையாக தடடி அதில் ஒரு ஓட்டையையும் போட்டு எண்ணெயில் போட்டால் மெது வடை எனும் உளுந்து வடை தயார்.
சரி இந்த உளுந்து வடை சாப்பிட்டால் என்னென்ன நோய்களுக்கு பகைவன் அதாவது யாரெல்லாம் சாப்பிட வேண்டும் என்பதை நீங்கள் தெரிந்து கொண்டீர்கள் அல்லவா! அதேபோல் இநத உளுந்து வடை, என்னென்ன நோய்களுககு நண்பன் அதாவது யாரெல்லாம் சாப்பிடக் கூடாது என்பதை கீழே காணலாம்.
மலச்சிக்கல், செரிமானப் பிரச்னை, மூக்கில் நீர் வடிதல், ஜலதோஷம், ஆஸ்துமா, வயிற்றுப் போக்கு, காய்ச்சல் இருப்பவர்கள், இந்த உளுந்து வடையை சாப்பிடவே கூடாது.