பிரித்தானிய விமான நிலையத்திற்குள் கத்தியுடன் நுழைந்த நபரால் பரபரப்பு
06 Jun,2019
பிரித்தானிய விமான நிலையத்தில், அனைவரையும் கொல்லப் போவதாக கத்தியுடன் நுழைந்த நபரினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இச் சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. 30 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
இந்த சம்பவத்தை அடுத்து விமான நிலையத்தில் இருந்து பயணிகள் வெளியேற்றப்பட்டதுடன், பொலிஸார் குறித்த நபரையும் கைது செய்துள்ளனர்.
அத்துடன் பஸ் பயணி ஒருவர், விமான நிலையம் நோக்கி சென்ற ஒரு மனிதரை சந்தித்ததாகவும், அவர், விமான நிலையத்தில் ஒரு படுகொலையை நிகழ்த்தப்போகிறேன், எல்லோரையும் கொல்லப்போகிறேன் என்று கூறியதாகவும் அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இச் சம்பவம் குறித்து அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வரு கின்றமை குறிப்பிடத்தக்கது.