தூரத்தில் பார்க்கும்போது, ஒரு பெண் தேவதை போன்று தெரிவார். அவரை அருகில் பார்க்கும்போது முகப்பருவும், பருவால் ஏற்பட்ட தழும்பும் பெரிய குறையாகத் தென்படும்.
அதனால், அந்தப் பெண்ணும் பெரும் அவஸ்தைப்படுவார் என்பதை சொல்லவே வேண்டியதில்லை.
முக அழகைக் கெடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பது இந்த முகப்பருவால் ஏற்படும் தழும்புதான். இதையடுத்தே எண்ணெய் வழிதல், கருவளையம் போன்றவை இருக்கும்.
பலருக்கும் பருவ காலத்தில் முகப்பரு ஏற்படுவது சகஜம்தான். பெரும்பாலானவர்களுக்கு அது தானாகவே சரியாகிவிடும். கிள்ளிவிடுதல், தவறான மருந்து போடுதல் காரணமாக ஒருசிலருக்கு பரு இருந்த இடத்தில் தழும்புகள் நின்றுவிடும்.
பொதுவாகவே முகப்பருத்தழும்புகளை போக்குவது மிகவும் சிரமமான ஒன்று. முகப்பருத்தழும்புகளால் பலருக்குத் தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது. குறிப்பாக வேலைக்குப் போகும் இடத்தில், இது போன்ற முகப்பரு தழும்புள்ளவர்கள் பலர் மனம் சங்கடப்படுவர்.
இப்போது இதனை மருத்துவம் கையில் எடுத்துள்ளது. ஆம், பல்வேறு மருத்துவமனைகளில் முகப்பருத்தழும்புகள் நீக்கும் சிகிச்சை நடந்து வருகிறது. குறிப்பாக லேசர் மற்றும். மைக்ரோ டெர்பாபரேட்டர் சிகிச்சைகளின் மூலம் 80 முதல் 90 சதம் வரை தழும்புகள், முகச் சுருக்கங்கள் சரிசெய்துவிட முடிகிறது.
ஸ்கின் ரெஜிவுனேஷன் (Skin Rejuvenation) எனப்படும் முகம்பொலிவு சிகிச்சையால் முகப்பருக்கள் குறைக்கப்படுகிறது. பெரும்பாலான நடிகர், நடிகைகள் இப்படித்தான் தங்கள் அழகை காப்பாற்றுகிறார்கள். அதனால் பருவினால் ஏற்படும் தழும்புகளைக் குறைக்க கண்ட கண்ட மருந்துகளை நம்பிக்கொண்டிருக்காமல், மருத்துவரை நாடுங்கள், அழகை பெறுங்கள்.
முகப்பரு வராமல் இருக்க என்ன செய்யவேண்டும் தெரியுமா? இதோ வெரி சிம்பிள் ஸ்டெப்ஸ்
பெண்களின் அழகுக்கு அச்சுறுத்தலாகத் தோன்றுவது முகப்பருக்கள்தான்.
அதனால் காலையில் எழுந்ததும் கண்ணாடியைப் பார்க்கும்
பெண்ணுக்கு முகத்தில் பரு ஏதாவது இருந்தால் அம்புட்டுத்தான், அன்று முழுவதும் பருவைப் போக்க என்ன செய்யலாம் என்றுதான் மனம் சிந்திக்கும், என்னென்னவோ செய்வார்கள்.
பெண்ணுக்கு முகத்தில் பரு ஏதாவது இருந்தால் அம்புட்டுத்தான், அன்று முழுவதும் பருவைப் போக்க என்ன செய்யலாம் என்றுதான் மனம் சிந்திக்கும், என்னென்னவோ செய்வார்கள்.
முகப்பரு வந்த பின்பு சிகிச்சையைத் தேடுவதைவிட, வருவதற்கு முன்பே அதை தடுப்பதே நல்லது. ஆம், முகப்பரு வராமல் இருக்க வேண்டும் என்றால் மலச்சிக்கல் வராத அளவுக்கு வயிற்றைப் பராமரிக்க வேண்டும். அதாவது உணவு நன்கு ஜீரணமாகி வெளியேற வேண்டும்.
அதே போன்று தலையில் பொடுகுத் தொல்லை இருக்கவே கூடாது. மேலும், ஹார்மோன் பிரச்சினை, நகத்தினை வளர்த்தல், முறையற்ற உணவுப் பழக்கம், உணவில் அதிக எண்ணெய் பயன்படுத்துதல் போன்ற அனைத்தையும் தடுக்க வேண்டும்.
வீட்டில் தலையணை உரை, சோப், டவல் போன்றவைகளை தனித்தனியாக தங்களுக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முகப்பரு இருக்கும் ஒருவர் பயன்படுத்தும் இத்தகைய பொருட்களை இன்னொருவர் பயன்படுத்தும் போது அவருக்கும் இது பரவக்கூடும். குளிப்பதற்கும் சுத்தமான தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும்.
முகப்பருக்கள் வராமல் தடுப்பதற்கு உணவுக்கட்டுப்பாடு மிகவும் அவசியம். எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய மென்மையான உணவுகளை உண்ண வேண்டும். பழங்கள், காய்கறிகள், கீரை வகைகளை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். தண்ணீர் நிறைய பருக வேண்டும். முகத்தில் எண்ணெய் வழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பொடுகுத் தொல்லைக்கு முறையான சிகிச்சை எடுத்து அதனைக் கட்டுப்படுத்த வேண்டும். அவ்வப்போது வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவி சுத்தப்படுத்திவந்தால் பொடுகுத் தொல்லையில் இருந்து தப்பிக்கலாம்.