குழந்தைகள் பலியிடப்படுவதாக வதந்தி - 2 பெண்கள் உள்பட 8 பேர் அடித்து கொலை
24 Jul,2019
வங்காளதேசத்தில் குழந்தைகள் கடத்தப்பட்டு பலியிடப்படுவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியதால் 2 பெண்கள் உள்பட 8 பேர் அடித்து கொலை செய்யப்பட்டு உள்ளனர்.
வங்காளதேசத்தில் மெகா பாலம் கட்டுவதற்காக குழந்தைகள் கடத்தப்பட்டு பலியிடப்படுவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியதால் கோபம் அடைந்த பொதுமக்கள் 8 பேரை அடித்து கொலை செய்து உள்ளனர். இதில் 2 பெண்களும் அடங்குவர்.
இது தொடர்பாக போலீஸ் தலைமை அதிகாரி ஜாவித் பட்வாரி கூறியதாவது:-
இந்த எட்டு கொலைகளின் ஒவ்வொரு வழக்கையும் நாங்கள் ஆராய்ந்தோம். கும்பல்களால் கொல்லப்பட்டவர்கள் யாரும் குழந்தைக் கடத்தல்காரர்கள் அல்ல. வதந்திகள் தொடர்பாக மேலும் 30-க்கும் மேற்பட்டோர் தாக்கப்பட்டுள்ளனர்.
3 பில்லியன் டாலர் மேம்பால திட்டத்திற்கு பலி கொடுக்க குழந்தைகள் கடத்தப்படுவதாக பேஸ்புக்கில் பரவிய வதந்தியால் கோபமான கும்பல்களால் குறிவைக்கப்பட்டு தாக்கப்பட்டு உள்ளனர்.
வதந்திகளைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குறைந்தது 25 யூடியூப் சேனல்கள், 60 பேஸ்புக் பக்கங்கள் மற்றும் 10 வலைத்தளங்கள் மூடப்பட்டுள்ளது என்று கூறினார்.