கணவனின் ஆணுறுப்பை துண்டித்து கழிவறைத்தொட்டியில் எறிந்த மனைவி
30 Jul,2019
தாய்வானைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது கணவனின் ஆணுறுப்பையும் விதைகளையும் கத்திரிக்கோலால் வெட்டித் துண்டித்துள்ளார்.
தனது கணவன் மற்றொரு பெண்ணுடன் முறையற்ற தொடர்பு வைத்திருந்ததால் அவரின் அந்தரங்க உறுப்புகளை இவ்வாறு துண்டித்தாராம்.
58 வயதான லீ சென் எனும் இப் பெண், துண்டிக்கப்பட்ட ஆணுப்புறுப்பு மற்றும்; விதைகள் மீது அசிட்டை ஊற்றி அவற்றை கழிவறைத் தொட்டியில் இட்டு, தண்ணீரை ஊற்றி அடித்துச் செல்ல வைத்தார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாய்வானின் ஹியுகோ எனும் நகரிலுள்ள மேற்படி பெண்ணின் வீட்டில் கடந்த புதன்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சென் லீயின் கணவர் உறங்கிக் கொண்டிருந்தபோது, அவரின் உறுப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரவு 8.50 மணியளவில் பொலிஸார் தகவல் கிடைத்து மேற்படி வீட்டுக்குச் சென்றதாகவும், குறித்த நபர் இரத்தம் வழிந்தோடிய நிலையில், தனது மனைவி மேலும் வன்முறைகளில் ஈடுபடலாம் எனும் அச்சத்தில் கழிவறையில் ஒழித்துக் கொண்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட நபர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். எனினும், துண்டிக்கப்பட்ட அவரின் அந்தரங்க உறுப்புகளை கண்டுபிடிக்கமுடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.