சுழியோடிகளோடு பேசிய கணவாய் மீன்: நீருக்குள் நடந்த அதிசயம் -உண்மை
12 Jul,2019
அவுஸ்திரேலியக் கடல் ஒன்றில், கடல் வாழ் உயிரினங்களை வீடியோ பிடிக்க 4 பேர் கொண்ட குழு சென்றுள்ளது. இவர்கள் கடலின் அடியே வீடியோ எடுத்துக் கொண்டு இருந்தவேளை அங்கே வந்த கணவாய் மீன் ஒன்று. ஜேக் வில்டன் என்னும் படம்பிடிப்பாளர் பக்கம் சென்று, தனது உடலை பிரட்டிக் காட்டியுள்ளது. இது போன்ற மீன் இனங்கள் பொதுவாக மனிதர்களுக்கு அருகே வருவது இல்லை. அப்படி வந்தால் தனது கொடுக்கு வாலால் மனிதர்களை தாக்க தயங்குவதும் இல்லை.
இன் நிலையில் குறித்த மீன், மீண்டும் மீண்டும் ஜேக் வில்டனுக்கு அருகே வந்து தனது உடலை பிரட்டிக் காட்டி நீந்திச் செல்லவே. அந்த மீன் எதனையோ சொல்ல வருகிறது என்பதனை அவர் படு வேகமாக அறிந்துகொண்டார். பின்னர் மீண்டும் ஒரு முறை அந்த மீன் அருகே வரும் போது , உண்ணிப்பாக கவனித்துப் பார்த்தால். அதன் கண் அருகே பாரிய மீன் பிடி தூண்டில் ஒன்று குத்திக் கொண்டு இருந்துள்ளது. இது பல காலமாக இந்த மீனுக்கு உறுத்தலாக இருந்திருக்கும்.
இதனை களற்றி விடுமாறு கெஞ்சவே அந்த மீன் மனிதர்களை நோக்கி வந்துள்ளது. இதனை உனர்ந்துகொண்ட வில்டன் பல முறை முயற்ச்சி செய்து இறுதியாக மீனின் தோலில் குத்திக்கொண்டு இருந்த தூண்டில் ஊசியை களற்றிவிட்டார். கணவாய் மீன், அவருக்கு நன்றி சொல்லும் விதமான மீண்டும் ஒரு முறை அவருக்கு அருகே வந்து , அவரை தொட்டுச் சென்றுள்ளது.